*உயிர் காக்கும் சித்த மருந்துகள் 🔱🔥❤️😌🙏🏽* ----------------------------------------------------------------- *கட்டுரை எண் : 59* *அசாதாரண சூழல் நிலவும் இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் ஒவ்வொருவரின் இல்லத்தில் இருக்க வேண்டிய எளிய சித்த மருந்துகள் இதோ* *இம்மருந்துகளை எந்த எந்த பிரச்சனைகளுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என எனது ஆசான்களின் வழிகாட்டுதல் படி சொல்கிறேன்* *இந்த சித்த மருந்துகள் உங்கள் உயிர் காக்கும்* *தமிழகத்தின் அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்* *ஆடாதோடை மனப்பாகு 🔱* *சுவாசமிர்தம் 🔱* *திரிகடுகு சூரணம் 🔱* *ஏலாதி சூரணம் 🔱* *அதிமதுரம் பொடி 🔱* *பனங்கற்கண்டு 🔱* *மகாசுதர்ஷன மாத்திரை 🔱* *கபசுரக் குடிநீர் சூரணம் 🔱* *நிலவேம்பு குடிநீர் சூரணம் 🔱* *அஸ்வகந்தா சூரணம் 🔱* *தாளிச்சாதி சூரணம் 🔱* *பால சஞ்சீவி குளிகை 🔱* *மஹா சுதர்சன மாத்திரை 🔱* *பரமானந்தா பைரவம் மாத்திரை 🔱* *தேன் 🔱* *கடுக்காய் பொடி 🔱* *கிராம்பு 🔱* *நிலாவாரை சூரணம் 🔱* *புதினா உப்பு 🔱* *ஒமம் உப்பு 🔱* *கட்டி கற்பூரம் 🔱* *பச்சை கற்பூரம் 🔱* *சோடா உப்பு 🔱* *ஓமம் 🔱* *வசம்பு 🔱* *சுக்கு 🔱* *மிளகு 🔱* *திப்பிலி 🔱* *கோரைக்கிழங்கு 🔱* *இலவங்கப்பட்டை 🔱* *இலவங்க இலை 🔱* *நெல்லி வற்றல் 🔱* *ஏலரிசி 🔱* *சீரகம் 🔱* *பூண்டு 🔱* *பொட்டுக்கல்லை 🔱* *இஞ்சி 🔱* *எலுமிச்சை 🔱* *மஞ்சள் தூள் 🔱* *கல் உப்பு 🔱* *சித்தரத்தை 🔱* *கடுக்காய் தோல் 🔱* *நாட்டு சர்க்கரை 🔱* *தேங்காய் 🔱* *இதில் உள்ள சூரணங்கள், மாத்திரைகள், பொடிகள், மணப்பாகு* *குறைந்தபட்சம் எவ்வளவு கொடுப்பார்களோ அதை பெற்றுக்கொள்ளுங்கள்* *மற்றவைகள் எவ்வளவு பெறனும் என்று பயன்பாட்டில் கீழே குறிப்பிட்டு உள்ளேன்* *சளி 🔱* -------------- *ஆடாதோடை மணப்பாகு 10 ml* *1/2 டம்ளார் வெந்நீரில்* *3 வேளை சா.முன் எடுக்கவும்.* *அல்சர் மூலம் உள்ளவர்கள் சா.பின் எடுக்கலாம்* *குறிப்பு : சளி விரைந்து வெளியேறி குணமாக* *செரிமானமாக எளிய உணவு மட்டும் அரை வயிறு எடுங்கள்* *சிட்ரஸ் பழங்கள் அதிகம் எடுங்கள்* *சளி கரைந்து வெளியேறும்* *இருமல் 🔱* --------------------- *திரிகடுகு சூரணம்* *ஏலாதி சூரணம்* *அதிமதுரம் பொடி* *இவை மூன்றையும் தனித்தனியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மருந்து 1/2 டீ ஸ்பூன் அளவு தேன் கலந்து எடுத்து வந்தால் ஒரே நாளில் இருமல் சரியாகும்* *சுவாசக்கோளாறு 🔱* --------------------------------------- *சுவாசமிர்தம் 10 ml* *1/2 டம்ளார் வெந்நீரில்* *சா.மூன் 3 வேளை* *எடுத்தால் சுவாசம் சீராகும்* *அதிகம் பிரச்சனை இருந்தால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கூட எடுக்கலாம்* *உடலின் Oxygen அளவை அதிகரிக்க 🔱* -------------------------------------------------------------------- *ஒரு டம்ளார் தேங்காய் பாலில்* *1 டீ ஸ்பூன் கடுக்காய் பொடி கலந்து எடுங்கள்* *மற்றும்* *கிராம்பு பொடி 1/4 டீ ஸ்பூன்* *ஒரு டம்ளார் தேங்காய் பாலில் எடுங்கள்* *2 மணி நேரத்திற்கு ஒரு முறை கடுக்காய் பொடி மற்றும் கிராம்பு பொடி மாற்றி மாற்றி எடுத்து வந்தால் ஒரே நாளில் உடலின் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்* *தேங்காய் பால் ஜீரணமாகாதவர்கள்* *தேங்காய் பாலில் சிறிது தண்ணீர் மற்றும் இஞ்சி சாறு கலந்து மேல் கூறியது போல் பயன்படுத்துங்கள்* *வாந்தி மற்றும் பேதி 🔱* -------------------------------------------- *வசம்பை சுட்டு கரியாக்கி* *1/4 டீ ஸ்பூன் இந்த வசம்பு கரியில் தேன் கலந்து சப்பி சுவைத்து சாப்பிட்டால்* *வாந்தி பேதி நிற்கும்* *உடல் அதீத சோர்வு 🔱* ------------------------------------------ *ஒரு டம்ளர் வெந்நீரில்* *சிறிது தேன் மற்றும் 2 கல் உப்பு கலந்து குடித்தால் உடனடியாக சோர்வு நீங்கும்* *மற்றும்* *வெந்நீரில் எலுமிச்சை சாறு + கல் உப்பு கலந்து வாயில் சிறிது நேரம் வைத்திருந்து துப்பினால் உடல் சோர்வு நீங்கும்* *மயக்கம் 🔱* --------------------- *இரண்டு கை மற்றும் இரண்டு கால்களின் விரல் நுனிகளை 21 முறை அழுத்தி விட்டால் மயக்கம் தெளியும்* *மற்றும்* *வெந்நீரை காதை சுற்றி முழுவதும் துடைக்கலாம்* *உடல் கை கால் வலி அசதி சோர்வு பலவீனம் 🔱* ----------------------------------------------------------------- *அஸ்வகந்தா சூரணம்* *ஒரு ஸ்பூன் நாட்டு பசும்பாலில் கலந்து* *3 வேளை சா.பின்* *எடுத்தால் சரியாகும்* *நாட்டு பசும்பால் கிடைக்காவிட்டால்* *வெந்நீரில் கூட எடுக்கலாம்* *மலச்சிக்கல் 🔱* ----------------------------- *இரவு சா.பின் நிலாவாரை சூரணம் 1 டீ ஸ்பூன் ஒரு டம்ளர் வெந்நீரில் எடுத்து வந்தால் சரியாகும்* *தொடர்ந்து எடுக்கலாம்* *சரியான பின் விட்டுவிடலாம்* *பெரியவர்கள் 1 ஸ்பூன்* *சிறுவர்கள் 1/4 முதல் 1/2 டீ ஸ்பூன் அளவு எடுக்கலாம்* *மலம் மற்றும் சிறுநீர் நன்றாக வெளியேறினாலே சளி மற்றும் மூச்சுத்திணறல் சரியாகும்* *தீவிர மூச்சுத்திணறல் 🔱* ----------------------------------------------- *நான் குறிப்பிட்ட உப்புகளை வைத்து இந்த சுவாச தைலத்தை நீங்களே உங்கள் இல்லத்திலேயே செய்துகொள்ளலாம்* *இத்தைலம் மூச்சுத்திணறலை உடனே சரி செய்யும்* *ஆவி பிடிக்க பயன்படுத்தலாம்* *இயற்கை இன்ஹேலர் ஆக பயன்படுத்தலாம்* *உள்ளே மருந்தாக கூட எடுக்கலாம்* *உங்கள் முக கவசத்தில் சிறிது தடவலாம்* *தேவையான பொருட்கள்* *புதினா உப்பு : 50 கிராம்* *ஒமம் உப்பு : 10 கிராம்* *கட்டி கற்பூரம் : 10 கிராம்* *பச்சை கற்பூரம் : 5 கிராம்* *சோடா உப்பு : 5 கிராம் (சமையல் சோடா)* *செய்முறை* *இவை அனைத்தையும் சிறிது இடித்து கண்ணாடி பாட்டலில் கலக்கி வைத்தால் தைலமாக மாறும்* *இதை ஆவி பிடிக்கும் போது நீங்கள் பயன்படுத்தும் இலைகளுடன் (துளசி, கற்பூரவள்ளி, நொச்சி) 3 சொட்டு விட்டு ஆவி பிடிக்கலாம், உடனே சுவாசம் சீராகும், சுவாசப்பாதையில் உள்ள infections கிருமி வைரஸ்கள் அழிக்கப்படுகிறது* *நெஞ்சு சளி இருந்தால் ஒரு சொட்டு 1/2 டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்கலாம் ஒரு வேளை மட்டும் சா.பின் ( ulcer, piles உள்ளவர்கள் மட்டும் எடுக்க வேண்டாம்)* *இயற்கை இன்ஹேலர் ☺️* *ஓமம் : 3 spoon* *பச்சை கற்பூரம் : 1 spoon* *இவை இரண்டையும் ஒரு துணியில் முடித்து வைக்கவும்* *இதில் 5 சொட்டு சுவாச தைலத்தை நனைத்து* *மூக்கின் வழியே முகர்ந்து வாய் வழியே விடவும் 10 முறை* *பிறகு வாய் வழியே இழுத்து மூக்கு வழியே விடவும் 10 முறை* *சுவாசம் சீராகும்* *மூச்சுத்திணறல் உடனே சரியாகும்* *சாதாரண காய்ச்சல் 🔱* ------------------------------------------- *மகாசுதர்சன மாத்திரை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை 2 மாத்திரை எடுத்து வரவும் (இரவு உறங்கும் போது தேவையில்லை)* *பீர்கன்காய் (முத்திய காய் வேண்டாம்) தோலுடன் நறுக்கியது + கல் உப்பு (தேவையான அளவு) தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து வடித்து எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் எடுக்கவும்.* *நிலவேம்பு காலை சா.பின் எடுக்கவும்* *கபசுரக்குடிநீர் இரவு சா.பின் எடுக்கவும்* *[ பெரியவர்கள் 60 ml / சிறுவர்கள் 30 ml ]* *இந்நான்கும் காய்ச்சலை ஒரு நாள் முதல் 3 நாட்களுக்குள் நிச்சயம் சரி செய்யும்* *பசித்தால் அரிசி கஞ்சி / ரசம் சாதம் எடுக்கலாம்* *இதில் வெறும் பீர்கன்காய் சாறு மட்டுமே எடுத்து கூட பலருக்கு காய்ச்சல் சரியாகி உள்ளது* *வயதானவர்கள் சளி அதிகம் உள்ளவர்கள் சாறு பிடிக்கவில்லை எனில் நீங்கள் பீர்கன்காயை சூப்பாக எடுக்கலாம் (சீரகம் மிளகு பூண்டு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கல் உப்பு கலந்து சூப்பாக எடுக்கலாம்)* *குறிப்பு : ஒரு வேளை, 3 நாள் பயன்படுத்தியும் காய்ச்சல் தொடர்ந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை உடனே சந்திக்கவும்* *கொரோனா Positive சரி செய்ய 🔱* --------------------------------------------------------------- *ஐமருந்து* *கேரள வைத்தியர் கசாயம்* *மற்றும்* *சாதாரண காய்ச்சலிற்கு சொன்னது* *ஐமருந்து* *1. அஸ்வகந்தா சூரணம் 🔱* *2. தாளிச்சாதி சூரணம் 🔱* *3. பால சஞ்சீவி குளிகை 🔱* *4. மஹா சுதர்சன மாத்திரை 🔱* *5. பரமானந்தா பைரவம் மாத்திரை 🔱* *இந்த ஐந்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்* *பெரியவர்களுக்கு 2 சிட்டிகை தேனுடன்* *சிறியவர்களுக்கு 1 சிட்டிகை தேனுடன்* *நன்றாக கலந்து நாக்கில் தேய்த்து சப்பி உமிழ்நீர்கலந்து சுவைத்து சாப்பிடவும்* *பாதிக்கப்பட்டவர்கள் 3 வேளை 3 நாட்கள் தொடர்ந்து எடுக்கலாம். மூச்சுத்திணறல் இருந்தால் 5 நாள் வரை எடுக்கலாம்* *உணவிற்கு பின் இந்த மருந்தை எடுக்கவும், மருந்து எடுத்த பின் ஒரு மணி நேரம் எதுவும் எடுக்க கூடாது.* *பத்தியம் - இனிப்புகள் கட்டாயம் தவிர்க்கவும்* *மற்றும்* *கேரள வைத்தியரின் கசாயம்* *இது கேரள வைத்தியரால் பகிரப்பட்டு பல வெளிநாட்டு அரசியல்வாதிகள் ஏழே நாட்களில் கொரோனா குணமாகி கேரள அரசே தன் மக்களுக்கு பரிந்துரை செய்த முறை இதோ 👇🏽* *தேவையான பொருட்கள் !* *சீரகம் - 1 டி ஸ்பூன்* *மிளகு - 10 எண்ணிக்கை* *பூண்டு - 5 பல்* *பொட்டுகல்லை - 3 ஸ்பூன்* *இஞ்சி - 1 இன்ச்* *எலுமிச்சை - 1/2 பழம் (தோலுடன் விதை நீங்கியது)* *லவங்க பட்டை - 1 இன்ச்* *மஞ்சள் தூள் - 1 சிட்டிகை* *கல் உப்பு - 1 ஸ்பூன்* *செய்முறை !* *இதில் உள்ள பொருட்களில் எதையுமே இடிக்கவோ பொடி செய்யவோ கூடாது. அனைத்து மூல பொருட்களையும் அப்படியே 5 டம்ளர் தண்ணீரில் போட்டு 3 டம்ளராக கொதிக்க வைத்து வடித்து இளம் சூடாக பெரியவர்கள் 1 டம்ளர் அளவும் சிறுவர்கள் 1/2 டம்ளர் அளவும் காலை மாலை என இரண்டு வேளை உணவிற்கு முன் பருகலாம். 3 வேளை பருகினாலும் நலமே.* *நமக்கு தெரியாமல் கொரோனா தொற்று இருந்தாலும் இந்த கசாயம் குணமாக்கிவிடும்.* *கொரோனா +ve ஐ 7 நாட்களில் நெகட்டிவ் ஆக்கிவிடும் இம்மருந்து* *குறிப்பு : சாதாரண காய்ச்சலிற்கு சொன்னதையும் சேர்த்து பின்பற்றவும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை உடனடியாக சந்திக்கவும்* *கொரோனா வராமல் தடுக்க 🔱* --------------------------------------------------------- *பலர் எங்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா, வீட்டருகே கொரோனா, எங்களுக்கு வராமல் நாங்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என கேட்டீர்கள்* *கொரோனா வராமல் காத்துக்கொள்ள* *சித்த மருத்துவர் வீரபாபு அவர்களின் மூலிகை தேனீர் எடுக்கலாம்* *சுக்கு - 100 கிராம்* *அதிமதுரம் - 100 கிராம்* *சித்தரத்தை - 30 கிராம்* *கடுக்காய் தோல் - 30 கிராம்* *மஞ்சள் - 10 கிராம்* *திப்பிலி - 5 கிராம்* *ஓமம் - 5 கிராம்* *கிராம்பு - 5 கிராம்* *மிளகு - 5 கிராம்* *கற்பூரவள்ளி இலை - 5 எண்ணிக்கை* *புதினா இலை - 10 எண்ணிக்கை* *நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி* *செய்முறை !* *இதில் நாட்டு சர்க்கரையை, கற்பூரவள்ளி இலை புதினா இலை தவிர மீது உள்ள அனைத்து மூலப்பொருட்களையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.* *10 கிராம் பொடியை 400 மிலி நீரில் போட்டு 100 மிலி நீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது அதில் கற்பூரவள்ளி இலை புதினா இலை போட்டு, இறக்குவதற்கு முன் நாட்டு சர்க்கரை கலந்து வடித்து இளம்சூடாக பெரியவர்கள் 100 மிலியும் சிறியவர்கள் 50 மிலி என இரண்டு வேளை காலை மாலை உணவிற்கு பின்பு அருந்தலாம்.* *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொடி 🔱* ------------------------------------------------------------------ *சுக்கு - 25 கிராம்* *மிளகு - 25 கிராம்* *திப்பிலி - 25 கிராம்* *கோரைக்கிழங்கு - 25 கிராம்* *இலவங்கப்பட்டை - 25 கிராம்* *இலவங்க இலை - 25 கிராம்* *நெல்லி வற்றல் - 25 கிராம்* *ஏலரிசி - 25 கிராம்* *பனங்கற்கண்டு - 350 கிராம்* *செய்முறை* *சுக்கு தோல் நீக்கவும், கோரைக்கிழங்கு அதன் வேர் குப்பைகளை சுத்தம் செய்து உரலில் ஒன்றிரண்டாக இடித்துக்கொள்ளவும்* *இந்த கலவையை ஒரு கிலோவிற்கு மேல் மிசினில் கொடுத்தால் அரைத்து கொடுப்பார்கள்* *இதை வீட்டில் மிக்சியில் அரைக்க முடியாது* *பயன்படுத்தும் முறை* *1/4 tea spoon பொடி* *200 ml தண்ணீரில் ஊற்றி* *100 ml ஆக கொதிக்க விடவும்* *பெரியவர்கள் ஒரு டம்ளர் அளவும்* *சிறுவர்கள் 1/2 டம்ளர் அளவும்* *தேனீர் போல் பருகலாம்* *தினம் 1 முதல் 3 வேளை வரை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்* *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் மற்றும் வாழ்க்கைமுறை 🔱* -------------------------------------------------------------------- *Calcium* *Vitamin D* *Vitamin C* *Iron* *சத்து உள்ள உணவுகளை எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *தினம் ஒரு மணி நேரம் சூரிய ஒளியில் நின்றால் Vitamin D அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *3 முதல் 6 மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்தால்* *ஆறு அருவி நீரில் குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *மழையில் நனைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *இரவு இருட்டு அறையில் 9 மணிக்கு உறங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பச்சை தண்ணீரில் குளித்து வெட்டவெளியில் வெறும் காலில் மண் தரையில் நடந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *மாதம் ஒரு மலை ஏற்றம் போய் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *வழிபாட்டு தலங்களுக்கு சென்றால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *உங்கள் மனதிற்கு பிடித்த விசயங்களை செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் பேசினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *அந்தந்த பருவத்தில் விளையும் காய்கனி பழங்கள் கீரைகள் பாரம்பரிய அரிசிகள் சிறுதானியங்கள் பருப்பு பயிறு கிழங்கு வகைகள் என சமச்சீர் உணவு எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *முக்கிய குறிப்பு* *அனைவரின் உடலும் ஒன்று கிடையாது* *அனைவரின் நோயின் தன்மை ஒன்று கிடையாது* *இங்கு நோய்க்கு வைத்தியம் இல்லை* *நோயாளிக்குத்தான் வைத்தியம்* *ஏற்கனவே பல்வேறு நோய்களுக்கு மருந்து எடுப்பவர்கள் உங்கள் வீட்டு அருகே உள்ள சித்த மருத்துவரின் பரிந்துரை பேரில் மட்டும் இக்கட்டுரையில் உள்ள மருந்துகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்* *மேலும்* *பெரும்பாலும் அனைத்து தரப்பு மக்களுக்கு பொருந்தும் வகையில் தான் இம்மருந்துகளை பரிந்துரை செய்துள்ளேன்* *குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இம்மருந்துகளை எடுக்கலாம்* *குறிப்பிட்ட அளவில் பாதி அளவு சிறுவர்களுக்கு கொடுக்கலாம்* *இந்த சித்த மருந்துகளை நாம் பயன்படுத்தினால்* *எத்தனை அலை கொரோனா வந்தாலும் நாம் அதை வெல்லலாம்* *சித்த மருந்துகளை பயன்படுத்துவோம்* *உயிர்களை காப்போம்* *இது* *அனைத்தும்* *உயிர்* *காக்கும்* *சித்த* *மருந்துகள்* *தமிழகத்தில்* *அனைவரின்* *இல்லத்தில்* *நிச்சயம்* *இருக்க வேண்டும்* *உலகின் உயர் மருத்துவமான* *நம் தாய் மருத்துவம் பின்பற்றி* *உயிர்களை காப்போம்* *நன்றி* Padiththa Idam: https://www.facebook.com/siddavaithiyam/posts/2803139029949354
ஜோதிட உலகத்தில் இருக்கும் கால புருஷனின் மிகவும் முக்கியமான பாவமாகிய "மேஷம்" என்ற பாவத்தைப் பற்றிய மிக முக்கியமான தகவல்கள். ★நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து மேஷம் என்ற பாவம் எத்தனையாவது பாவமாக வருகின்றதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்கள் என்றுமே நமக்கு பயன்படாது.அடுத்தவர்களுக்கு தான் அந்த பாவம் சார்ந்த விஷயங்கள் பயன்படும். ★ஒரு மனிதனால் மேஷம் என்ற பாவம் சார்ந்த விஷயங்களை எப்போதுமே அனுபவிக்க முடியாது. ★நமது ஜாதகத்தில் இருக்கும் 12 பாவங்களில் மேஷம் என்ற பாவம் சார்ந்த விஷயங்களை மட்டும் நம்மால் அனுபவிக்க முடியாது. அந்தப் பாவத்திலிருந்து நாம் எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது. ★மீறி அந்த பாவம் சார்ந்த உறவுகள் சார்ந்தும் அல்லது அந்தப் பாவம் சார்ந்த ஆதிபத்தியங்கள் சார்ந்தும் நாம் எதிர்பார்ப்பது வைத்துக் கொண்டால் நமக்கு பிரச்சனை தான் ஏற்படும். ★ஏன் மேஷம் பாவம் சார்ந்த விஷயங்கள் நமக்கு பயன்படாது என்றால் அது இந்த பிரபஞ்சத்தின் கால புருஷனின் முதல் பாவமாகும். அதுதான் கால புருஷனின் லக்னமாகும்.லக்னம் என்பது நம்மை குறிக்கும்.நம்மில் இருந்து அதாவது நமது லக்னத்தில் இருந்து மற்ற பதினோரு பாவங்களைத் தான் நம்மால் பயன்படுத்த முடியும். ★மற்ற பாவங்களை போல் லக்னத்திற்கு எந்த ஒரு ஆதிபத்தியங்களும் கிடையாது. அதாவது இரண்டாம் பாவம் என்பது வருமானம் வாக்கு ஸ்தானம் மூன்றாம் பாவம் என்பது இளைய சகோதரர்கள் நெருங்கின நண்பர்கள் நான்காம் பாவம் என்பது வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு,இதேபோல் மற்ற பாவங்களுக்கு ஆதிபத்தியங்கள் இருக்கின்றது ஆனால் மேஷம் என்ற பாவத்திற்கு எந்த ஒரு ஆதிபத்யமும் கிடையாது அதனால் தான் நம்மால் மேஷம் என்ற பாவம் சார்ந்த விஷயங்களை அனுபவிக்க முடியாது அனுபவிக்க நினைத்தாலும் அது நமக்கு கிடைக்காது. ★இப்பொழுது ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் மேஷம் பாவத்தை பொருத்தி அவர்களின் வாழ்நாளில் எது அவர்களுக்கு பயன்படாது என்பதையும் எதனை அனுபவிக்க முடியாது என்பதையும் ஒவ்வொரு லக்னமாக பார்க்கலாம். ★1.(மேஷ லக்னம்) ★மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவர்களின் வாழ்நாளில் என்றைக்குமே இவர்களின் அறிவு ,ஆற்றல், வேகம் உத்வேகம்,உழைப்பு, சிந்தனை எதுவுமே இவர்களுக்கு பயன்படாது அடுத்தவர்களுக்கு தான் பயன்படும். ★எவ்வளவுதான் அறிவும் ஆற்றலும் இவர்களுக்கு இருந்தாலும் அது என்றைக்குமே இவர்களுக்கும் இவர்களின் சுயநலத்திற்காகவும் அது என்றைக்குமே பயன்படாது. ★அடுத்தவர்களின் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். ★மேஷ லக்னக்காரர்களால் நிறைய பேர் அவர்களின் வாழ்க்கையில் முன்னேறி இருப்பார்கள் ஆனால் இவர்களிடம் இருந்து உதவிகளை மற்றவர்கள் பெற்றுக் கொண்டு கடைசியில் இவர்களை கழட்டி விட்டு விடுவார்கள். ★2.(ரிஷப லக்னம்) ★ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்றைக்குமே இவர்களால் சுகபோக வாழ்க்கை அயன, சயன,போகம் நிம்மதியான தூக்கம்,காமம் சார்ந்த விஷயங்கள் இது அனைத்தும் என்றைக்குமே இவர்களால் அனுபவிக்கவே முடியாது. ★இவர்களுக்கு என்றைக்குமே வெளிநாட்டு வாழ்க்கை ஒத்து வராது. வெளிநாடு சென்றார்கள் என்றால் எப்படி சென்றார்களோ அப்படித்தான் மறுபடியும் வருவார்களே தவிர முன்னேற்றம் என்பதே இவர்களுக்கு இருக்காது. ★ரிஷப லக்னக்காரர்கள் மேற்படிப்பு படிப்பதற்காகவும், வெளிநாட்டில் வேலை செய்வதற்காகவும் சென்றார்கள் என்றால் அந்த விஷயங்கள் இவர்களுக்கு பயன்படாமல் போய்விடும் படித்த மேற்படிப்பு அந்தப் பட்டம்(degree) இவர்களுக்கு பயன்படாது. ரிஷப லக்னக்காரர்கள் யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம். ★மருத்துவம் சார்ந்த விஷயங்கள் ரிஷப லக்னக்காரர்களுக்கு என்றைக்குமே பயன்படாது. இவர்கள் என்றைக்குமே மருத்துவமனையில் admit ஆகி சிகிச்சை பெறக் கூடாது. ஏனென்றால் அந்த சிகிச்சை இவர்களுக்கு பயன்படாமல் போய்விடும் பிறகு இவர்களுக்கு பிரச்சனைகள் தான் ஏற்படும். ★ரிஷப லக்னக்காரர்கள் என்றைக்குமே மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற வேண்டாம்.வெறும் மருத்துவரிடம் ஆலோசனை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். ★3.(மிதுன லக்னம்) ★மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்றைக்குமே இவர்களின் மூத்த சகோதரர் மூலமாகவும் சித்தப்பா மூலமாகவும் எந்த பயனும் இருக்காது எந்த ஆதாயமும் இருக்காது எந்த உதவியும் இருக்காது. ★மூத்த சகோதரர் மற்றும் சித்தப்பா இவர்களுக்கு என்னதான் இவர்கள் உதவி செய்தாலும் இவர்களுக்கு ஒரு உதவி வேண்டும் போது அவர்களால் இவர்களுக்கு உதவ முடியாது. ★4.(கடக லக்னம்) ★கடக லக்னத்தில் பிறந்தவர்கள் என்றைக்குமே இவர்களால் தொழில் மூலம் வரும் வருமானத்தை இவர்களுக்காக இவர்களின் சுய நலத்திற்காக அந்தப் பணத்தை அனுபவிக்கவே முடியாது அடுத்தவர்களுக்கு தான் அந்த பணம் பயன்படும். ★தொழிலை இவர்கள் என்றைக்குமே இவர்களின் பெயரில் ஆரம்பிக்கக்கூடாது இவரின் பெயரில் தொழில் செய்தார்கள் என்றால் நஷ்டத்தில் தான் போய் முடியும். ★கடக லக்னக்காரர்கள் என்றைக்குமே அடுத்தவர்களின் தொழிலை பார்த்துக்கொள்ளும் வேலை தான் இவர்களுக்கு ஒத்து வரும். ★5.(சிம்ம லக்னம்) ★சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை, தந்தை வழி குடும்பம், தந்தை வழி சொத்து, தந்தைவழி உறவினர்கள் மூலமாக எந்தப் பயனும் இருக்காது எந்த ஆதாயமும் இருக்காது எந்த உதவியும் இருக்காது. ★தந்தை மூலம் கிடைக்கக்கூடிய உதவிகள் பயன்கள் இவர்களுக்கு இருக்கவே இருக்காது. ★சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஒத்துவராது இவர்கள் வெளிநாடு சென்றார்கள் என்றால் எத்தனை வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்தாலும் இவர்களுக்கு முன்னேற்றம் என்பதே இருக்காது. எந்த நிலையில் வெளிநாடு சென்றார்களோ அதே நிலையில் தான் இவர்கள் வீடு திரும்புவார்கள் முன்னேற்றமே இருக்காது ★6.(கன்னி லக்னம்) ★கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு PF pension, Life Insurance ,retirement Life Insurance, Health Insurance இவற்றின் மூலம் இவர்கள் சேமிக்கும் பணத்தை இவர்களால் அனுபவிக்கவே முடியாது. ★ அதாவது இவர்களுக்காக இவர்களின் சுய நலத்திற்காக அந்த பணத்தை இவர்களால் அனுபவிக்கவே முடியாது அடுத்தவர்களுக்கு தான் அந்த பணம் பயன்படும். ★கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் PF pension, Life Insurance ,retirement Life Insurance, Health Insurance இது சார்ந்த விஷயங்களில் இவர்கள் என்றைக்குமே முதலீடு செய்யக்கூடாது செய்தார்கள் என்றால் இவர்களுக்கு அந்த பணம் பயன்படாது. ★7.(துலாம் லக்னம்) ★துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மனைவி மற்றும் மனைவியின் குடும்ப உறவினர்கள் மூலமாக எந்தப் பயனும் இருக்காது எந்த ஆதாயமும் இருக்காது எந்த உதவியும் இருக்காது. ★இவர்கள் மனைவியிடமும் மனைவியின் குடும்ப உறவினர்களிடமும் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ள கூடாது மீறி வைத்துக் கொண்டார்கள் என்றால் இவர்கள் நினைப்பது அவர்களிடமிருந்து வராது. ★இதே பெண்ணாக இருந்தால் கணவன் குடும்பம் மூலமாக இது போன்று இருக்கும். ★துலாம் லக்னக்காரர்கள் என்றைக்குமே இவர்கள் வாழ்நாளில் கூட்டுத் தொழில்(partnership business) செய்யவே கூடாது மீறி செய்தார்கள் என்றால் நஷ்டத்தில் தான் போய் முடியும். ★8.(விருச்சிக லக்னம்) ★விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் என்றைக்குமே இவர்களின் வாழ்நாளில் கடன் வாங்கவே கூடாது கடன் வாங்கினார்கள் என்றால் அந்த கடனை அடைப்பதற்கு இவர்கள் படாதபாடுபட்டு விடுவார்கள் அல்லது அந்த கடனை அடைக்கவே முடியாமல் போய்விடும். ★அதேபோன்று கடன் இவர்கள் யாருக்கும் கொடுக்கவும் கூடாது மீறி கொடுத்தார்கள் என்றால் அந்தக் கடன் இவர்களுக்கு திரும்ப வராது. விருச்சிக லக்னகாரர்கள் கடன் வாங்குவதும் கொடுப்பதும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ★வம்பு வழக்கு அடிதடி சண்டை போன்ற விஷயங்களில் இவர்கள் என்றைக்குமே சமாதானமாகப் போய் விடவேண்டும் .ஏனென்றால் கோர்ட் கேஸ் இவற்றில் இவர்கள் செல்லும்போது என்றைக்குமே தீர்ப்பு இவர்களுக்கு சாதகமாக வரவே வராது. ★மேலும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு உத்தியோகம் ஒத்து(set) வராது.ஏனென்றால் உத்தியோகத்தில் மூலம் இவர்கள் சம்பாதிக்கும் வருமானம் என்றைக்குமே இவர்களுக்கு பயன்படாது அடுத்தவர்களுக்கு தான் பயன்படும். ★9.(தனுசு லக்னம்) ★ தனுசு லக்னகாரர்களுக்கு தங்களுடைய தாத்தா சொத்தை அனுபவிக்கும் கொடுப்பினை இவர்களுக்குக் கிடையாது மேலும் தன்னுடைய மூத்த குழந்தையிடம் இருந்து எந்த எதிர்பார்ப்பும் இவர்கள் வைத்துக்கொள்ள வேண்டாம். ★அதாவது பூர்வீக சொத்தை அனுபவிக்கும் கொடுப்பினை தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கிடையாது மேலும் இவர்கள் தன்னுடைய மூத்த குழந்தையிடம் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாமல் இருக்கும் வரை இவர்களின் உறவு நன்றாக இருக்கும். ★share market, stock market ,trading இது சார்ந்த விஷயங்களில் தனுசு லக்ன காரர்கள் என்றைக்குமே முதலீடு செய்யவே கூடாது மீறி செய்தார்கள் என்றால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ★10.(மகர லக்னம்) ★ மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் தங்களுடைய தாய் தாய்வழி உறவுகள் தாய் வழி குடும்பத்தினர் இவர்களின் மூலம் இவர்களுக்கு எந்த பயனும் கிடையாது எந்த உதவியும் இவர்களுக்கு கிடையாது. ★மகர ராசி மகர லக்னத்தில் பிறந்தவர்கள் எல்லாம் தாய் தாய்வழி உறவினர்களை சார்ந்து இவர்கள் இருக்க வேண்டாம்.இவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தாய் தாய்வழி உறவுகள் மூலம் இவர்களுக்கு எந்த உதவியும் வராது. ★மேலும் இவர்களுக்கு வீடு, வண்டி வாகனம், சொத்து, property, தாய்வழி சொத்து இவற்றை அனுபவிக்கும் கொடுப்பினை மகர ராசி மகர லக்னகாரர்களுக்கு கிடையவே கிடையாது. ★மகர ராசி மகர லக்ன காரர்கள் என்றைக்குமே வீடு வண்டி வாகனம் சொத்து property இவை அனைத்தும் இவர்களின் பெயரில் என்றைக்குமே வாங்கவே கூடாது மீறி வாங்கினால் அந்த சொத்தை இவர்களால் அனுபவிக்க முடியாது. ★இவர்கள் பெயரில் சொத்து இருந்து அதனை விற்றாலும் அந்த பணத்தை இவர்களின் தேவைக்காக இவர்களின் சுய நலத்திற்காக அனுபவிக்க முடியாமல் போய்விடும். மேலும் தேவையில்லாத பிரச்சினைகளில் ஏற்பட்டுவிடும். ★வீடு,சொத்து இவர்கள் பெயரில் இருக்கக்கூடாது மேலும் இவர்கள் பெயரில் வாங்கவும் கூடாது. ★11.(கும்ப லக்னம்) ★கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மாமனார் மூலமாக எந்த பயனும் இருக்காது எந்த உதவியும் இருக்காது எந்த ஆதாயமும் இருக்காது. ★மேலும் இவர்கள் இளைய சகோதரர்கள் நெருங்கிய நண்பர்கள் இவர்களிடமிருந்து எந்த ஒரு ஆதாயமும் எதிர்பார்க்கக்கூடாது ஏதாவது எதிர் பார்த்தார்கள் என்றால் அது இவர்களுக்கு வராது. ★12.(மீன லக்னம்) ★மீன லக்னத்தில் பிறந்தவர்கள் என்றைக்குமே இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை இவர்களுக்காக அனுபவிக்க முடியாது. .★அதாவது இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை தனக்காக என்றைக்குமே அனுபவிக்கவே முடியாது. ★இவர்களுக்கு என்று எதுவும் அனுபவித்திருக்க மாட்டார்கள். ★ஒன்று குடும்பத்திற்காகவோ உறவினர்களுக்காகவோ அல்லது நண்பர்களுக்கோ அந்தப் பணத்தை செலவு செய்து விடுவார்கள். ★இவர்கள் கையில் பணம் வந்தால் அந்த பணத்திற்கு வேட்டு வைக்க ஒரு விஷயம் காத்துக் கொண்டிருக்கும். ★வாழ்நாள் முழுவதும் இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. ★(மேற்கொண்ட இந்த சூட்சுமத்தை ஜாதகத்தில் Check செய்து பாருங்கள் நான் சொல்வது உங்களுக்குப் புரியும்) ★மேஷம் என்ற பாவத்தில் கிரகங்கள் இருந்தால் என்ன ஆகும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம். ★ஜோதிடம் சார்ந்த ஏதாவது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் மற்றும் ஜாதகம் பார்க்க ஜாதகம் எழுத என்னை தொடர்பு கொள்ளவும். ★Call me My mobile number and WhatsApp number is 8610232640. my name is s.selvakumar. (Vedic astrologer, Numerologer and DNA astrologer).