Followers

Powered by Blogger.

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்

துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். 

துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம். 

சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர் 
வைகாசி தாதா - ருரு பைரவர் 
ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர் 
ஆடி அரியமான் -கபால பைரவர் 
ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன் - வடுக பைரவர் 
ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர் 
கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர் 
மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர் 
தை விஷ்ணு - குரோதன பைரவர் 
மாசி வருணன் - ஸம்ஹார பைரவர் 
பங்குனி பூஷா -சட்டநாத பைரவர்.
http://bairavarvazhibaadu.blogspot.in/2014/02/blog-post_1197.html

அஷ்ட பைரவர்,அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்





சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்



ஓம் கால தண்டாய வித்மஹே

வஜ்ர வீராய தீமஹி

தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்



ஒம் கஜத்வஜாய வித்மஹே

வஜ்ர ஹஸ்தாய தீமஹி

தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்



யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ,அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும்.இதனால்,சந்திர திசை யோக திசையாக இருந்தால்,யோகங்கள் அதிகரிக்கும்.சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால்,கஷ்டங்கள் குறையும்.



செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி



ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே

மஹாவீராய தீமஹி

தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்



ஓம் சிகித்வஜாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்



செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள்,இந்த மந்திரங்களை உங்கள் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 9 முறை ஜபித்துவருவது நல்லது.



புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி



ஓம் மஹா மந்த்ராய வித்மஹே

வராஹி மனோகராய தீமஹி

தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்



ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே

தண்ட ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: வராஹி ப்ரசோதயாத்



புதன் மகாதிசை நடப்பவர்கள் ,பைரவர் சன்னிதியில் இந்த மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்கலாம்.



குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி

ஓம் ஞான தேவாய வித்மஹே

வித்யா ராஜாய தீமஹி

தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்



ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே

கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்



குருதிசை நடப்பவர்கள் பைரவ சன்னிதியில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.



சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்+மாஹேஸ்வரி



ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே

டங்கேஷாய தீமஹி

தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்



ஓம் வருஷத் வஜாய வித்மஹே

ம்ருக ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்



சுக்கிர மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரி மந்திரங்கள்.



சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி



ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே

லட்சுமி தராய தீமஹி

தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்



ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்



சனி மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரிகள்.



ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ



ஓம் மங்களேஷாய வித்மஹே

சண்டிகாப்ரியாய தீமஹி

தந்நோ:ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்



ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே

மஹாதேவி ச தீமஹி

தந்நோ: சண்டி ப்ரசோதயாத்



ராகு தசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.



கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி



ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

ஸர்வானுக்ராய தீமஹி

தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்



ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தந்நோ; காளி ப்ரசோதயாத்



கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்.

இவற்றில் தந்நோ: என்பதை தந்நோஹ் என்று உச்சரிக்க வேண்டும் 



படித்த  இடம் : http://sivanandabbaraty.blogspot.in/2011/06/blog-post_19.html






காலபைரவர் அஷ்டகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்அதை இயற்றியவர் ஆதிசங்கரர் ஆவார்இந்த காலபைரவர் அஷ்டகத்தை பாராயணம் செய்யும் முறையை ஏற்கனவே ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.


இந்த பதிவில் காசி காலபைரவர் கயிறு பற்றி பார்ப்போம்இதற்கு தேவையான பொருள் ஒரு கறுப்பு கயிறு (அவரவர் மணிக்கட்டில் கட்டுவதற்கு ஏற்ற நீளத்துடன்) மட்டுமேகாலபைரவர் கயிறு தயாரிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமி () தேய்பிறை சஷ்டி () பௌர்ணமி () செவ்வாய் கிழமை () ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளை இவற்றில் எதுவாக இருந்தாலும் நலம்.


முதலில் கீழ்க்கண்ட காலபைரவர் அஷ்டகத்தை 8 முறை காலபைரவர் சந்நிதியில் பாராயணம் செய்யும் போது அவரது காலடியில் நாம் தயாரிக்க வேண்டிய கறுப்பு கயிற்றை வைக்கவும்.  8 முறை பாராயணம் செய்த பின்பு அந்த கறுப்பு கயிற்றை வீட்டிற்கு எடுத்து வந்து காலபைரவரை மனதில் நினைத்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் முன்பாக 1 முறை பாராயணம் செய்ய வேண்டும்.


அவ்வாறு பாராயணம் செய்யும் போது 8 பாடல்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் கறுப்பு கயிற்றில் ஒரு முடிச்சு வீதம் 8 முடிச்சுகள் போடவும். பின்பு 9 வது பாடலை பாராயணம் செய்து அந்த கயிற்றை யாருக்கு தேவையோ அவர்களுக்கு கட்டவும்இந்த காலபைரவர் கயிறு செய்யும் போது யாருடனும் பேசக்கூடாது. ஒரு தடவையில் எத்தனை கயிறுகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்அது அவரவர் தேவையை பொறுத்து மாறுபடும்.


இவ்வாறு செய்யப்படும் கயிறு சக்தி மிக்கதுபைரவரின் அருளை தரக்கூடியதுஎந்த துன்பத்திலிருந்தும் காக்கக்கூடியதுஇந்த கயிற்றை செய்பவர்களும், அதனை பயன்படுத்துபவர்களும் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவும்அவ்வாறு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய பின்பு தான் கயிறு தயாரிக்கும் வேலையில் இறங்கவும்இல்லையேல் நாய் வந்து கடிக்கும்.


இந்த கயிற்றினால் ஏற்படும் பலன்கள் :

1.   பயம் போக்கும்
2.   தைரியம் தரும்
3.   கர்மவினைகளை அழிக்கும்
4.   விபத்துக்களிலிருந்து காக்கும்
5.   ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போக்கும்
6.   நோய்களையும், தோஷங்களையும் போக்கும்
7.   தீய கனவுகளை ஒழிக்கும்
8.   கடன்களை தீர்க்கும்
9.   பைரவர் அருளை பெருக்கும்.




எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது.  வேறு எதுவும் தேவையில்லை.  வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட்டு காலபைரவர் கயிற்றினை தயாரிக்கலாம். 


மனப்பாடம் செய்து பாராயணம் செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.  எனவே முதலில் அஷ்டகத்தை மனப்பாடம் செய்து விட்டு பின்பு கயிறு தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவது மிக்க நன்று.



தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் க்லீம் காலபைரவாய நமஹ
http://aanmeegachudar.blogspot.in/2013/09/blog-post_27.html

பிரம்மஹத்தி தோஷ ஜாதகர்கள், தங்களது பாவத்தைக் கழுவ, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்மூர்த்தி தலங்களுக்குச் சென்று வழிபடலாம். மூம்மூர்த்திகளும் சேர்ந்து காட்சிதந்து அருள்புரியும் திருச்சிக்கு அருகே உள்ள உத்தமர் கோயில். கொடுமுடி, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய ஆலயங்களிலும் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.

ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் ஆலயத்தில், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சன்னிதிக்குச் சென்று சக்கரத் தாழ்வாரை வழிபட்டால் பாவங்கள், பாதகங்கள் நீங்கும். திருநள்ளாறு சென்று நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டும் தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம்.

திருப்புல்லாணி அருகே தேவிபட்டணத்தில் நவபாஷாணம் என்றழைக்கப்படும் சமூத்திரக் கரையில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக்கிரகத்தை வழிபட்டு, பாவ நீக்கம் செய்து கொள்ளலாம். கலியுகத்தில், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட ராமேஸ்வரம், மிக முக்கிய தலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தம் உட்பட, அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, சங்கல்ப பூஜை செய்ய வேண்டும். ராமேஸ்வரத்திற்கு வீட்டிலிருந்து, நடைபயணம் செய்தால் மிக நல்லது.

பரிகார நடைமுறைகள் : - பரிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி, சேர்ந்து செய்ய வேண்டும். குழந்தைகளையும் சேர்த்துத்தான் பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் போது திருநீறு, திருமண், சந்தனம் அணிய வேண்டும். முழு நம்பிக்கையோடு ஈடுபாட்டோடு, ஒற்றுமையோடு பரிகாரம் செய்ய வேண்டும்.

வேதம் கற்றறிந்தவர்களுக்கு, ஆன்மீக அன்பர்களுக்கு தானம் செய்ய வேண்டும். சூரியன், உச்சிப் பொழுதிற்கு வருவதற்கு முன்பாகவே, பரிகாரங்களைச் செய்ய வேண்டும். மாலை, இரவு நேரங்களில் தெய்வ வழிபாடு செய்யலாமே தவிர, பரிகாரங்களைச் செய்யக் கூடாது.

விதிவிலக்காக அந்திக்குப் பிறகு செய்யக் கூடிய சில வழிபாடுகள், படையல்கள், பரிகாரங்களைப் பற்றியும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பரிகார பூஜையின் போது குடம், சொம்பில் தீர்த்தம் வைப்பர், பூஜை முடிந்த பின் அந்தத் தீர்த்தத்தைக் குடிப்பர்.

மீதமுள்ள தீர்த்தத்தை வீட்டில் உள்ள கிணற்றில் கொட்டலாம். வீட்டில் கிணறு இல்லாவிட்டால், அடுத்தநாள் காலையில் பாதுகாப்பாக வைத்திருந்து, தலையில் ஊற்றிக் குளிக்கலாம், எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டின் குளியல் அறையிலோ, சாக்கடையிலோ கொட்டி விடக் கூடாது. சுக்கில பட்சம் மற்றும் வளர்பிறை நாட்களில் செய்யும் பரிகாரம் சிறப்பானது.

கிரகத்தின் ஜனன மாதம், கிரகத்தின் கிழமை, கிரகத்தின் நட்சத்திரம் ஆகியன ஒன்று சேர்ந்த நாளாக இருந்தால், அது மிக மிக பரிகாரம் செய்ய உகந்த நாளாகும். புதனுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், புதன், சிம்மத்தில் இருந்தால், சூரியனுக்குரிய ஞாயிறு அன்று செய்வது நல்லது.

ஜென்ம நட்சத்திரம் வரும் காலத்தில், சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் ஜென்ம நட்சத்திரமே சிறப்பானது. சுபமான காரியங்களுக்கு வளர்பிறையும் அதிகத் துன்பம் கொடுக்கும் விஷயங்களுக்கு கிருஷ்ணபட்சத்திலும் பரிகாரம் செய்யலாம்.

 பரிகாரம் செய்வதற்கு உகந்த இடங்களாக - குளக்கரை, ஆற்றங்கரை, கடற்கரை, சிவன், விஷ்ணு ஆலயங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இருக்கும் வீட்டில் செய்யக் கூடியவைகள்- கணபதி ஹோமம், சுதர்சனஹோமம், நவக்கிர ஹோமம் மற்றும் லட்சுமி நாராயணபூஜை ஆகியனவாகும். பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள், உரிய பரிகார பூஜை செய்து, தோஷம் நீங்கி, அனைத்து வளங்களும் பெற தேவி ஸ்ரீ கருமாரியம்மன் அருள் புரிவாள். 


http://www.maalaimalar.com/2014/04/04091051/brahma-hasthi-dosham-pariharam.html

சிவபெருமான் பஞ்சகுமாரர்களில் (பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார்) பைரவரும் ஒருவர் என்று கூறப்பட்டாலும் சிவபெருமான் துக்கம் அல்லது துக்கத்திற்குக் காரணமான பாபத்தைப் போக்குவதால் இவரும் பைரவன் என்றே அழைக்கப்படுகிறார். அவரது சக்தியான காளியும் பைரவி என்ற பெயரில் ஈசானத் திக்கில் இருந்து கொண்டு காவல் காக்கின்றான். பைரவரை வலிமைமிக்க ஞானமூர்த்தியாக உற்பத்தி செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அவரிடம் சிவபெருமான் அளித்தார். அவர் உயிர்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன் எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று அவற்றையும் பாதுகாத்து வருகின்றார். அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாகப் பைரவரைத் தோற்றுவித்து அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்று பைரவர் உற்பத்தியைப் புராணங்கள் கூறுகின்றன. பைரவருக்கு ÷க்ஷத்திரபாலக மூர்த்தி என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. ÷க்ஷத்திரம் என்றால் பூமி. பாலகர் என்றால் காப்பர். ÷க்ஷத்திராமாகிய உலகிற்கு ஊழிக்காலத்தில் நேர்ந்த துயரத்தை நீக்கிக் காத்தருளினமையால் சிவனுக்கு ÷க்ஷத்திரபாலக மூர்த்தி என்னும் பெயர் விளங்குவதாயிற்று என்று புராண வரலாறு கூறுகிறது.
பெண்கள் பலவீனமானவர்களாதலால், எந்தப் பெண்ணாலும் அசுரனான தன்னைக் கொல்ல முடியாது என்று கருதி தானாகாசுரன் என்னும் அசுரன் வரம் பெற்றிருந்தான். சாகா வரம் பெற்றதனால் தானாகாசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அதனால் பிரம்மா முதலிய தேவர்கள் அசுரனின் கொடுமையிலிருந்து விடுபட சிவபெருமானை வேண்டினர். தவர்களின் துன்பத்தைக்கண்ட சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து தானாகாசுரனை அழிக்கக் கட்டளையிட்டார். சிவனின் கட்டளைப்படியே தானாகாசுரனைக் காளி அழித்ததுடன், அந்தக் கோபத்தீயுடனே உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளுடைய கோபத்தீயினால் உலக உயிர்களெல்லாம் வருந்தின. காளியின் கோபத்தீயைப் பருகுவதற்கு மாயையாய் பாலகன் உருக்கொண்டு இடுகாட்டில் குழந்தையாய்க் கிடந்து அழுதார். பசியால் அழும் குழந்தையைக் கண்ட காளி அதனைத் தூக்கி மார்புடன் அணைத்துப் பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த குழந்தை பாலுடன் அவளுடைய கோபத்தீயையும் சேர்த்துப் பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்தது. உலகமும் காளியின் 
அழிவிலிருந்து காக்கப்பட்டது. குழந்தையாய் அவதரித்து காளியின் கோபத்தைத் தணித்த குழந்தைதான் க்ஷத்திரபாலர். இந்த ÷க்ஷத்திரபாலர் சிவனுடைய மூர்த்தங்களில் ஒன்று என்றும் நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அவரே பைரவரின் திருவடிவம் என்று இலிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 


http://copiedpost.blogspot.in/2012/04/blog-post_29.html

நட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்!!!

















இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு ஏற்ப இருபத்தேழு பைரவர்களும்,அந்த பைரவரின் கோவில்களும் நமது தமிழ்நாட்டில் இருக்கின்றன.நமது வாழ்க்கை வளமாகவும்,நலமாகவும்,நிம்மதியாகவும் இருக்க நாம் விநாயகர் வழிபாடு,குல தெய்வ வழிபாடு இவைகளுடன் நமது நட்சத்திரத்துக்குரிய பைரவர் வழிபாடு போன்றவைகளை பின்பற்றினாலே போதுமானது.இதற்கு நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்;


எப்படிச் செய்ய வேண்டும்?


ஒவ்வொரு தமிழ் மாதமும் நமது ஜன்ம நட்சத்திரம் ஒரு நாளன்று வரும்;சில சமயம் இரண்டு நாட்களுக்கும் வரும்;அந்த நாளில் மாலை ஐந்து மணிக்கு மேல் ஏழு மணிக்குள் இந்த அபிஷேகத்தைச் செய்து முடிக்க வேண்டும்.அந்த நாளில் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகாலபைரவருக்கு பின்வரும் பொருட்களுடன் அபிஷேகம் செய்ய வேண்டும்.செய்துவிட்டு,நைவேத்தியத்தை முழுமையாக அங்கே வரும் பக்தர்கள்,பக்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து எட்டு முறை செய்ய வேண்டும்.ஒரு தமிழ் மாதத்திற்கு ஒரு ஜன்ம நட்சத்திர நாள் வீதம் தொடர்ந்து எட்டு மாதங்கள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.எட்டாவது(சில சமயம் ஏழாவது) மாதத்தில் வரும் ஜன்ம நட்சத்திர நாளில் இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் நட்சத்திரத்துக்குரிய பைரவர் ஆலயத்துக்குச் சென்று மேற்கூறியவாறு அபிஷேகம் செய்து,நைவேத்தியத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு எட்டு தடவை செய்து முடித்த நூறு நாட்களுக்குள் நமது ஜாதகப்படி இருக்கும் எந்த ஒரு பிரச்னை/கர்மவினை/துயரங்கள்/கஷ்டங்களும் விலகி ஒரு மகத்தான சுபிட்சத்தை அடைந்துவிடுவோம்.


ஸ்ரீகால பைரவருக்குரிய அபிஷேகப் பொருட்கள்:


அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால்,விபூதி,மஞ்சள் பொடி,அரிசிப்பொடி என்ற மாப்பொடி,நல்லெண்ணெய்,வில்வம் இவைகளுடன் நைவேத்தியமாக ஒரு கிலோ வரையிலான டயமண்டு கல்கண்டு,வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட தயிர்ச்சாதம்,வீட்டிலேயே சமைக்கப்பட்ட மிளகுவடை போன்றவைகள்;


27 நட்சத்திர பைரவர்களையும்,அவர்கள் அருளும் ஆலயங்களின் பட்டியலையும் இங்கே பார்க்கலாம்:


1.அசுபதி/அஸ்வினி=ஞான பைரவர்=பேரூர்
2.பரணி=மஹாபைரவர்=பெரிச்சியூர்
3.கார்த்திகை=அண்ணாமலை பைரவர்
4.ரோகிணி=பிரம்ம சிரகண்டீஸ்வரர்=திருக்கண்டியூர்
5.மிருகசீரிடம்=க்ஷேத்ர பாலர்=க்ஷேத்ரபாலபுரம்
6.திருவாதிரை=வடுக பைரவர்=வடுகூர்
7.புனர்பூசம்=விஜயபைரவர்=பழனி
8.பூசம்=ஆஸினபைரவர்=ஸ்ரீவாஞ்சியம்
9.ஆயில்யம்=பாதாள பைரவர்=காளஹஸ்தி
10.மகம்=நர்த்தன பைரவர்=வேலூர்
11.பூரம்=பைரவர்=பட்டீஸ்வரம்
12.உத்திரம்=ஜடாமண்டல பைரவர்=சேரன்மகாதேவி
13.அஸ்தம்=யோகாசன பைரவர்=திருப்பத்தூர்
14.சித்திரை=சக்கர பைரவர்=தருமபுரி
15.சுவாதி=ஜடாமுனி பைரவர்=பொற்பனைக் கோட்டை
16.விசாகம்=கோட்டை பைரவர்=திருமயம்
17.அனுஷம்=சொர்ண பைரவர்=சிதம்பரம்
18.கேட்டை=கதாயுத பைரவர்=சூரக்குடி,டி.வயிரவன்பட்டி,திருவாடுதுறை
19.மூலம்=சட்டைநாதர்=சீர்காழி
20.பூராடம்=வீரபைரவர்=அவிநாசி,ஒழுகமங்கலம்
21.உத்திராடம்=முத்தலைவேல் வடுகர்=கரூர்
22.திருவோணம்=மார்த்தாண்டபைரவர்=வயிரவன் பட்டி
23.அவிட்டம்=பலிபீடமூர்த்தி=சீர்காழி,ஆறகழூர்(அஷ்டபைரவ பலிபீடம்)
24.சதயம்=சர்ப்ப பைரவர்=சங்கரன்கோவில்
25.பூரட்டாதி=அஷ்டபுஜபைரவர்=கொக்கராயன்பேட்டை,தஞ்சை
26.உத்திரட்டாதி=வெண்கலஓசை பைரவர்=சேஞ்ஞலூர்
27.ரேவதி=சம்ஹார பைரவர்=தாத்தையங்கார் பேட்டை


குறிப்பு: ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு தாராளமாகச் செய்யலாம்.ஒரே நட்சத்திரத்தில் பிறந்த கணவன்மனைவி/ சகோதரர்கள்/ ரத்த உறவுகள் சேர்ந்து கூட்டு அபிஷேகம் செய்து வழிபாடும் செய்யலாம்.காலத்தை இயக்குபவராக ஸ்ரீகால பைரவர் இருப்பதால் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு ஒன்றே போதும்.நமது அனைத்து வித தோஷங்கள் நீங்கிட!!!இந்த ரகசியத்தினை நமக்கு அருளிய நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கோடி நன்றிகள்!!!


ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ
 
 

மனித உயிர்களின் ஜீவிதகாலம் நிறைவடைந்தப் பின்னர்,இப்பூவுல வாழ்க்கையில் புண்ணியம் செய்தவர்களானாலும்,பாவங்களைச் செய்தவர்களானாலும் தர்மலோகம் சென்று அங்கு தர்மராஜர் முன்பு நிறுத்தப்படுவர்;அங்கே அவரவர் செய்த நற்செயல்கள்(புண்ணியம்) மற்றும் தீயச்செயல்கள்(பாவங்கள்) ஆகியவற்றுக்கேற்ப புண்ணிய உலகங்களுக்கோ அல்லது நரக உலகத்திற்கோ அல்லது மீண்டும் இப்பூவுலகிற்கோ அனுப்பப்படுகிறார்கள்.(ஆதாரம்:கருடபுராணம்)
மகத்தான புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தமஜீவர்களுக்கு தர்மராஜர் சம ஆசனம் கொடுத்து அவர்களை கவுரவித்துவருகிறார்;கவுரவிப்பார்;அதன்பின் புண்ணிய உலகங்களுக்குச் சகல மரியாதையுடன் சொர்ணமயமான விமானங்களில் அனுப்பி வைத்தார்;வைக்கிறார்;வைப்பார்;என்றும் புராணங்கள் விவரித்துள்ளன.
மறுபிறவியற்ற ஜீவன் முக்தர்கள் திருக்கையிலாயம்,பரமபதம் போன்ற உலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்;அங்கு இறைவனுடன் ஒன்றி நித்திய சாயுஜ்யப் பதவியைப் பெற்றுவிடுவர்.
இந்நிலையில் இப்பூவுல வாழ்க்கையின் போது அளவற்ற பாவங்களைச் செய்தவர்களைக் கூட பயங்கரமான,கொடிய தண்டனையைக் கொடுக்க அவ்வளவு எளிதில் தர்மராஜனுக்கு மனவராதாம்.ஆதலால்,அத்தகைய பாவிகள் கூட ஏதாவது ஒரு சிறு புண்ணியம் செய்திருந்தால் அதனைக் காரணம் காட்டியாவது மீண்டும் உலகிற்கே மறுபிறவி எடுக்க அனுமதித்து நரகவேதனையில் இருந்து அந்த ஜீவனைக் காப்பாற்றிவிடலாம் என கருணை மிகுந்த தன் திருவுள்ளத்தில் நினைப்பாராம் தர்மராஜர்.
ஆதலால்,கொடிய பாவங்களைச் செய்துள்ள ஜீவனைப் பார்த்து சிறு புண்ணிய காரியமாவது செய்திருக்கிறாயா? பசித்தவனுக்கு உணவு கொடுத்திருக்கிறாயா? புண்ணிய நதியில் நீராடியிருக்கிறாயா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வருவாராம்;எல்லா கேள்விகளுக்குமே ‘இல்லை’ என்று சொல்லும் ஜீவனிடம் கடைசி முயற்சியாக “ கொக்கராயன் திருக்கோவில் கோபுரத்தையாவது கண்ணால் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்பாராம்.
இந்த சிறு புண்ணியத்தையாவது அந்த ஜீவன் செய்திருந்தால் அந்த காரணத்தைக் கொண்டு அந்த ஜீவனின் நரகவேதனையைத் தவிர்த்துவிடலாமே என்று ஏக்கத்துடன் தான் இக்கேள்வியைக் கேட்பாராம். ‘அவற்றை நான் பார்த்ததில்லை’ என்று அந்த ஜீவன் பதிலளித்துவிட்டால் வேறு வழியில்லை என்று நரகத்திற்கு அனுப்பி வைப்பாராம்.
புராணத்தில் இருக்கும் ஸ்தலவரலாறு:
பிரம்மதேவனுக்கு ஒருமுறை படைப்புத் தொழிலைச் செய்யும் யாமே பெரியவர் என்ற ஆணவம் கொண்டு சிவனை வணங்காது இருந்தார்.ஆணவம் தலைக்கேறியது.சிவ அபவாதம் நேரிட்டது.அப்பாவச் செயலால் மறதியில் வீழ்ந்தான் பிரம்மன்.உறக்கத்தில் ஆழ்ந்தான்;உறக்கம் நீங்கி எழுந்தான்.எப்போதும் போல படைப்புத்தொழில் செய்ய முனைந்தான்;தொழில் கைகூடவில்லை! என்ன செய்வது? என்று அறியாமல் திகைத்தான்.
ரிக்,யஜீர்,சாம,அதர்வணம் என்ற நான்கு வேதங்களையும் கொண்டு நான்முக பிரம்மா படைப்புத்தொழில் இயற்ற இயலாமல் வருந்து சிவப்பரம்பொருளை நோக்கித் தியானித்தார்.அப்போது தேவரிஷி நாரதர் அவர் முன் தோன்றி, “நீங்கள் செய்த சிவ அவராதம் மிகவும் கொடியது.எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமான் மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமாய் நிற்கும் மூர்த்தி பசுபதியாகி ஆன்மாக்களிடம் மலத்தேய்வை ஏற்படுத்த பிறவிகள் தோறும் பிறப்பெடுக்கச் செய்கிறார்.ஆணவம்,மாயம்,கன்ம மலங்களை விடுத்து பசுவாகிய உயர்பதியாகி இறைவனோடு சேர பூவுலகில் பல்வேறு இடங்களில் ஆலயம் அமைத்து பக்திநெறி செலுத்தி உய்ய வழி செய்துள்ளார்.
நீவிர் செய்த கொடுஞ்செயலுக்கு ஈரோடு காவிரிக்கரையில் மாமரங்கள் அடர்ந்த(கொக்கு=மாமரம்) கொக்கு அரையன் பேட்டை வனத்தில் தவம் இயற்றினால் சிவபெருமான் காட்சி தருவார்.உமது பாவம் தீரும்” என்றார்.
பிரம்மனும் பூவுலகிற்கு வந்து,காவிரிக்கரையில் லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து,பல ஆண்டுகள் தவமிருந்தார்.பிரம்மன் உருவாக்கிய லிங்கமே பிரம்மலிங்கம் என்ற பெயரில் அருள்பாலித்துவருகிறார்.பிரம்மனது தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அங்கு தோன்றி பிரம்ம தேவரின் சிவ அபவாதத்தை நீக்கினார்.பிரம்ம தேவரின் வேண்டுதலின்படி இவ்விடத்திற்கு வந்து வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்து வளமான வாழ்வு பெறா ஸ்ரீபிரம்மதேவர் பூஜித்ததாக ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஸ்தலபுராணம் தெரிவிக்கிறது.
இங்குள்ள பைரவப்பெருமான் சிறப்பு அம்சங்களைக் கொண்டவர்.எட்டுத் திருக்கரங்களுடன்,நாய் வாகனம் இன்றியும்,முப்புரிநூலாக நாகத்தை அணிந்தும் காட்சி தருகிறார்.இத்தகைய வடிவத்தை வடுகபைரவர் என்று ஆகமசாஸ்திரம் தெரிவிக்கிறது.அஷ்ட பைரவர்களில் இவர் சத்ரு சம்ஹாரபைரவராக இருக்கிறார்.சத்ரு உள்ளவர்கள் இங்கே வந்து தேய்பிறை அஷ்டமி நாட்களில் வரும் இராகு காலத்தில் தேங்காய்மூடியில் அல்லது சாம்பல் பூசணி(திருஷ்டிப் பூசணி)யில் விளக்கு ஏற்றி,பைரவ சஷ்டிக்கவசம் பாடி வழிபட்டால்,எதிரிகள் அடங்குவர் என்பது ஐதீகம்.
நாமக்கல் மாவட்டம்,திருசெங்கோடு வட்டத்தில் கொக்குராயன்பேட்டையில் ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.ஈரோட்டில் இருந்து 16 கி.மீ.தொலைவில் இவ்வூர் அமைந்திருக்கிறது.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,தனது ஜன்ம நட்த்திர நாட்களில் இங்கே வந்து,மூலவருக்கும்,ஸ்ரீகாலபைரவருக்கும் அபிஷேகம் செய்தால்,வளமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.தொடர்ந்து எட்டு ஜன்ம நட்சத்திர நாட்களில் வந்து வழிபடுவது நன்று.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
 
 
 

நவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)

செவ்வாயின் பிராண தேவதை: சண்ட பைரவர் + கவுமாரி


ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்



ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: கவுமாரி ப்ரசோதயாத்



கிழமை செவ்வாய்
ஓரை செவ்வாய் ஓரை
எண்ணிக்கை 9 ன் மடங்குகள்
இடம் பைரவர் சந்நிதி



தென்னாடுடைய சிவனே போற்றி…!
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
  ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
 
 

Blog Archive

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates