Followers

Powered by Blogger.
Posted by ss Friday, September 19, 2014 0 comments


| edit post

தீபப் பயிற்சி-பதிவு - 1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
உலகின் பல்வேறு இடங்களில் தீபப் பயிற்சி தவத்தின் ஆரம்ப நிலை பயிற்சியாக இன்றும் செய்யப் பட்டு வருகிறது .தீபப் பயிற்சி விளக்கு பயிற்சி என்றும் அழைக்கப் படுகிறது.
தீபப் பயிற்சி எண்ணெய் ஊற்றப் பட்ட விளக்கு வைத்தோ ,ஏற்றி வைக்கப் பட்ட மெழுகுவர்த்தி வைத்தோ தீபப் பயிற்சி செய்யப் படுகிறது.
தீபப் பயிற்சி உடலிலுள்ள ஜீவகாந்தத்தை பெருக்கும் பயிற்சியாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டு வருகிறது.
ஆனால் ,தீபப்பயிற்சி மூலம் பல்வேறு சக்திகளைப் பெறமுடியும் என்பதையும்,  தீபப் பயிற்சி மூலம் பெற்ற சக்திகளை எளிதாக சோதனை செய்தும் பார்க்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தீபப் பயிற்சி செய்வதால் உண்டாகும் பலன்கள்:
1 ஜீவகாந்த சக்தி பெருகுகிறது.
2 ஆன்மா விரிவடையும் தன்மையைப் பெறுகிறது.
3 ஸ்துhல உடலிலிருந்து சூட்சும உடல் தனியாகப் பிரியும் தன்மையைப் பெறுகிறது.
4 சூட்சும உடல் ஆன்ம ஒளியைப் பெறுகிறது.
5 சூட்சும உடல் தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது.
தீபப் பயிற்சி செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
1 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் செய்ய வேண்டும்.
2 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்.
3 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் கண்டிப்பாக செய்யக் கூடாது.
4 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யும் பொழுது தீய ஆவிகளின் தொற்றுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் தீபப் பயிற்சியை செய்ய வேண்டும்.  அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யக் கூடாது.
5 தீபப் பயிற்சி செய்வதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.
6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் உடல் கட்டு மந்திரம் ,திக்கு கட்டு மந்திரம் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்   .
தீபப் பயிற்சி செய்வதற்கு தேவைப்படுபவை:
1 அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.
2 சாதாரண விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.
3 விளக்கில் எண்ணெய் வகைகளாக நெய், விளக்கு எண்ணெய் ,கடலை எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
4 மண்ணெண்ணெய் நிரப்பப் பட்ட விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.
5 மெழுகுவர்த்தியை பயன்படுத்த வேண்டாம் .
தீபப் பயிற்சியில் இரண்டு நிலைகள் உள்ளன:
முதல் நிலை -1
a ) தீபப் பயிற்சியில் ஆரம்ப நிலையில்   உள்ளவர்கள் செய்யவேண்டியது
1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து மூன்று நிமிடம் வரை தொடர்ந்து பார்க்க வேண்டும்.
5 பிறகு கண்களை மூடி  உள்ளே பார்க்க வேண்டும்.
6 மேலே கண்ட செயல்முறையைப் போலவே தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.
b ) தீபப் பயிற்சியில் வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டியது
1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 தீபத்தை தொடர்ந்து 15 நிமிடங்கள் (அல்லது) 20 நிமிடங்கள் வரை பார்க்க வேண்டும்.
5 தீபத்தில் பல்வேறு நிறங்கள் தெரிவதைப் பார்க்க முடியும்.
6 பச்சை, சிகப்பு என்று பல்வேறு பட்ட நிறங்களை தீபப் பயிற்சியில் நாம் வளர்ச்சி அடையும் பொழுது நாம் காணக் கூடிய நிறங்களாகும்.
தீபப் பயிற்சியின் முதல்நிலையில் பல்வேறு வகையான நிறங்கள் தெரிந்த பிறகு அடுத்து அடுத்து தீபத்தில் தெரியும் விஷயங்கள் தீபப் பயிற்சியில் சூட்சும ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                 போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”
 
                                       தீபப் பயிற்சி-பதிவு - 2
“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இரண்டாம் நிலை - 2
தீபப் பயிற்சியில் முதல் நிலை முடித்தவர்கள் ,இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை செய்யலாம்.
இங்கே நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் .முதல் நிலை முடித்தவர்கள் இரண்டாம் நிலை ஆரம்பித்து விட்டால் ,முதல் நிலை பயிற்சியான எண்ணெய் ஊற்றிய விளக்கைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை.
இரண்டாம் நிலையில் என்ன பயிற்சியை செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறதோ ,அந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் போதும்.
இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை செய்வதற்கு நமக்கு தேவைப்படுபவை : 
1 ஒரு சிறிய நைட் பல்பு (இரவில் உறங்கும் பொழுது பயன் படுத்தும் பல்பு)
2 அந்த நைட் பல்பு ஜீரோ வாட்ஸ் பல்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நைட் பல்பை எரிய வைத்தால் முழுவதும் மஞ்சள் நிறமாக எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மஞ்சள் நிற நைட் பல்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
4 நைட் பல்பின் ஒளி நம் கண்களை கூசச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை கீழ்க்கண்டவாறு செய்ய வேண்டும் :
1 நாம் உட்காராமல் நேராக நின்று கொள்ள வேண்டும்.
2 நைட் பல்பு கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நைட் பல்பை எரிய வைத்து கண்களால் தொடர்ந்து பார்க்க வேண்டும்.
4 நைட் பல்பை தொடர்ந்து 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை பார்க்க வேண்டும்.
5 நைட் பல்பில் தெரியும் மஞ்சள் நிற ஒளி படிப்படியாக மாற்றம் அடைந்து பல்வேறு நிறங்கள் தெரிவதை பார்க்கலாம்.
6 முழுவதும் மஞ்சள் நிறமாக தெரியும் ஒளி படிப்படியாக சிகப்பு ,பச்சை என்று நைட் பல்பு முழுவதும் ஒளியின் நிறம் மாற்றம் அடைவதை நாம் பார்க்கலாம்.
7 நிறம் மாற்றம் அடைந்த பிறகு கிடைக்கும் பலன்கள் தான் சூட்சும ரகசியங்கள் என்பதை தீபப் பயிற்சி செய்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .
8 இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர அடுத்து, அடுத்து நமக்கு கிடைக்கும் பலன்களை பயிற்சியை செய்பவர்களே தெரிந்து கொள்ளலாம்.
9 பயிற்சி தொடர்ந்து செய்து அதன் பலனை சுவைத்தவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வார்கள்.
சோதனை முறை
தீபப்பயிற்சியின் இரண்டு நிலைகளையும் குறைந்தது ஒரு வருடம் செய்தவர்கள் கீழே சொல்லப்பட்ட சோதனை முறையை செய்து பார்த்தால் தங்களிடம் உள்ள சக்தியை உணர்ந்து கொள்ள முடியும்.
முதல் சோதனை முறை
1 காற்றால் நிரப்பப் பட்ட  ஊதிய பலுhன் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் .
2 பலுhனை தரையில் வைத்து விட்டு நாமும் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும் .
3 காற்றினால் பலுhன் அசையாதவாறு இருக்கும்படி நாம் அமர்ந்திருக்கும் அறையில் உள்ள கதவுகள் அனைத்தையும் மூடிக்  கொள்ள வேண்டும்.
4 அறைக்குள் காற்று முழுவதுமாக வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
5 காற்றினால் பலுhன் அசையாதவாறு இருக்கும் படியாக நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.
6 பலுhன் நாம் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தொலைவில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
7 நாம் பலுhனை சிறிது நேரம்  ஊற்று நோக்கியபடி மனதிற்குள் தன்னை நோக்கி பலுhன் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கீழ்க்கண்ட வார்த்தைகளை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே பலுhனைப் பார்க்க வேண்டும்.
               
          “””””வேண்டும் யாண்டும் உனதாக வேண்டும்
                    துhண்டும் உருவும் எனதாக வேண்டும்”””
8 அவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் பொழுது பலுhனை சிறிது அசையத் தொடங்கும் சிறிது ,சிறிதாக நகர்ந்து உருண்டு உருண்டு நகரத் தொடங்கும்.
9 உருண்டு ,உருண்டு நகர்ந்து கொண்டே வந்து நம் அருகே வந்து விடும்.
அப்படி வந்து விட்டால் உங்களிடம் சக்தி வளர்ந்து இருக்கிறது என்று பொருள்
இரண்டாவது சோதனை முறை
1 ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் .அதை மேசையின் மேல் வைக்க வேண்டும்.
2 மேசையின் மேல் அகல் விளக்கை வைத்த பிறகு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்ற வேண்டும்.
3 விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் நம் கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 நாம் தரையில் அமர்ந்து கொண்டு நம் கண்களுக்கு நேராக விளக்கின் தீபம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
5 சிறிது நேரம் தீபத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும்.
6 பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து தீபத்தின் முன் வைக்க வேண்டும்.
7 சிறிது நேரம் தொடர்ந்து எலுமிச்சை பழத்தை தொடர்ந்து பார்த்து மேலே சொன்ன மந்திரத்தை
         “””” வேண்டும் யாண்டும் உனதாக வேண்டும்
                 துhண்டும் உருவும் எனதாக வேண்டும்””””
  என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வரவேண்டும்
8 எலுமிச்சை பழம் மேசையில் மெதுவாக அசைய ஆரம்பிக்கும்.
9 பிறகு உருள ஆரம்பிக்கும்.
10 மேசையிலிருந்து உருண்டு வந்து நம்முடைய மடியில் வந்து விழும்.
மேலே சொல்லப்பட்ட பலன் உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு ஆகர்ஷன சக்தி வந்து விட்டது என்று பொருள்.
 அதாவது நீங்கள் விருப்பப் பட்ட பொருள் எந்த இடத்தில் இருந்தாலும் ,எந்த நாட்டில் இருந்தாலும் ,அந்தப் பொருள் உங்களைத் தேடி வரும்.
அந்த பொருள் உயிருள்ள பொருளாக இருந்தாலும் ,உயிரற்ற பொருளாக இருந்தாலும் உங்களைத் தேடி வரும் என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ,அறிந்து கொள்ள வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட பலன் மட்டுமில்லை, இதை விட மேலும் பல பலன்களும் சக்திகளும் தீபப் பயிற்சியின் மூலம் கிடைக்கும் .

தீபப்பயிற்சியை செய்பவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து செய்து அதன் பலன்களை அனுபவித்து அதை நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் எனறு கேட்டுக் கொள்கிறேன்.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                     போற்றினேன் தீபப்பயிற்சி யுந்தான்முற்றே “”
 
படித்த இடம் :http://kbalagangadharan.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
 


                              கரும்புள்ளி பயிற்சி


கரும்புள்ளி பயிற்சி மிக குறைந்த எண்ணிக்கையுடைய மனிதர்களால் மட்டுமே செய்யப்படுகிறது.
இப்பயிற்சியில் நம்முடைய உயிராற்றல் சக்தி செலவாகிறது

இப்பயிற்சி ஒருவரை அவருடைய விருப்பம் இல்லாமல் தன்னுடைய விருப்பத்திற்கு இணங்க வைப்பதற்காகவும் மற்றவர்களை வைத்து தன்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் மற்றவர்களை தனக்கு அடிமையாக வேலை வாங்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது

இது பிளாக் மேஜிக் விச் கிராப்ட் போன்ற செயல்கள் செய்பவர்களின் ஆரம்ப நிலை பயிற்சியாக இருந்து வருகிறது மனிதர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர பிளாக் மேஜிக் விச் கிராப்ட் போன்ற பலன்கள் உடனே கிடைத்து விடுகிறது

இந்த பயிற்சியை செய்பவர்கள் சக்தி அவர்கள் உள்ளேயே இருக்கும் வெளியே சென்று இயங்காது கரும்புள்ளி பயிற்சி மூலம் கிடைத்த சக்தியை சோதனை செய்ய பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன


கரும்புள்ளி பயிற்சியின் ரகசியத்தை கீழ்க்கண்டவாறு சொல்லலாம்
மந்திரம் என்பது கரும்புள்ளி பயிற்சி அட்டை
யந்திரம் என்பது பயிற்சி செய்பவர்
தந்திரம் என்பது தான் சூட்சுமம்



கரும்புள்ளி பயிற்சி செய்வதால் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படுகிறது
கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் உடலில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும் மனது எப்பொழுதும் வருத்தமுடன் இருப்பது போலவே தோன்றும் கவலையாக இருப்பதற்குரிய அறிகுறிகள் முகத்தில் தோன்றும்

கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் சாலையில் நடந்து செல்லும் போதும் வீட்டில் சில நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் அடிக்கடி தவறி விழுந்து விடுவார்கள் சிறுசிறு விபத்துக்கள் கூட ஏற்பட சந்தர்ப்பங்கள் உண்டு 

குடும்பத்தில் இருந்து கொண்டு இந்த பயிற்சியை செய்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது



கரும்புள்ளி அட்டை செய்யும் விதம்
1 பாஸ்போர்ட் கார்ட் அளவு உள்ள ஒரு வௌளை அட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்
2 அதன் மையத்தில் ஒரு 25 பைசா வைத்து அதனைச் சுற்றி ஒரு வட்டம் வரைய வேண்டும்
3 வரையப்பட்ட அந்த 25 பைசா வட்டத்திற்குள் கருப்பு நிற மையினால் வர்ணம் அடிக்க வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி செய்வதற்கு உரிய கரும்புள்ளி அட்டை தயாராகி விட்டது


கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
1 கரும்புள்ளி பயிற்சியை அதிகாலை 03.00 மணியிலிருந்து 08.00 மணிக்குள் செய்ய வேண்டும்
2 அதிகாலை 03.00 மணியிலிருந்து 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்
3 அதிகாலை 08.00 மணிக்கு மேல் கண்டிப்பாக கரும்புள்ளி பயிற்சி செய்யக் கூடாது
4 கரும்புள்ளி பயிற்சியை தனியாக அமர்ந்து தனி அறைக்குள் தான் செய்ய வேண்டும்
5 கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும்
6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் திக்கு கட்டு உடல்கட்டு போன்ற கட்டு மந்திரங்களை தன்னைச் சுற்றி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்



கரும்புள்ளி பயிற்சி முறை 1
1 முதலில் கரும்புள்ளி அட்டையை தரையில் சுவரில் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
2 கரும்புள்ளி அட்டையிலிருந்து 1 அடி அல்லது ஒன்றரை அடி துhரம் தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்
3 கரும்புள்ளி அட்டையை தொடர்ந்து 2 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் கரும்புள்ளியை மட்டுமே பார்க்க வேண்டும்
4 பிறகு கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும்
5 மேற்கண்ட செயல்முறையை மூன்று முறை அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்


கரும்புள்ளி பயிற்சி முறை 2
1 முதலில் கரும்புள்ளி அட்டையை தரையில் சுவரில் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
2 கரும்புள்ளி அட்டையிலிருந்து 1 அடி அல்லது ஒன்றரை அடி துhரம் தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்
3 தியானம் தெரிந்தவர்கள் நெற்றிக்கண்ணில் தனது நினைவை செலுத்த வேண்டும் நெற்றிக் கண்ணில் உறுத்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும்
4 பிறகு கரும்புள்ளி அட்டையை தொடர்ந்து 20 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் கரும்புள்ளியை பார்க்க வேண்டும்
5 கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும் அவ்வாறு கவனிக்கும் போது நெற்றிக்கண்ணில் மனதை நிறுத்தி உள்ளே கவனிக்க வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக செய்யப்பட்டாலும் அதில் உள்ள சிறந்த இரண்டு முறைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவர நமது உடலில் சக்தி படிப்படியாக உயர்ந்து கொண்டே இருக்கும் வளர்ந்த சக்தியை ஒவ்வொரு படிநிலையிலும் பரிசோதனை செய்ய சில செயல்முறைகள் உள்ளன
முதல் படிநிலையில் அடைந்த சக்தியை சோதனை செய்ய கீழ்க்கண்ட பரிசோதனையை செய்து பார்க்கலாம்


சோதனை முறை
நாம் பேருந்திலோ இரயிலிலோ பயணம் செய்கிறோம் அவ்வாறு பயணம் செய்யும் போது நமக்கு முன்னால் முதுகை காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்ள வேண்டும்

அவருடைய முதுகு பக்கத்தை தொடர்ந்து பார்த்து நம்மை திரும்பி பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து நமது மனதுக்குள் சொல்லி வர வேண்டும் அவ்வாறு தொடர்ந்து சொல்லி வரும்பொழுது அவர் திரும்பி நம்மை பார்ப்பார்

இச் சோதனை முதல் படிநிலையில் வளர்ந்த சக்தியை அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது

இதனைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளுக்கான பல்வேறு சோதனைகள் உள்ளன
கரும்புள்ளி பயிற்சி முறை தவறானவர்களால் தவறான காரியத்திற்கு பயன்படுத்தப்படுவதால்மற்ற சோதனை முறைகள் மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது

மனித இனம் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு பயிற்சி முறைகள் தவறாக பயன் படுத்தப் பட்ட காரணத்தால் பல்வேறு பயிற்சி முறைகள் மறைபொருளாக வைக்கப் பட்டிருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்வோம்

அறிந்து கொண்ட பயிற்சி முறைகளை நல்ல காரியத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம்.

படித்த  இடம் :http://kbalagangadharan.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

நவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்

shri-lalitha-devi1
சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும்.  சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரனங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே.  பராசக்தியின் வடிவங்கள் பலப்பல.  ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாக பராசக்தி விளங்குகிறாள்.  அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.
நவசக்தியரின் பெயர்கள் பின்வருமாறு:-
  1. மனோன்மணி
  2. சர்வபூதமணி
  3. பலப்பிரதமணி
  4. கலவிகரணி
  5. பலவிகரணி
  6. காளி
  7. ரவுத்திரி
  8. சேட்டை
  9. வாமை
நவசக்தியரின் இயல்புகளும், தொழில்களும்:-

வ.எண்
நவசக்தியின் பெயர்
இயல்பு மற்றும் தொழில்
1. மனோன்மணி
பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு பக்குமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன் சேர்க்கும் வல்லமை கொண்டவள்.
2. சர்வபூதமணி
உலக உயிர்களில் கலந்து நின்று உயிர்களின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள்.
3. பலப்பிரதமணி
சூரியனிடம் கலந்து நின்று தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து ஆக்கம் தரும் வல்லமை கொண்டவள்.
4. கலவிகரணி
வானத்தில் கலந்து நின்று எல்லா பொருட்களையும் தன்பால் ஏற்று தன்னுடன் கலந்து இணைந்து நிற்க அருளும் வல்லமை கொண்டவள்.
5. பலவிகரணி
சந்திரனில் கலந்து நின்று அமுதத்தை பொழிந்து தாவரக்கூட்டங்கள் உயிர் பெற்று தழைத்தோங்கத் துணை நிற்கும் ஆற்றல் கொண்டவள்.
6. காளி
காற்றில் கலந்து நின்று உயிர்களுக்கு பிராண வாயுவை அளித்து உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.
7. ரவுத்திரி
நெருப்பில் கலந்து நின்று நெருப்பிற்கு வெம்மையை வழங்கி யாவற்றையும் அழிக்கும் வல்லமை கொண்டவள்.
8. சேட்டை
நீரினில் கலந்து அதற்கு திரவ நிலையையும், சுவையையும் வழங்கி உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.
9. வாமை
மண்ணில் கலந்து நின்று ஐம்பூதங்களின் செயல்களையும் ஒருங்கே செய்து அருள் பாலிக்கும் வல்லமை கொண்டவள்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் நவசக்தியே போற்றி…! போற்றி…!! போற்றி…!!!

படித்த இடம் :http://aanmeegachudar.blogspot.in

    ஸ்ரீ பாலா மந்திரம்



             மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட

குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி

முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட

தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.எல்லா யோகிகளுக்கும் யோக

முதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்

என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியாரின்

பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சிததர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்  இருக்கிறான் என்று  கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது  (இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை  விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-       


1. ஸ்ரீ  பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-


ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|

இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று சொல்லுவது சிறந்தது.

ஐம்  - என்ற பீஜம்  வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

க்லீம்  - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீகரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.

சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக  வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

                     இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை.இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீகத்திலும் ,வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம்.      


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-


ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-


ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||


முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.

                                 வாழ்க வையகம்|வாழ்க வளமுடன்||


படித்த இடம் :http://sribalatripurasundarisiddarpeedam.blogspot.in/2013/07/blog-post_6595.html

சித்தர்களை நாம எல்லோருமே நம்புறோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில்  மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவங்க  இருந்தாங்க.. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் உதவி செய்யறாங்க. இதை நாமே எல்லோருமே ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். அவங்கள்ளே யாரையாவது நமக்கு தொடர்பு ஏற்படுத்திக்கிட்டா, நமக்கு கர்ம வினைகள் சுத்தமா அழிஞ்சிடுமே.. அவங்களோட வழிகாட்டுதல் பெற , அவங்களை சந்திச்சு தொடர்பு ஏற்படுத்திகிட ஒரு அற்புதமான முறையை சொல்லியிருக்கிறார்.
  
பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர் .

 

பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும்.
ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள்.  ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும். 


ஆசனப் பலகை அல்லது , தரையில் - மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் - உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.  பின்பு, 


ஓம் சிங் ரங் அங் சிங் 


என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். இந்த மந்திரம் தான் , விண்வெளியில் இருக்கும் சித்தரை , உங்கள் பக்கம் ஈர்க்க தேவையான அலைவரிசை ட்யூனர். 
 

நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் - தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் - இரவு எட்டிலிருந்து , ஒன்பது மணி வரை.  இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை.

 ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை  உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் - உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனால் ,  உங்களுக்குமனபலம் கூடும். 


கண்டிப்பாக , தொண்ணூறு நாட்களுக்குள் உங்களுக்கு சித்தர் தரிசனம் கிட்டும். 

எதையோ, எங்கெங்கோ தேடி - முயற்சிகள் வீணடிப்பதைவிட, நேரடியாக சித்தரையே தரிசனம் செய்து விடுதல் நலம் இல்லையா...?

ஒரு சாதாரண செடி வளர்வதே - அந்த இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்.  நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த பயிற்சிக்கு. விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு அளப்பரிய தெய்வீக அனுபவம் கிட்டும்...
 

எதெதையோ பேசிக்கொண்டு , விதண்டாவாதம் செய்வதைவிட - நாமே ஒரு சாதனை செய்ய முயன்று பார்ப்பதில் அர்த்தமுள்ளது.. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்....!   
மிக பிரமாதமான அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..!
பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்...


படித்த இடம் : http://www.livingextra.com/2011/08/blog-post_25.html#ixzz30pxSEnNh



கடவுள்களில் தரிசிக்க மிகவும் அபூர்வமான தரிசனம் சிவபெருமானின் தரிசனமும்,முருகக் கடவுளின் தரினமும் ஆகும்.நாம் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் குறிப்பிட்ட வழிபாடு செய்தால்,உரிய கடவுளின் தரிசனம் நேரடியாகக் கிடைக்கும் என்று எனது ஆன்மீக குருக்களும்,ஜோதிட வழிகாட்டிகளும் அடிக்கடி சொல்லியிருக்கிறார்கள்.ஏன் என்று கேட்டால் அதற்குரிய பதில் பூமியில் இல்லை என்பதுதான் விடை ஆகும்.
ஆறுமுகக்கடவுளுக்கு ஆறுபடைவீடு இருப்பதுபோல,சிவனின் ஒரு பகுதி படைப்பாகிய பைரவருக்கும்,எட்டுபடை வீடுகள் இருக்கின்றன என்பது ஆச்சரியம் மட்டுமல்ல;அந்த எட்டுபடை வீடுகளுக்குச் சென்று தரிசனம் செய்பவர்களுக்கு ,வாழ்க்கை முழுவதும் சிரமங்கள்,துயரங்கள்,கஷ்டங்கள்,தோல்விகள் இராது;மேலும் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் எமவாதனை இருக்காது என்பதும் பைரவ உபாசகர்,கொல்லிமலை சித்தர்,காகபுஜண்டர் ஆசிரமத்தை நிறுவியவருமாகிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ தருமலிங்கசுவாமிகள் தனது அனுபவத்தை பைரவ ரகசியம் என்னும் நூலில் வெளியிட்டிருக்கிறார்.
ஒருவன் இந்த பிறவியில் பைரவ வழிபாடு செய்கிறான் எனில்,அவன் முற்பிறவிகளில் ஏதாவது ஒரு சித்தராகவோ,துறவியாகவோ,ஞானியாகவோ பிறந்திருக்க வேண்டும்.அல்லது முற்பிறவிகளில் ஏதாவது ஒரு சித்தர் அல்லது துறவி அல்லது ஞானி அல்லது பழுத்த சிவாச்சாரியாரின் ஆன்மீக வழிகாட்டுதலோடு வாழ்ந்திருக்க வேண்டும்.குறைந்த பட்சம் முற்பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவியில் இவ்வாறு இருந்திருக்காமல்,இந்த பிறவியில் பைரவர் வழிபாடு,பைரவர் உபாசனை,பைரவர் கோவில் கட்டுதல் என எதுவும் செய்ய இயலாது என்பது அனுபவ உண்மையாகும்.
ஒவ்வொரு மதத்திலும் பைரவர் வழிபாடு இருக்கிறது;அது வேறு வேறு பெயர்களில் இருந்தாலும்,வழிபாட்டுமுறையில் சிறு சிறுமாற்றங்கள்  இருந்தாலும்,முடிவில் அனைத்துமதத்தினரும் பைரவர் வழிபாடு செய்துவருவதும்,பைரவர் தரிசனம் பெறுவதும் யுகயுகமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இன்று உலக அரசியலில் அசையாத சக்தியாக இருக்கும் மதங்களின் தலைமையகங்களில் பைரவர் வழிபாடு பல நூற்றாண்டுகளாக செய்யப்பட்டு வருவதால்தான்,அவர்கள் உலகை ஆண்டுகொண்டிருக்கின்றனர் என்று சொன்னால் நம்ப முடியுமா?நீங்கள் நம்பாவிட்டாலும்,அதுதான் உண்மை.
பைரவரின் எட்டு படைவீடுகளுக்கு அட்ட வீரட்டானங்கள் என்று பெயர்.பைரவர் வீரதீரச் செயல்கள் புரிந்த இடங்களாக இருப்பதால் இவை இந்தப் பெயர் பெற்றன.இந்த அட்ட வீரட்டானங்களுக்குச் சென்று பைரவரை முறையாக வழிபாடு செய்தால் மட்டுமே பைரவரின் திரு அருள் முழுமையாக ஒருவருக்குக் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பைரவ ரகசியங்களுள் ஒன்று !!!
தேவாரம் அருளிய நால்வரில் ஒருவராம் என்னப்பர் அப்பர் பெருமான் தேவாரத்தில் அட்ட வீரட்டானத்தின் பெருமையை விவரிக்கிறார்.
காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம்,காமருஞ்சீர் அதிகை
மேவீய வீரட்டானம்,வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம்,விடையூர் திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம்,குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!
திருக்கண்டியூர், திருக்கடவூர்,திருவதிகை,வழுவூர்,திருப்பறியலூர்,திருக்கோவிலூர்,திருக்குறுக்கை,திருவிற்குடி ஆகிய தலங்களில் சென்று சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியிருக்கும் பைரவப் பெருமானை வழிபடும் அன்பர்களை எமன் எக்காலமும் நெருங்கிடான்.இவர்கள் சிவபெருமானுக்கு நெருக்கமானவர்கள் என எமன் இவர்களைக் கண்டு அஞ்சி வணங்கி ஒதுங்குவான்.
1.திருக்கண்டியூர்

இத்திருத்தலம் தஞ்சை திருவையாறு சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இத்திருத்தலம் ஆதி வில்வாரண்யம் என வழங்கப்படுகிறது.
இறைவனின் திருநாமம்  பிரமசிர கண்டீஸ்வரர்.பிரம்மனின் அகந்தையை அழித்து அருள் கொடுத்த இடம்.இத் தலத்திற்கு வந்து பக்தியோடு வழிபாடு செய்தால்,மறுபிறவியில்லை;திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.இந்தக் கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடமேற்குத் திசையில் பைரவரின் தனி சன்னதி உள்ளது.
ஞாயிறு,செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு.இந்த நாட்களில் இலுப்பையெண்ணெய்,புங்கெண்ணெய்,நல்லெண்ணைய் கலந்து 8 விளக்கேற்றி மூலவருக்கு அர்ச்சனை,அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும்.
திரு மூலப்பெருமானும்
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)
என்று திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.இதுவே நான்முகனின் தலையை கொய்த வரலாற்றோடு தொடர்புடையது ஆகும்.
சுவாதிஷ்டமாகிய சக்கரத்திலிருந்து விந்து நாதம் செய்து கொண்டிருந்த அலையும் மனமாகிய நான்முகனை(மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நான்கு முகம்) ,விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து,சுத்தக்கினியால் இறையருளால் விந்து சக்தியை நிலைப்படுத்தி,மனதின் உலகச் செயல்களை செயல்படுமாறு செய்து குறும்பை,அகங்காரத்தை நசுக்கிக் காத்து அருள் செய்தார் பைரவர்.
2.திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்,திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதி தீரத்தில் அமைந்துள்ளது.
இறைவனின் திருநாமம் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி.அன்னை சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகி.
ஆலயத்தில் ஈசானிய மூலையில் பைரவர் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.ஞாயிறு,வெள்ளி,வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்தல் சிறப்பு.
இங்குள்ள மஹாகணபதி சன்னதியில் தான் ஸ்ரீமஹா கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வையார் விநாயகர் அகவலை அருளினார்.
இத்தலத்தில் அபிஷேகம் செய்தால்,நல்ல குருவின் திருவருள் முழுமையாக அமையும்.சோழச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது!!! ஸ்ரீராஜராஜசோழன்        ஸ்ரீகருவூரார் சித்தரின் அருளின் படி பைரவரை வணங்கி ஈடில்லாத புகழ் பெற்றார்.அவரது சாம்ராஜ்ஜியம் ஆசியா முழுவதும்,ஆஸ்திரேலியா வரையிலும் பரவியிருந்தது.
கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ் செய்தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே= திருமூலரின் திருமந்திரம் 339
(மனதில் பொறாமை,காமம் முதலான தீய எண்ணங்கள் இறை வழிபாடு விடாமல் செய்து வரும்போதுதான் எழுச்சி பெறும்;அவ்வாறு எழுச்சி பெற்று நம்மை ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும்;இப்படி காம,பொறாமை எண்ணங்கள் தோன்றிடக் காரணம் நான் என்ற அகங்காரம் தான்!!!இந்த எண்ணங்களை முறியடிக்க நாம் பைரவரை விடாமல் தொழுதால்,மனதில் மெய்ஞான எண்ணங்களை தோற்றுவித்து,நமது மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களை அழித்து,நல்லெண்ணத்தால் மெய் இறைஞான நிலையை பைரவரே உருவாக்கிவிடுவார்.
3.திருவதிகை

பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.இறைவனின் திருநாமம் வீரட்டானேஸ்வரர்.ஈசானிய மூலையில் இங்கு பைரவர் எழுந்தருளியுள்ளார்.திரிபுரம் எரித்த இடம் இதுவே! வித்யுமாலி,தாரகாசுரன்,கமலாக்ஷன் ஆகிய அசுரர்களை அழித்த இடம் இது.வெள்ளி,புதன் கிழமைகளில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.தீராத நோய்கள் தீர இங்கு வந்து வழிபட வேண்டும்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவடி தீட்சை பெற்ற இடம் இது.சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரின் தீராத குன்ம வியாதியை நீக்கி தடுத்தாண்ட தலம் இது.உடல் நோய்களும்,பிறவி நோய்களும் நீங்கும் இடம் இதுவே! நமது கர்மத்தடைகளை நீக்கி,யோக மற்றும் ஞான நிலைகளை வழங்கும் திருத்தலமும் இதுவே தான்!!!
அப்பணி செஞ்சடை ஆதிபுராதனன்
முப்புரஞ்செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமூலரின் திருமந்திரம் 343)
காமம்(உடல் இச்சை மட்டும் காமம் அல்ல;பேராசை;பணத்தாசை;பொன்னாசையும் தான்!), கோபம்,தாபம்(நீண்ட கால ஏக்கம்) ஆகிய மும்மலங்களை(நம்மை ஆன்மீக வாழ்க்கையில் வளரவிடாமல் தடுக்கும் கழிவுகள் அனைத்தும் மலம் ஆகும்)எரித்து நமது மூலாக்கினியை ஞானக்கினியால் சேர்த்து யோக சித்தி,ஞான சித்தி அருளும் சிறப்பான திருத்தலமே இந்த திருவதிகை ஆகும்.
4.திருப்பறியலூர்

மாயவரம் திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இந்த செம்பொனார் கோவிலில் இருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.
சுவாமியின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.அம்பாளின் பெயர் இளங்கொம்பனையாள். அகந்தை கொண்ட தட்சனை அழித்த இடம் இது.தட்சன் யாகம் செய்த இடமே  தற்சமயம் கோவிலின் குளமாக இருக்கிறது.இங்கு வந்து வழிபட்டால்,தீராத கடன்கள் தீரும்;பூர்வ ஜென்மங்களில் ஏற்பட்ட சாபங்கள்,தோஷங்கள்  ஆகியவற்றை நீக்கி,நல்வாழ்வு தருமிடம் இதுவே!!!
5.திருவிற்குடி

திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2கி.மீ.தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.
மேற்கு நோக்கிய திருக்கோவிலாக இது அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி.
திருமால் சுதர்ஸன சக்கரம் வேண்டி இறைவனுக்கு துளசியால் அர்ச்சித்து அருளையும்,சுதர்ஸன சக்கரத்தையும் பெற்றார்.எனவே,இங்கு சிவபெருமான் வடிவில் இருக்கும் பைரவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.இங்கு திருமால் தனது தேவியான லட்சுமியோடு இருக்கிறார்.
பெரும் வறுமை நீங்கிட அல்லது மகத்தான செல்வ வளம் வேண்டுவோர்,இங்கு 16 வெள்ளிக்கிழமைகளுக்கு வர வேண்டும்.வந்து விநாயகர்,சுவாமி,அம்பாள்,இலக்குமி,பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்ய வேண்டும்;இதைச் செய்ய இயலாத அளவுக்கு பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருப்போர் அர்ச்சனை செய்தால் போதும்.இவ்வாறு செய்து முடித்தால், வறுமை நீங்கும்;செல்வ வளம் பெருகும்.
குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் 27 செவ்வாய்க்கிழமைகளுக்கு மேற்கூறியவாறு வழிபாடுகள் செய்து விட்டால்,தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீங்கி புத்திரபாக்கியம் பெறுவது நிச்சயம்.
திருமணமாகாதவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தங்கக் காசுகளை சுவாமிக்கு காணிக்கையாக வேண்டி ஒன்பது மாதங்கள்(வெள்ளி அல்லது தேய்பிறை அஷ்டமியன்று) வேண்டிக்கொள்ள ,நல்ல முறையில் திருமணம் நடக்கும்.
தொழிலில் நசிந்தோர்கள்,இலாபமில்லாதவர்கள் இங்கு பைரவருக்கு அபிஷேகங்கள் செய்துவர அற்புதமான பலன்களை அனுபவத்தில் உணரமுடியும்.நீங்கள் இவ்வாறு வழிபாடுகள் செய்து வர,நாய்கள் உங்களைத் தொடர்ந்து வருவதையும் அனுபவத்தில் காணலாம்.
எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற
அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமூலரின் திருமந்திரம் 341)
6.வழுவூர்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் சென்றதும்,வலப்புறம் திரும்ப வேண்டும்.அங்கிருந்து அரை கி.மீ.தூரத்தில் இருப்பது வழுவூர் ஆகும்.
இறைவன் கிருத்திவாஸர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்துவருகிறார்.
அகங்காரத்துடன் தான் என்ற அகந்தையில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அழித்து,திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு ஞானச் செல்வம் தந்தருளும் இடம் இது.
ஸ்ரீஐயப்பன் அவதரித்த இடமும் இதுவே!!! எத்தனையோ பேர்கள் தியானம் செய்கிறேன்;தவம் செய்கிறேன் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என புலம்புபவர்கள்,இங்கு வருகைதந்து,இறைவனை வழிபட வேண்டும்.மாதம் ஒரு நாள் வீதம் பத்து நாட்களுக்கு இங்கிருக்கும் மூலவரின் முன்பாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்;இவ்வாறு செய்வதால்,அவர்களின் தியானம் சித்திக்கும்;கூடவே இறைவனின் திருவருட்காட்சியும்(தரிசனம்!!!) பெற்று இறைமார்க்கத்தில் முன்னேறமுடியும்.
இத்தலத்தில் அமர்ந்து தியானம் செய்து வந்தால், ‘பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்த பரிபூரண ஆனந்தமே’ என்னும் வாக்கினை அனுபவபூர்வமாக உணரலாம்.
இங்கும் ஈசான மூலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார்.இவருக்கு அருகிலேயே சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.
ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்த அஷ்டமச்சனி(4 ஆம் இடத்துச்சனி),சனி திசையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 8 சனிக்கிழமைகளுக்கு இங்கு வர வேண்டும்;அவ்வாறு வந்து,இவரது சன்னிதியில் 8 தீபம் நல்லெண்ணெய் ஊற்றி,ஏற்ற வேண்டும்.அதன்பிறகு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும்;முடியாதவர்கள் அர்ச்சனை செய்து வர சனிக்கிரகத்தின் பாதிப்புகள்,தொல்லைகள் நீங்கி,எல்லையில்லாத மனநிம்மதியைப் பெறலாம்.
7.திருக்குறுக்கை
மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற இடம் வந்ததும்,பிரிந்து செல்ல வேண்டும்.அங்கிருந்து 3 கி.மீ.சென்றால் திருக்குறுக்கை வரும்.
இறைவனின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை ஆகும்.காமனை எரித்த இடம் இதுவே!!!
தியானம் செய்பவர்கள்,இறை நெறி செல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சுழுமுனை கூடி,வாக்கு சித்தியும் தவ உயர்வும் பெறமுடியும்.
குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து 8 வியாழன் அல்லது 8 செவ்வாய்க்கிழமை அல்லது மாதாந்திர வியாழன் அல்லது மாதந்திர செவ்வாய்க்கிழமை என்று  8 முறை வழிபட்டு,அன்னதானம் ஒவ்வொரு தடவையும் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் கண்டிப்பாக மழலைச் செல்வம் பெறுவார்கள்.
இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமூலரின் திருமந்திரம் 346)
இந்தக் கோவிலுக்கு வந்துவிட்டு,வீடு சென்றவர்களுக்கு கனவில் பைரவர் அல்லது கூட்டமாக நாய்களையோ காண்பார்கள்.ஸ்ரீபைரவரின் திருவருளுக்கு இது ஒரு சான்று ஆகும்.
8.திருக்கடவூர்

திருக்கடையூர் என்ற திருக்கடவூர் ஆதியில் வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கியது.
அமிர்தகடேஸ்வரர்,அபிராமி என்ற பெயர்களில் அப்பாவும் அம்மாவும் அருள்பாலித்து வருகின்றனர்.எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காத்தருளிய இடம் இதுவே!!!
இதய நோயில் வருந்துவோர்கள்,ஆயுளுக்கு கண்டமுள்ளவர்கள் இங்கு வந்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.அதன்பிறகு தியானம் செய்ய வேண்டும்.இவ்வாறு 8 சனிக்கிழமைகளுக்குச் செய்து வந்தால்,மரண பயம் அகன்று நீடூழி வாழலாம்.
பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த இடம் இது.
மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று
காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமூலரின் திருமந்திரம் 345)
இது சித்தர்கள் தவம் செய்த பூமி ஆகும்.இங்கு ஈசான மூலையில் அமர்ந்திருக்கும் பைரவரை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்  8 நாட்களுக்கு தவம் செய்து,வில்வம் மற்றும் செண்பகப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால்,அஷ்டமாசித்திக்குச் செல்ல நமக்கு நல்ல குருவை,சித்தரை அடையாளம் காட்டும்.இந்த ஊருக்கு 2 கி.மீ.தொலைவில் திருக்கடவூர் மயானம் என்னும் இடத்துக்குச் சென்று பிரம்மபுரீஸ்வரர்,மலர்க்குழல் மின்னம்மை தம்பதியராக இருக்கும் அருள்ஞான பெற்றோர்களை வழிபட,மெய்ஞானம் கைகூடும்.
கொன்றாய் காலனை; உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,
மான் கன்றாருங் காவாக்கடவூர் திருவீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே என்பது சுந்தரரின் தேவாரப்பாடல் ஆகும்.
நன்றி:பைரவ ரகசியம்,எழுதியவர்:கொல்லிமலைச் சித்தர்,ஸ்ரீகாகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள்,விலை ரூ.100/-முகவரி:காகாஸ்ரமம்,காஞ்சி சாலை,பெரியகுளம்,திருஅண்ணாமலை மாவட்டம்.செல்:9786012345.04188= 293981,252344.
ஓம்சிவசிவஓம்

படித்த இடம் : http://bairavarvazhibaadu.blogspot.in/2012/03/blog-post_21.html

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates