Followers

Powered by Blogger.

ஹோமியோபதி விவசாயம்.,3
(முந்தைய கட்டுரையின் செழுமை வடிவம்)
பயிர்களுக்கு வரும் முக்கியமான பேன் போன்ற பூச்சிகள் தான் அவை ஒருமாதிரி பிசுபிசுவென இலைகளை ஆக்கி மாவு போன்ற பொருளை சுரந்து பயிர்த்தண்டை பாழாக்கி விடும். இவற்றுக்கு அவற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் ஹோமியோபதியில் சிறப்பான நிவாரணிகள் உள்ளன.
ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்தும் முறை:
பயிர்களுக்கு தேவையான பொருத்தமான மருந்தை திரவ வடிவில் (DILUTION) அல்லது இனிப்பு உருண்டை வடிவில் (GLOBULES) வாங்கி வைத்துக் கொள்ளவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 5 சொட்டு அல்லது 5 உருண்டைகள் போட்டு நன்றாக கலக்கவும், குச்சியோ அல்லது கரண்டியோ கொண்டு நன்கு ½ மணி நேரம் கலக்கவும். கலக்கியபின் தெளிப்பான் உதவியுடன் பயிர்களுக்கு தெளிக்கலாம்;அல்லது சொட்டுநீர்ப்பாசானமாக இருந்தால் பாசான நீரில் கலந்து விடலாம்.
மருந்து ஒரு முறை தெளித்தால் அல்லது நீரில் பாய்ச்சினால் போதுமானது, பயிரின் நிலைமையை பொறுத்து இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்கலாம்.
பயிரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மீண்டும் மருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை; முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் மீண்டும் அதன் அறிகுறிகளை உற்று கவனித்து அதற்கு பொருத்தமான மருந்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டி வரலாம்.
பேன் தொல்லையுடன் இலை சுருண்டு போதல்,/பூ சுருண்டு போதல், ஒட்டக்கூடிய வகையான சுரப்புகள் உள்ள நோய்த் தன்மைக்கு சிமிசிபுகா (Cimicifuga) 30 ஓர் அருமையான மருந்து.
பேன் தொல்லையுடன் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட(அதாவது பராமரிக்காமல் அல்லது தண்ணீர் விடாமல் விடப்பட்ட) அல்லது அதிக உரமூட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அல்லது தாவரங்களுக்கு நேட்ரம் குளோரேட்டம் (Natrium chloratum) 30 .
பேன் தொல்லையுடன் பலவீனமான குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்களுக்கு சோரினம் (Psorinum) 200 முக்கிய மருந்து
பேன் தொல்லைக்கு மிக முக்கியமான மருந்து அதனுடன் காயங்களாலோ,அடிபட்டதாலோ பலவீனமடைந்த தாவரங்களுக்கு ஸ்டாபிசாக்ரியா Staphysagria 30 அல்லது200

LikeShow more reactions
Comment
.


விவசாயிகளின் தோழன்
ஹோமியோபதி சிலிக்கா
எந்த ஹோமியோ மருந்து பலவீனமான தாவரங்களை பலமாக்குகிறது? பாலைவனத்தை சோலைவனமாக்குகிறது? களைகளை களையும் மருந்தாக.. நீர் தேங்காமல் வறண்டிருக்கிற நிலத்தை ஈரப்பதமான வளமான மண்ணாக்கும் மருந்து எது?????
சிலிக்கா (எ) சிலீஜியா
Silicea!
வேறெந்த மருந்தும் இவ்வளவு குறைவான விலையில் பலவிதமான பயிர்களின் பிரச்சனைகளையோ, பலவிதமான மண் பிரச்சனைகளையோ தீர்க்கமுடியாது.
சிலிக்கா(SILICA) என்பது வெறும் மணல் அது ஹோமியோபதி முறையில் வீரியப்படுத்தப்பட்டு இலத்தீன் பெயரான சிலீஜியா(SILICEA) என்று அழைக்கப்படுகிறது.
சிலிக்காவின் பயன்களை ஒரு முறை அறிந்த எந்த ஒரு விவசாயியும் தனது தோட்டத்தில் சிலிக்கா இல்லாமல் விவசாயம் செய்யமாட்டார்.
ஏன் என்று பார்ப்போம்.
விவசாயத்தில் சிலிக்காவின் பயணம் எப்படி தொடங்கியது?
ஹோமியோபதியில் சிலிக்கா ரொம்ப காலமாகவே மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் வரக்கூடிய நோய்களைத் தீர்க்க பயன்பட்டு வருகிறது, ஆனால் பயிர்களுக்கும் மண் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இதன் பயன்பாடு அறியப்படாதது மட்டுமல்ல புதியதும் ஆகும்.
மனிதர்களுக்கு (விலங்குகளுக்கும் கூட) எதற்கு பயன்படுகிறது சிலிக்கா?
தன்னம்பிக்கையின்மை,வறண்ட தோல், பலவீனம், சோர்வு, தாமதமான வளர்ச்சி, புண் சீக்கிரம் ஆறாமை,நோய்த்தொற்று மற்றும் சீழ்க்கட்டிகள்,செழிப்பின்மை.
இந்த குறிகள் பயிர்களிலும் நிலத்திலும் ஒத்திருந்ததை கண்ட ஹோமியோபதியர் சிலிக்காவின் பரந்து அகன்ற பயனை உணர்ந்தனர்.
தோட்டக்கலை மற்றும் விவசாயத்தில் சிலிக்காவினது போன்ற நோய்க்குறிகள் சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டன.இது விவசாயத்தில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு.இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகளை திருப்ப இது ஓர் அத்தியாவசிய தேவை.
பயிர்களின் ஆரோக்கியம் மற்றும் பலத்திற்கு சிலீஜியா:
இயற்கையாக சிலிக்கா மண்ணில் இல்லாமல் தாவரங்களால் நிற்கவோ அல்லது வளரவோ முடியாது. சிலிக்கா ஒவ்வொரு செல்லிலும் திசுவிலும் வேலை செய்து பலத்தையும், உறுதியையும் கொடுக்கிறது.இது செல்களில் நடைபெறும் எல்லா நடைமுறைகளையும் சீராக்குகிறது, மற்றும் உடையக்கூடிய நிலையில் இருந்தாலும் இது ஆரோக்கியமான எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. மண்ணில் சிலிக்கா சத்து இல்லாமல் இருந்தாலோ அல்லது தாவரங்களால் சிலிக்காவை கிரகிக்க முடியாமல் போனாலோ ஹோமியோபதி சிலிக்கா இந்த உலகத்தையே மாற்றுகிறது.
பலவீனமான மெலிந்த மற்றும் நீண்டு களைபோல வளரும் தாவரங்கள்,பூஞ்சைத்தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சாத்தியமுள்ள தாவரங்கள் எல்லாம் சிலிக்கா தெளிக்கப்பட்ட சில நாட்களிலே உறுதியாகவும் தீவிரமான பலத்துடனும் வளர்வதை கண்டு வியப்பில் ஆழ்வீர்கள்.
சிலீஜியா மண்ணுக்கான சத்து மருந்து
உண்மையில் மண்ணில் அரிதாக சிலிக்கா இல்லாமல் இருந்தால் சிலிக்காவை அப்படியே மண்ணுக்கு ஊட்டச்சத்தாக கொடுப்பதோ, துணை உரமாகக் கொடுப்பதோ கடினமானது- அதே நேரத்தில் ஹோமியோபதியில் வீரியப்படுத்திய சிலிக்கா தெளித்தபின் பயிர்களின் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல் மண்ணில் உள்ள சிலிகாவை உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. இதற்கும் மேலாக மண்ணின் அயனியாக்கத்தில் வினை புரிந்து அதை மாற்றி மண்ணானது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
நாற்று நடுதலால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் பிற அதிர்ச்சிகளை தடுக்கிறது சிலீஜியா
நாற்று பிடுங்கி ஓர் இடத்தில் இருந்து வேறொரு இட்த்தில் நடுவது, பதியன் இடுவது,கிளைகளை வெட்டி நடுவது,இடம் மாற்றம் செய்யும்போது வேருக்கு ஏற்படும் பாதிப்பு அல்லது கடுமையான தட்பவெப்ப மாற்றங்கள் இவற்றால் தாவரங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு அதனால் வளர்ச்சி தடைபெறலாம்,அல்லது வெய்யிலில் வாடிப்போகலாம்,இலைகள் உதிர்ந்துபோகலாம்,அல்லது பயிரே காய்ந்து இறந்து போகும் ஆபத்தும் ஏற்படலாம்.
ஒரே ஒரு முறை சிலீஜியாவை நடவுக்கு முன்போ அல்லது பின்னரோ தெளித்தால் அது பயிரை பலமாக்கும் அதிர்ச்சியில் இருந்து விடுவிக்கும், சோர்வைத் தடுக்கும்.
பூச்சிகளுக்கும் நோய்களுக்கும் எதிராக தாவரங்களை பலப்படுத்துகிறது சிலீஜியா
ஹோமியோபதி சிலிக்கா தாவரங்களை பூஞ்சைகள்,காளான்கள் ,பூஞ்சைக்காளான்,வேர்க்கரையான் மற்றும் சில அரித்துத் தின்னும் காளான்களிடமிருந்தும் பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் பூச்சிகளிடமிருந்தும்(அசுவினி,மொக்குப்புழு,நாரத்தைப்பூச்சிகள்,பழ வண்டுகள்) பயிர்களை பாதுகாக்கிறது. ஆனால் கவனம் ஒரே முறை மட்டும் தான் தெளிக்க வேண்டும்.
ஹோமியோபதி விவசாயத்தந்தை வைகுந்தநாத் தாஸ் கவிராஜ் அவர்கள் தன்னுடைய புத்தகமான HOMOEOPATHY FOR FARM AND GARDEN இல் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். ஒரு மரக்கன்று ‘நுனியில் தொடங்கி அடி வரை கருகும் நோயில்’ (dieback disease)பாதிக்கப்பட்டு முக்கால்வாசி பட்டை கருகிவிட்டது. ஒரு பகுதி பட்டையில் மட்டும் பச்சையம் இருக்கிறது,அதுவும் தளர்ந்து வறண்டு மடியும் தருவாயில் இருந்தது.
சிலீஜியா கொடுத்த ஒரு நாளிலே பட்டைகளில் பச்சையம் துளிர்த்து நடுத்தண்டுடன் ஓட்ட தொடங்கியது, அடுத்த ஒரு வாரத்திலே அதிசயம் நிகழத் தொடங்கியது, மரம் புது இலைகளுடன் துளிர் விட ஆரம்பித்தது.நுனியிலிருந்து கருகுதல் நோயானாது உலகின் பல நாடுகளில் கட்டுப் படுத்த முடியாத நோயாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் அல்லது தீர்க்கும் இந்த முறையானது வரவேற்கக்கூடிய செய்தியாகும்.
விதையின் முளைப்புத் திறனை தூண்டுகிறது சிலீஜியா:
விதைகளை விதைப்பதற்கு அரை மணி நேரம் முன்பு சிலீஜியா கரைத்த கரைசலில் விதைகளை முக்கி அரை மணி நேரம் வைத்து எடுத்து பின் விதைத்தால் அது பல வருடங்களாக பாதுகாத்த விதையாக இருந்தாலும் அதன் முளைப்புத் திறனை தூண்டுகிறது சிலீஜியா. சிலீஜியா கரைசலில் முக்கி எடுக்கப்பட்ட விதையானது, விதைத்த அடுத்த சிலநாட்களிலே உறுதியான வேர்களுடன் தளிர் விடத் தொடங்கும், பயிரும் செழிப்பாக வளரும். அது மட்டுமில்லாமல் நோய்த்தாக்குதலில் இருந்து தடுப்பதுடன் பூச்சிகளின் தாக்குதலையும் குறைக்கிறது.
சிலீஜியா அழகான மற்றும் விருத்தியுடைய மலர்களை உற்பத்தி செய்கிறது:
ஒரு முறை மலர்மொட்டுகள் மீது சிலீஜியா தெளித்து விட்டால் அது மலரும் பூக்களின் அளவையையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்
சிலீஜியா களையை ஒழித்து நிர்மூலமாக்குகிறது:
வருடாந்திர களைப் பிரச்சனைகளை பாதுகாப்பாக களைகிறது சிலீஜியா. களைச்செடிகள் பூ வைக்கும் தருணத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறையாக இரண்டு தடவை களைச்செடிகளின் பூக்களின் மீது மட்டும் கவனமாக தெளித்து விடுங்கள்.பின் அந்த பூக்கள் முதிராமலே உதிர்ந்து விடும்,அடுத்த வருடத்திற்கான களைச்செடியின் விதையும் இல்லாமல் போய்விடும்.
இது தான் ஹோமியோபதி ..ஒரு முறை தெளித்தால் அது மருந்தாக வேலை செய்யும்.அதே பல தடவை தெளித்தால் அதுவே நோயை உண்டு செய்யும்.இது ஹோமியோபதி தத்துவம்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..இந்த பழமொழி ஹோமியோபதிக்கும் பொருந்தும்.
சிலீஜியா காய் நன்கு பிடிக்க செய்கிறது மற்றும் பழங்கள் உதிர்வதை தடுக்கிறது :
பூக்கும் தருவாயில் ஒரே ஒரு முறை சிலீஜியா தெளித்து விட்டால், அது செடியோ, மரமோ அது நன்கு காய் பிடிக்க உதவுகிறது, பிஞ்சு உதிர்தலை தடுக்கிறது. பழங்கள் பிஞ்சிலே உதிர்ந்து விடாமல் உறுதியாக இருக்க உதவுகிறது.
ஆனால் எச்சரிக்கை.! ஒரே தடவை மட்டும் தான் தெளிக்க வேண்டும், நிறைய தடவை தெளித்தால் எல்லாம் தலைகீழாகிவிடும். களைச்செடிகள் அழிவது போல் அறுவடைக்கு முன்பே பயிர்களும் அழிந்துவிடும்.
சிலீஜியா மண்ணை வளமாக்கி நல்ல நீர் தேக்கியாக, சத்தை உறிஞ்சக்கூடிய வகையில் மாற்றுகிறது.
சிலவகையான நிலங்கள் நீரை ஏற்காது புறந்தள்ளிவிடும். சில ஓடைமண், களிமண் நிலங்கள்,சரளைமண் நிலங்கள்,புழுதிமண் வயல்கள் மற்றும் சில கரிம தாதுக்கள் அதிகம் கொண்ட மண் எல்லாம் நீரை உறிஞ்சாமல் ஓடவிட்டுவிடும். நீரை கிரகிக்கும் தன்மை இவ்வகையான நிலங்களுக்கு குறைவு.மழை பெய்தாலும் நீர் பாய்ச்சினாலும் இவ்வகையான நிலங்களில் நீர் தேங்காது ஓடிவிடும், ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு தக்க வைக்க இந்த வகையான நிலங்களுக்கு திறன் இருக்காது. இதனால் இந்த நிலங்களில் விளையும் பயிர்கள் நீரின்றி வறண்டு கிடக்கும்.
சிலீஜியா இதை மாற்றும். ஒரு முறை சிலீஜியா பாய்ச்சினால் அல்லது தெளித்து விட்டால் போதும் மண்ணின் தன்மையை மாற்றிவிடும்,பின்னர் மந்திரம் செய்தாற்போல் அந்த மண்ணானது நீரை கவர்ந்து ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும், நீர் உறிஞ்சு திறனும் மேம்படும்.
குறிப்பு:
சிலீஜியா மனையாக மாற்றப்பட்ட அல்லது கெட்டிதட்டிப்போன நிலங்களை சீர்படுத்தாது, இவ்வகையான நிலங்களை முதலில் உழுது செம்மைப்படுத்த வேண்டும் பின்னரே சிலீஜியா பாய்ச்ச வேண்டும்.
பாலைவனத்தை சோலைவனமாக்கும் சிலீஜியா:
சிலீஜியாவின் குறிப்பிடத்தக்க திறன் என்னவென்றால் குறுகிய காலத்தில் பாலைவனத்தை சோலையாக்குவதுதான்.
ஒரு முறை சிலீஜியா பாய்ச்சப்பட்டால் மழை பெய்யா காலங்களில் கூட
6 வாரம் வரை ஈரப்பதத்தை சேமிக்குமளவுக்கு மண்ணை பக்குவப்படுத்திவிடும்.
சிலீஜியா பாய்ச்சிய பின் மக்கிய குப்பை மற்றும் மாட்டுச்சாணம் போன்ற இயற்கையாக கிடைக்கக்கூடிய உரங்களையும் போட்டால் மண் இன்னும் வளம்பெறும்.
கவிராஜ் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது 1990களில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அடிக்கடி குறிப்பிடுவார். மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் கவிராஜூம் அவரது நண்பர்களும் ஒரு பண்ணையில் மரம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நிலமானது கரடுமுரடாக முற்றிலும் வறண்டு முழுதும் மணலாக இருந்தது.
கவிராஜ் அவர்கள் அந்த நிலம் முழுதும் சிலீஜியாவை தெளித்துவிட்டு 6 வாரங்கள் கழித்து மரம் நடலாம் என திரும்பி விட்டார்.
6 வாரங்கள் கழித்து பல நூறு மரக்கன்றுகளுடன் வந்த நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம்! முற்றிலும் வறண்ட மணல் மேடு இப்போது பசுமையாக ஈரப்பதத்துடன் ஆங்காங்கே சில பயிர்கள் துளிர் விட்டிருந்தது. அனைத்து மரக்கன்றுகளையும் நட்டுவிட்டு அடுத்த 6 வாரங்களுக்கு பிறகு வந்து பார்க்கும்போது இந்த மண்ணில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை விட அதிகமாக எல்லா மரக்கன்றுகளும் நன்கு உறுதியாக, செழிப்பாக மளமளவென்று வளர்ந்திருந்தன.இவை அனைத்தும் நடந்தது ஒரு முறை மட்டும் தெளிக்கப்பட்ட சிலீஜியாவால். இதுவரை இப்படி வறண்ட நிலம் பசுமையானதாக மாறி என் வாழ்நாளில் கண்டதில்லை என கவிராஜ் குறிப்பிடுகிறார்.
புல்லே முளைக்காத மேட்டாங்காடுகளையும் பசும் புல்வெளியாக மாற்றும் திறன் சிலீஜியாவுக்கு உண்டு என கவிராஜ் குறிப்பிடுகிறார்
“சிலீஜியா பசுமைப்புரட்சியானது நடைமுறைக்கு வந்தால் மேலும் பல பாலைநிலங்கள் சாகுபடி நிலங்களாக மாறும், அவை கார்பன் டைஆக்சைடு உள்வாங்குதலை மேலும் 30லிருந்து 40% வரை அதிகப்படுத்தி அதன்மூலம் கார்பன் சுழற்சியை ஒழுங்குபடுத்தி உலக வெப்பமயமாதலை கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமல்லாமல் வறட்சியால் பஞ்சம்,பட்டினி வராது,அனைவருக்கும் உணவு நிச்சயம் கிடைக்கும். பட்டினியால் இறப்பு நிகழாவண்ணம் இந்த உலகம் மாறும்.இப்பூமி சொர்க்கமாக மாறும்” என கவிராஜ் உறுதியாக கூறுகிறார்.
எச்சரிக்கை:
எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அது அமிர்தமே ஆனாலும் நஞ்சு தான் என்பது சிலீஜியா விஷயத்தில் மிகச்சரியானது. ஏனெனில் ஹோமியோபதியை பயன்படுத்தும் விவசாயிகள் விளைச்சலை அதிகரிக்கும் ஆசையில் திரும்ப திரும்ப தேவையற்ற வகையில் அளவுக்கதிமாக சிலீஜியாவை கொடுத்து விட்டு மோசமான எதிர்விளைவுகளை கண்டு நம்மிடம் குறை சொல்வார்கள். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமானால் திடகாத்திரமான மரத்திற்கு சிலீஜியாவை திரும்ப திரும்ப கொடுத்தால் மரமானது உருக்குலைந்து பூச்சித்தாக்குதலுக்கு ஆளாகி சிலீஜியாவின் எந்த நோய்க்குறிகளை குண்ப்படுத்துமோ அந்த நோய்க்குறிகள் அனைத்தும் அந்த மரத்தை தாக்கும்.
(இந்த நிகழ்வுகள் இதன் தத்துவமான நிரூபண விதி பற்றி விரிவாக ஹோமியோபதி தத்துவத்தை விவரிக்கும் புத்தகமான ‘Organon of Medicine’ இல் Dr Samuel Hahnemann சொல்லியிருக்கிறார்.)
இதுவே தான் விதை மற்றும் காய்கனி விஷயத்திலும் நடக்கிறது.ஒருமுறைக்கு மேல் பூக்கும் பருவத்தில் சிலீஜியா தெளிப்பதால் காய்,விதை உற்பத்தியாவதற்கு பதிலாக நின்றுவிடும். திரும்ப திரும்ப தெளிப்பது களைச்செடிகளை ஒழிப்பதற்கு வேண்டுமென்றால் நன்மை பயக்கும்,ஆனால் வளர்ந்துவரும் காய்கனிகளுக்கு விரும்பத்தக்க விளைவைக் கொடுக்காது.
மேலும் இறுதியாக சிலீஜியா எப்படி பாலையை சோலையாக்குமோ அதுபோல அதிகப்படியாக கொடுத்தால் சோலையையும் பாலையாக்கிவிடும். ஒரு தடவை,ஓரே தடவை அதுவே பசுமையாக்க போதுமானது- அதிக அளவு ஆபத்தானது.எவ்வளவு குறைவான அளவில் மருந்தை தருகிறோமோ அந்த அளவுக்கு நல்லது. அப்போது மட்டுமே ஹோமியோபதி நன்றாக வேலை செய்யும்.
எப்படி பயன்படுத்துவது சிலீஜியாவை?
பொதுவான வீட்டுத்தோட்ட உபயோகத்திற்கு சிலீஜியா 6c ஒரு உருண்டையை 200மில்லி நீரில் கலந்து நன்கு பலம் கொண்டவரை குலுக்கவேண்டும்,அதற்கு பிறகு செடியிலோ அல்லது மண்ணிலோ ஈரமாகும் வரை தெளிக்கவேண்டும்.அவ்வளவுதான் எளிது.!
விவசாயிகள் உபயோகத்திற்கு தண்ணிரின் அளவையும் மருந்து உருண்டையின் அளவையையும் தேவைக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.ஒன்றே நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,ஒருமுறை மட்டுமே தெளிக்க வேண்டும்.
களைச்செடிகளை அழிக்க மட்டும் இரண்டு அல்லது மூன்று முறை அதுவும் கவனமாக களைச்செடிகள் மேல் மட்டும் படும்படியாக தெளிப்பது அவசியம்.
விதைகளின் முளைப்புத்திறனை ஊக்குவிக்க 20 நிமிடங்கள் சிலீஜியா கலந்த கரைசலில் ஊறவைத்தலே போதுமானது.
சாராம்சம்:
சுருக்கமாக சொல்வதானால் ஒரு வேளை மட்டும் கொடுக்கப்பட்ட சிலீஜியா மண்ணில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தி அதன் உற்பத்தித்திறனையும் அதிகரித்து பயிரின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனைக் காக்கிறது.
மேலும் சிலீஜியாவால் நிலங்களில் காணப்படும் மாங்கனீசு நச்சுத்தன்மையை முறிக்கிறது,மண்ணின் அயனியாக்கத்தை மாற்றுகிறது;
ஈரப்பதத்தை தக்க வைக்கிறது;
முளைப்புத்திறனை ஊக்குவிக்கிறது;
மழைப்பொழிவு குறைவான இடங்களில் உள்ள தாவரங்களையும் வாழவைக்கிறது;
பலவீனமான தாவரங்களை பலமுள்ளதாக்குகிறது;
மரங்களை உறுதியாக்கி மரத்தண்டை தடிக்கவைக்கிறது அதன்மூலம் நுனிக்கருகல் நோயிலிருந்து காக்கிறது;
பயிரின் நோயெதிர்ப்புச்சக்தியை அதிகப்படுத்தி பூச்சிகளிடமிருந்தும் நோயிடமிருந்தும் காக்கிறது;
பெரிதான மற்றும் அதிகப்படியான மலர்களையும் பழங்களையும் காய்களையும் தருகிறது;
உடையும் தண்டுகள் மற்றும் இலைகளுக்கு பதிலாக உறுதியான தண்டுகளையும் இலைகளையும் தருகிறது;
மரப்புற்றுநோய்,கசப்பு நோய்,காயங்கள்,கத்தரித்துவிடுதலால் ஏற்படும் ஆறாத இரணங்கள்,இடித்தாக்குதல் மற்றும் செயற்கையான சேதங்களில் இருந்து விரைவில் குணமாகி மீண்டுவர தூண்டுகிறது;
ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு பிடுங்கி நடுதலால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் உளைச்சலில் இருந்து மீண்டு வர உதவுகிறது;
சிலீஜியாவின் குறிப்பிடத்தக்க இந்த அருஞ்சாதனைகள் தாவரங்களுக்கு பொருந்தும் அதேவேளை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொருந்தும் .என்ன சிலீஜியாவின் குறிகளுக்கு ஒத்து இருக்க வேண்டும்.
விவசாயத்தில் வெற்றி பெற ஒரே வழி தாவரத்தின் நோயும் மருந்தின் குணங்குறிகளும் ஒத்துபோகிறதா என்பதை அறிவதே. இதை புரிந்து கொண்டால் நீங்கள் இயற்கையை புரிந்து கொள்கிறீர்கள்.,ஹோமியோபதியை புரிந்துகொள்கிறீர்கள்.
முடிவாக உங்கள் தாவரங்களுக்கு இது போல் பிரச்சனைகள் இருப்பின் சிலீஜியாவை பயன்படுத்திப் பாருங்கள். விளைவு அற்புதமாக இருக்கும்.
மேலும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை எங்களிடம் கேளுங்கள்.
credit to:
*homeopathyplus .com
*ஹோமியோபதி விவசாயத்தந்தை வைகுந்தநாத் தாஸ் கவிராஜ் அவர்களின் புத்தகமான HOMOEOPATHY FOR FARM AND GARDEN
#drprema
#drcharuvagan
agrohomoeopathy whatsapp team
aproch dindigul

https://www.facebook.com/BalasubramanianPazhaniappan?hc_ref=NEWSFEED



HE MIXED 3 INGREDIENTS AND APPLIED TO HIS HAIR! THE RESULTS AFTER 7 DAYS…UNBELIEVABLE!


Hair loss can be difficult to come to terms with. If you start to lose your hair, it can feel as if you’re losing part of your identity. This can affect your self-confidence and sometimes lead to depression.
The most common cause of hair loss is a medical condition called hereditary hair loss. About 80 million men and women in the United States have this type of hair loss.
There are many causes of hair loss. Women may notice hair loss after giving birth. People under a lot of stress can see noticeable hair loss. Some diseases and medical treatments can cause hair loss.
Beer is generally prepared from hops and malt, both of which are excellent sources of protein. In addition to protein, you’ll also get many other nutrients such as magnesium, potassium, phosphorous, B Vitamins (particularly biotin) from beer. Biotin prevents hair loss and helps promotes healthy hair growth. It also keeps dandruff away.
Bananas are a very rich source of potassium and vitamins A, E, and C, which make them the perfect choice for homemade hair growth treatments.

BEER AND HONEY HAIR MASK
Ingredients:
  • 1 egg yolk
  • ½ banana
  • ½ cup of beer (100 ml)
  • 1-2 tablespoon of honey
Directions: Put all the ingredients in a blender and mix well. Apply the mixture on your hair and wrap head with a plastic bag. Leave it on for 1 to 2 hours. Then shampoo and apply your favorite moisturizing conditioner. Repeat this at least once a week and you will be amazed by the results.

பெர்லின்

மரணத்திற்குப் பின்  வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. காலங்காலமாக, நாகரீகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.

மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பது கிடையாது.மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே.மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்  என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவபரிசோதனை மூலம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது என கண்டறிந்து உள்ளனர்.

இந்த வியப்பூட்டும் அறிவிப்பு எனபது மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து  மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில் நுட்பத்தை  பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு  மூலம்  எடுத்த  ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டது.

இந்த சர்சைக்குரிய ஆய்வு கடந்த 4 ஆண்டுகளாக இறக்கும் தருவாயில் உள்ள 944 பேர் மீது  முக்கிய மருந்து கலவைகள் கொண்டு நடத்தப்பட்டு உள்ளது.எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ரீ அனிமேசன் முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவு இழந்த நிலையில் வைக்கப்படுகிறது.  இதற்கு, அந்த உடலின் ரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது.  டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் மற்றும் அவரது குழுவினர் அதன்பின்னரான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தொடங்குகின்றனர்.

அவற்றின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர்.  இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்). என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டது.  அதன் உதவியுடன் இது சாத்தியப்படுத்தப்பட்டது.

கடந்த சில வருடங்களில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.  அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன.  பல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் பற்றிய விசயங்கள் எதுவும் இல்லை.

தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சி அடைய செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஆய்வுக்கு எடுத்து கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர்.

ஆனால் மனிதகுல வரலாற்றின் பெரிய கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம்.  அதனால் மத நம்பிக்கை கொண்டவர்கள் எங்களை மன்னித்து விடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.  மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது.  இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம் என ஆக்கர்மேன் கூறுகிறார்.

படித்த இடம் :

http://www.dailythanthi.com/News/World/2016/07/25151603/German-Scientists-Prove-There-is-Life-After-Death.vpf

| edit post


வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை.
வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வேண்டாம்.
வாழைப் பழம் கைவசம் இருந்தால் போதுமானது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.ட்ரை பண்ணிவிட்டு சொல்லுங்க மக்களே.
***சோரியாஸிஸ் பிரச்சனையா?
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.
***மருக்கள் காணாமல் போகச் செய்ய :
மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.
***சரும அலர்ஜியா?
ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ட்ரை பண்ணுங்க. வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
***முகப்பருவை எதிர்க்கிறது:
முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.
***வெண்மையான பற்கள் பெற :
மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செயும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும். இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழத் தோல் இருக்கு பாஸ். அதை எடுங்க. தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.
***காயங்கள் ஏற்பட்டுள்ளதா?
பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னாங்க. காயம் வந்த அது ஆறதுக்குள்ள அங்கேயே திரும்ப அடிபடும். இதை நிறைய பேர் அனுபவப்பட்டிருப்பார்கள். வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுக்கு சிம்பிள் வழி தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிடும்.
வீணாய் வீசி எறியும் வாழைபழத் தோலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்கள்தானே. சிறு ஆணியும் பல் குத்த உதவும் என்பதை மறக்காதீர்கள். வாழைப்பழத் தோலினை வீசி எறியும் முன் மேலே சொன்ன எதற்காவது உபயோகப்படுமா என யோசித்துவிட்டுப் பின் எறியுங்கள்.



இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும்.
சந்திரகலையை மதி/இடகலை/
இடைக்கால் எனவும்,
சூரியகலையை பிங்கலை/
பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது.
அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு.
இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/
சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.
'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள்.
இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல.
மதி என்றால் சந்திரன்.
16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும்.
எனவே விதி முடிவும் விலகியே போகும்.
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு;
மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் .
உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம்.
மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம்.
இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.
நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள்.
வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது.
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .
இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது .
வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது.
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும்.
இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.
"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம்"
https://www.youtube.com/channel/UCgBKNGCCD8eGGh7dH-xijFA
http://www.agathiyarjanachithar.in/
WHATSAPP NO:+91-98428 46104
+91-93818 46104
"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"
"ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"


மீண்டும் பிறவாத நிலையை அருளும் ஆகமவிதிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ருத்ராகேஸ்வரர் திருக்கோவில் தேப்பெருமாநல்லூர்
மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர்.
புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.
மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.
""யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர் கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்று சொல்கிறார் ஆலய சிவாச்சாரியார்
சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி.
நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வை யால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.இதில் ஒரு பைரவரின் வாகனமான நாய் இடபுறமாக மாறி நிற்பதை காணலாம்
பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்? ஆணவம் கொண்ட சனிபகவான் ஈசனின் கோபத்தால் மகா பைரவராக அவதாரம் எடுத்து இராண்டாக கிழிக்கபட்ட சனிபகவான் இங்கு ஈசனை வழிபட்டு மீண்டும் பழைய உருவை அடைந்ததாக கோவில் புராணகதை அறியப்படுகிறது
இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள்.
அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார்.""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.
உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.இதனைக் கண்ட நாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!'' என்று போற்றிப் புகழ்ந்தார்.
""பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார்.

அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.
இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார்.
இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ""பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார்.
அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, ""மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.
சாந்தமடைந்த அகத்தியர், ""மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார்.
இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார்.
அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள்.இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணி களைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர் சிவகுமார் என்பவர்.
மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்எபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார்.
ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன்வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இத்துடன் சிங்கம் புலி பாம்பு உருவங்களும் இடம்பெற்றுள்ளதை காணமுடிகிறது இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.
இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது.
இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதி யர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத் திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.
அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர்.
சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.
கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர்.
இக்கோவிலில் நவகிரகங்கள் சூரியன் நடுவில் இருக்க ஒன்றை ஒன்று பார்பது போல் அமைந்துள்ளன. ஒரே பீடத்தில் ஒரே கல்லினால் ஆன ராகு கேது சிலையும் காணப்படுகின்றன.
இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.பூஜைக்குரிய பொருட்களை நாம் வாங்கிச் செல்வது நல்லது. குருக்களின் வீடு அருகிலேயே இருப்பதால் நாம் செல்லும் நேரத்தில் தரிசனம் காணலாம். கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இந்தக் கோவில் புதுபொழிவுடன் காணப்படுகிறது
சிறப்புச் செய்தி தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின் மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தின் போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாகநுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழி சென்று விடும் என்ற தகவல் அறிவியல் உலகின் ஆச்சர்யத்தின் உச்சம்
இங்கு சிவராத்திரி மற்றும் ஆடி பூரம் வெகு சிறப்பு மிக்கவை இதை தவிர இக்கோவிலின் தனிச்சிறப்புகள் ஏராளம்

அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணம் நகரபேருந்து நிலையத்தில் இருந்து திருநாகேஸ்வரம் செல்லும் சிற்றுருந்தில் சென்றால் 20 நிமிடங்களில் ஊரை அடையலாம். அல்லது கும்பகோணம் மயிலாடுதுறை ரயில்பாதையில் 6 கிலோமீட்டர் பயணித்தால் ஊரை அடையலாம் ரயில் நிலையம் அருகில் கோவில் உள்ளது.(விரைவு ரயில்கள் இந்த நிலையத்தில் நிற்பதில்லை எனவே பயணிகள் ரயிலில் மட்டும் வர முடியும்) இந்த கோவிலை இந்த ஊரில் பாம்பு கோவில் என்று அழைக்கின்றார்கள்

திரிபலா

Posted by ss Wednesday, May 18, 2016 0 comments

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து
இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
திரிபலா என்றால் என்ன?
திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலி
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புற்று நோய்
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates