Followers

Powered by Blogger.

ஒவ்வொரு ஆசனத்திற்கும் அதற்கேற்ற மாற்று ஆசனங்கள் உள்ளது. ஒரு ஆசனம் செய்த பிறகு அதற்குரிய மாற்று ஆசனத்தை செய்தால் அந்த ஆசன்ததிற்குரிய முழு பலனை பெற முடியும்.
சவாசனம்/சாந்தியாசனம் கடைசியாக செய்ய வேண்டிய ஆசனம். அதற்கு மாற்று ஆசனம் யோகாசனம் செய்வதை நிறுத்தி சாதாரண நிலைக்கு வருதலாகும். இதைத்தவிர முக்கியமான ஆசனங்களுக்கு அதற்குரிய மாற்று ஆசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசனம்மாற்று ஆசனம்
பத்மாசனம்சுகாசனம் - சாதாரணமாக உட்காருதல்
உத்தித பத்மாசனம்சுகாசனம் - சாதாரணமாக உட்காருதல்
யோகமுத்ராபுஜங்காசனம், மச்சாசனம, பிறையாசனம்
பச்சிமோத்தாசனம்சக்ராசனம், தனுராசனம்
உத்தான பாத ஆசனம்சலபாசனம்
வபரீத கரணிமச்சாசனம், பிறையாசனம்
சர்வாங்காசனம்மச்சாசனம், பிறையாசனம்
ஹலாசனம்சக்ராசனம், பிறையாசனம்
புஜங்காசனம்யோகமுத்ரா
சலபாசனம்உத்தான பாத ஆசனம்
தனுராசனம்ஹலாசனம், பச்சிமோத்தாசனம்
மயூராசனம்சக்ராசனம்
உசர்ட்டாசனம்சர்வாங்காசனம், ஹலாசனம்
மச்சாசனம்சர்வாங்காசனம், பச்சிமோத்தாசனம்
வலது அந்தர்மத்ச்யேந்தாசனம்இடது அந்தர்மத்ச்யேந்தாசனம்
அர்த்தசிரசானம்நின்ற பாத ஆசனம்
சிரசாசனம்நின்ற பாத ஆசனம்
நின்ற பாத ஆசனம்அர்த்தசிரசானம், சிரசாசனம்
வலது திரிகோணாசனம்இடது திரிகோணாசனம்
பாதஹஸ்தாசனம்ஹலாசனம், சக்ராசனம், பிறையாசனம்
பிறையாசனம்பாதஹஸ்தாசனம்
சக்ராசனம்யோகமுத்ரா, ஹலாசனம்
உட்டியாணாநௌலி
நௌலிஉட்டியாணா
உட்கட்டாசனம்பத்மாசனம், உத்தான பாத ஆசனம்
ஜானுகீராசனம்பச்சிமோத்தாசனம்
ஹஸ்தபாதாங்குசாசனம்தனுராசனம், நின்ற தனுராசனம்
வஜிராசனம்மகாமுத்ரா, யோகமுத்ரா
சப்தவஜிராசனம்விபரீதகரணி, சர்வாங்காசனம்


படித்த இடம்  http://tamilnanbargal.com/node/26341

| edit post

600 க்கும் அதிகமான மூலிகைசெடி வகைகள் - செ.சி.ப மூலிகை பண்ணை

தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம்.  இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர் திரு.செ.சி.பவானந்தம்(9629601855), தனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது ஆண்டு தனது தாயாரின் அஸ்தி கரைக்க  கடற்கரை சென்றபோது பாம்பு கடித்து விட்டது, விசகடிக்கு சிறியநங்கை பொடி கடற்கரை பகுதி மக்களிடம் கேட்டபோது யாரும்  கொடுக்க முன்வரவில்லை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். குணமடைந்தவர் மூலிகை செடிகளை தேடி பயணிக்க ஆரம்பித்தார் வெற்றியும் கண்டார் இன்று அவரது பண்ணையில் 600க்கு மேலான மூலிகை செடி மற்றும் மரங்கள் உள்ளன 1000 மூலிகைக்கும்  மேல் வளர்ப்பதே தனது விருப்பமாகக்கொண்டுள்ளார். மூலிகைகளின் பயனை தான்மட்டும் உணர்ந்தால் போதாது என்று பள்ளிமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மூலிகை செடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு பாடம் எடுத்துவருகிறார். கோவை வேளாண் பல்கலைகழகத்தில் மூலிகை வளர்ப்பு குறித்த சான்றிதல் படிப்பும் முடித்துள்ளார்.
திரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின் பெயர்கள்:
       சிறியநங்கை, சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை,  நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்),  அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில்,  அருகம்புல், அரிவாள்மனை பூண்டு, அவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை, செம்பருத்தி   தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை   நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்சள், மணத்தக்காளி, மருதாணி, மல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்),  ஆலமரம்,  மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா மற்றும் பலவிதமான மூலிகைகள்
திரு.பவானந்தம் அவர்கள் கூறிய சில முலிகை குறிப்புகள்:
ஆடாதோடை - காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும்

சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும்

சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) - சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும், நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.

நாகமல்லி பாம்பு விஷம் போக்கும் 

7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு,  மா, பலா, கிலா 

மருத்துவ மரங்கள்: 
வேம்பு, கும்பகொடளி, ஆலமரம்,  மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா, இலவங்கம்

செ.சி.ப மூலிகை பண்ணை 
ஆராய்சி மையம், 
79,காமராசர் சாலை, கீரமங்கலம், 
புதுக்கோட்டை மாவட்டம் - 614 624
9629601855
 
 
 
படித்த இடம் http://maram2020.blogspot.in/2013/10/600.html

| edit post

ஸ்ரீ ருத்ரம்

Posted by ss Saturday, November 16, 2013 0 comments


| edit post

ரீ ஆஞ்சநேயர் .....



ஸ்ரீராம ஜெயம்

 

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம் ...

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!

ப்ரார்த்தனா மந்த்ரம் ...

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

கார்ய சித்தி மந்த்ரம் ...

அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம்தவ
ராம தூத க்ருபாஷிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ.

நமஸ்கார மந்த்ரம் ...

ஸ்ரீ ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே.

ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம் ...

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா.

ஆஞ்சநேயர் காயத்ரி ...

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!

ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்!

ஓம் ராமதூதாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!



ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வா பத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேய நமாம்யஹம்

அஞ்சனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ருஹ்மசாரிணம்
துஷ்டக்ருஹ வினாஸாய ஹனுமந்த முபாஸ்மஹே

நாமாம்யஹம் மாருதஸுநு மாநிலம் ஸ்ரீஜானகி ஜீவத ஜீவத ப்ரியம் |
ஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லபம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி ||

உத்ய தாதித்ய ஸங்காஸம் உதார புஜ விக்ரமம் |
கந்தர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்யா விஸாரதம் ||

ஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்தகல்ப மஹீருஹம் |
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் ||

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி'ரஸா நமாமி ||

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ'கநாசனம் |
கபீச'மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||



ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
—————
அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தாய் போற்றி !
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை பாடியே போற்றி !
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே.



ஸ்ரீ ஹனுமத் கவசம் .....

அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |
ஸ்ரீராமசந்த்ரருஷி: |
காயத்ரீச்சந்த: |
ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா |
மாருதாத்மஜ இதி பீஜம் |
அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி: |
ஸ்ரீராமதூத இதி கீலகம் |
மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக: ||

ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-

ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||

நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர: |
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||

நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர: |
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||

புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர: ||

வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ: |
ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||

லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம் |
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||

குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய: |
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||

ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||

அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |
ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான் ||

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |
ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||

த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத் ||

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||

அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |
அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||

ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||

ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |
அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ: ||

முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய: ||

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||

வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||

ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.

ஆஞ்சநேய கவசத்தின் அர்த்தம் :

கிழக்கு திக்கில் என்னை ஸ்ரீ ஹனுமான் ரக்ஷிக்கட்டும். தெற்குத்திக்கில் வாயுபுத்திரன் என்னை ரக்ஷிக்கட்டும். மேற்கு திக்கில் ராக்ஷசர்களை நாசம் செய்யும் ஸ்ரீ ஹனுமான் என்னை ரக்ஷிக்கட்டும். வடக்கு திக்கில் சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமார் என்னை ரக்ஷிக்கட்டும். (1)

ஸ்ரீ கேஸரியானவர் என்னை ஆகாயத்தில் ரக்ஷிக்கட்டும். ஸ்ரீ விஷ்ணு பக்தியுள்ள ஹனுமார் என்னைக் கீழ்பாகத்தில் ரக்ஷிக்கட்டும். லங்கையை எரித்தவர் ஸர்வ ஆபத்துக்களிலிருந்தும் என்னை எப்பொழுதும் காக்க வேண்டும். (2)

சுக்ரீவ மந்திரியானவர் என்னைத் தலையில் ரக்ஷிக்கட்டும். வாயுபுத்ரர் எனது நெற்றியில் ரக்ஷிக்கட்டும். மகாவீரன் எனது புருவங்களின் நடுவில் ரக்ஷிக்கட்டும். (3)

எனது கண்களை சாயாக்ராஹீ என்னும் பூதத்தைக் கொன்றவர் ரக்ஷிக்கட்டும்.வானரங்களுக்குத் தலைவர் எனது கன்னங்களை ரக்ஷிக்கவேண்டும். ஸ்ரீ ராம தூதன் எனது காதுகளின் கீழ்பாகங்களை ரக்ஷிக்கட்டும். (4)

ஸ்ரீ அஞ்சனா புத்ரர் எனது மூக்கில் ரக்ஷிக்கட்டும். வானரர்களுக்கு அதிபர் எனது முகத்தைக் காக்கட்டும். அஸுரசத்ரு எனது கழுத்தை ரக்ஷிக்கட்டும். தேவர்களால் பூஜிக்கப்பட்டவர் எனது தோள்களை ரக்ஷிக்க வேண்டும். (5)

மஹா தேஜஸ்வி எனது புஜங்களை ரக்ஷிக்கட்டும். கால்களை ஆயுதமாகக்கொண்டவர் எனது கால்களை ரக்ஷிக்கட்டும். நகங்களை ஆயுதமாகக்கொண்டவர் எனது நகங்களை ரக்ஷிக்கட்டும். வானரங்களுக்குத் தலைவர் எனது வயிற்றை ரக்ஷிக்க வேண்டும். (6)

ஸ்ரீ ராமாங்குளீயத்தை எடுத்துச் சென்றவர் எனது மார்பைக் காக்க வேண்டும். பெரும் கைகளை உடையவர் எனது இரு பக்கங்களையும் ரக்ஷிக்கட்டும். ஸீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்பொழுதும் ரக்ஷிக்கட்டும். (7)

லங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின்பாகத்தை ரக்ஷிக்கட்டும். ஸ்ரீ ராமச்சந்திரன் எனது தொப்புளைக் காக்க வேண்டும். வாயுபுத்ரன் எனது இடுப்பை ரக்ஷிக்கட்டும். (8)

சிறந்த புத்திமான் எனது குஹ்யதேசத்தை ரக்ஷிக்கட்டும். சிவபக்தரான ஹனுமார் எனது துடையின் சந்திகளை ரக்ஷிக்கட்டும். எனது துடைகளையும் முழங்கால்களையும் லங்கையின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்க வேண்டும். (9)

வானரர்களுள் சிறந்தவர் எனது ஆடு சதைகளைக் காக்க வேண்டும். மிகுந்த பலம் வாய்ந்தவர் எனது கணைக்கால்களைக் காக்க வேண்டும். சூரியனுக்கு ஒப்பானவரும், ஔஷத பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான ஹனுமார் எனதுகால்களை ரக்ஷிக்கட்டும். (10)

அளவு கடந்த பலம் நிரம்பியவர் எனது அங்கங்களையும், கால் விரல்களையும் எப்பொழுதும் காக்க வேண்டும். மஹாசூரன் என்னுடைய எல்லா அங்கங்களையும், மனதை அடக்கியவர் எனது ரோமங்களையும் காக்க வேண்டும். (11)

படித்த எந்த அறிவாளி ஹனுமானின் கவசத்தைத் தரிப்பனோ அவனே மனிதர்களுக்குள் சிறந்தவன். போகங்களையும் மோக்ஷத்தையும் அடைவான்.(12)

மூன்று மாத காலம் நித்தியம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு மனிதன் படிப்பானேயாகில், அவன் எல்லா சத்துருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து ஐஸ்வர்யத்தை அடைவான். (13)

நடுநிசியில் இந்த ஹனுமத் கவசத்தை ஏழு தடவை படித்தால் க்ஷயம்,அபஸ்மாரம்(வலிப்பு), குஷ்டம் முதலிய ரோகங்கள், தாபத்ரயங்கள் யாவும் நீங்கும். (14)

ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தினடியில் இருந்துகொண்டு இதை எவன் ஒருவன் படிப்பானோ அவன் அழிவற்ற ஐஸ்வர்யத்தை அடைவான். யுத்தத்தில் ஜெயத்தையும் அடைவான். (15)

ஸ்ரீ ராம ரக்ஷையுடன் கூடிய ஹனுமத் கவசத்தை எவனொருவன் கையில் தரித்துக்கொள்வானோ அவனுக்கு வியாதிகள் யாவும் நீங்கும். எல்லா காரிய சித்தியும் ஏற்படும். (16)

ஹனுமத் கவசத்தைப் படிக்காமல் ராம ரக்ஷையைப் படிப்பது வீணாகும். (17)

எல்லா துக்கங்களும் நீங்கும். எங்கும் விஜயத்தை அடைவான். ஆசாரமாய்ப் பரிசுத்தமான மனதுடன் ஒரு தினம் இரவு பகல் முழுவதும் திரும்பத் திரும்ப இந்த கவசத்தைப் படித்தானேயாகில் ஜெயில் வாசம் நிச்சயம் நீங்கும். இதில் சந்தேகமேயில்லை. மஹா பாபங்கள், உபபாதகங்கள், யாவும் நீங்கும். இதில் சந்தேகமேயில்லை. (18-19)

மிகுந்த பிரதாபம் வாய்ந்த எந்த ஹனுமார் சமுத்திரத்தை சின்ன குட்டையைப்போல் தாண்டி ஸ்ரீ ஸீதாதேவியின் மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீ வைகுண்டநாதரான ஸ்ரீ ராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷய குமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜெயிக்கப்பட்ட ராக்ஷஸனான ராவணனுடைய மிகுந்த கர்வத்தைப் போக்கினாரோ,அப்படிப்பட்ட வாயுகுமாரனும், வானர ஸ்ரேஷ்டருமான ஸ்ரீ ஹனுமான் எப்பொழுதும் நம்மை ரக்ஷிக்கட்டும். (20)

ஸ்ரீ ராமரால் செய்யப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் முற்றிற்று.



ஸ்ரீஹநுமான் சாலீஸா .....

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்|L
பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்||

ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர|
ஜய கபீஸ திஹுலோக உஜாகர||

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்
பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்||

ராமதூத அதுலித பலதாமா|
அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா||

மஹாவீர் விக்ரம பஜரங்கீ|
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ||

கஞ்சன பரண விராஜ ஸுவேசா|
கானன குண்டல குஞ்சித கேசா||

ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை|
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை||

சங்கர ஸுவன கேசரி நந்தன|
தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன||

வித்யாவான் குணீ அதி சாதுர|
ராம காஜ கரிபே கோ ஆதுர||

ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா|
ராம லஷண ஸீதா மன பஸியா||

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா|
விகட ரூப தரி லங்க ஜராவா||

பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||

லாய ஸஜீவந லகந ஜியாயே |
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||

ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||

ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |
அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||

ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||

ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |
கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||

தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |
ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||

தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |
லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||

ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||

துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||

ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |
தும ரச்சக காஹூ கோ டர நா ||

ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||

பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |
மஹாபீர ஜப நாம ஸுநாவை ||

நாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||

ஸங்கட தே ஹநுமாந சுடாவை |
மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||

ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |
திந கே காஜ ஸகல தும ஸாஜா ||

ஔர மநோரத ஜோ கோஇ லாவை |
ஸோஇ அமித ஜீவந பல பாவை ||

சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||

ஸாது ஸந்த கே தும ரகவாரே |
அஸுர நிகந்தந ராம துலாரே ||

அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |
அஸ் பர தீந ஜாநகீ மாதா ||

ராம ரஸாயந தும்ஹரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||

தும்ஹரே பஜந ராம கோ பாவை |
ஜநம ஜநம கே துக பிஸராவை ||

அந்த கால ரகுபர புர ஜாஈ |
ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||

ஔர தேவதா சித்த ந தர ஈ |
ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||

ஸங்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||

ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |
க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||

ஜோ ஸத பார பாட கர கோஈ |
சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||

ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||

துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||

பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |
ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||



செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும் ஒருவர். அவரது மந்திரங்களில் முக்கியம் என கருதுவதால் இந்த மந்திரத்தை வழங்கியுள்ளோம்.

"ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா"
- என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.

"ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய,
பஞ்சமுகி ஹனுமதே, லம்லம்லம்லம்
கைல ஸம்பத்கராயஸ்வாஹா."
- என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது அரச மரத்தடியில் அல்லது சீதாராமர் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

-----

அசேஷ லங்காபதி ஸைத்யஹந்தா
ஸ்ரீராமஸேவா சரணைகக்ர்த்தா
அசேஷ து:காஹத லோக கோப்தா
த்வஸௌ ஹநுமாம்ஸ்த்வ ஸௌக்யகர்த்த

-இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சகல துன்பங்களும் விலகி விடும்.


மந்த்ராத்மகம் ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ....

ஓம் நமோ வாயுபுத்ராய பீமரூபாய தீமதே |
நமஸ்தே ராமதூதாய காமரூபாய தீமதே ||
மோஹசோ'க விநாசா'ய ஸீதாசோ'கவிநாஸிநே |
பக்நாசோ'கவநாயாஸ்து தக்தலங்காய வாக்மிநே ||
கதிநிர்ஜிதவாதாய லக்ஷ்மணப்ராணதாய ச |
வநௌகஸாம் வரிஷ்டாய வஷிநே வநவாஸிநே ||
தத்வஞானஸுதாஸிந்துநிமக்னாய மஹீயஸே |
ஆஞ்ஜநேயாய ஸூராய ஸுக்ரீவ ஸசிவாய தே||
ஜன்மம்ருத்யுபயக்நாய ஸர்வக்லேச'ஹராய ச |
நேதிஷ்டாய ப்ரேதபூதபிசா'ச பய ஹாரிணே ||
யாதநாநாஷநாயஸ்து நமோ மர்கடரூபிணே |
யக்ஷரக்ஷஸசா'ர்தூல ஸர்வ்விர்சி'சக பீஹிர்தே ||
மஹாவலாய வீராய சிரஞ்ஜீவிந உத்ததே |
ஹாரிணே வஜ்ரதேஹாய சோல்லங்கித மஹாவ்த||
 
 
http://koshasrini.blogspot.in/2012/09/blog-post_22.html

| edit post


விசுவல் பேசிக் நெட் - Visual Basic .NET (VB.NET) - விசுவல் பேசிக்கின் வழி வந்த மைக்ரோசப்ட் டொட் நெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி. விசுவல் இசுடூடியோ எனும் மைக்ரோசப்ட்டின் விருத்தியாக்க மென்பொருளில் (தற்போதைய பதிப்பு:  Visual Studio 2012 - Update 3) ஒரு பாகமாக இம்மொழி உள்ளது. அனைத்து .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் (தற்போதையது .net 4.5) அவசியம்.
இம்மொழியைப் பழகுவதற்கு மைக்ரோசப்ட் நிறுவனத்திடம் இருந்து நிரலாக்க மென்பொருளின் இலவசப் பதிப்பைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Visual Studio 2012 Express for Windows Desktop: http://www.microsoft.com/visualstudio/eng/products/visual-studio-express-for-windows-desktop
நிறுவும்போது உங்கள் பிரதான தேவை Visual Basic என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிறுவல் கேட்கும்போது Visual Basic என்று குறிப்பிடுங்கள். தரவிறக்கம் செய்து அதனை நிறுவிய பின்னர் உங்கள் மென்பொருளாக்கப் பயணத்தைத் துவங்கலாம்.
இப்பயிற்சியில் பயன்படுத்தப்படுவது Visual Studio Ultimate  2012 பதிப்பு எனினும் நிரல்மொழியும் பயன்படுத்தும் விதமும் Visual Studio 2012 Express உடன் ஒப்பிடுகையில் ஒரே விதமாக அமைந்திருக்கும். Visual Studio Ultimate  2012 பதிப்பில் பல வசதிகள் உள்ளது, ஆனால் அது இலவசமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

 உங்கள் முதல் மென்பொருள்

உங்களது முதல் மென்பொருளை இந்தப் பயிற்சியின் இறுதியில் உருவாக்க முடியும். இப்பாடத் தொடரில் வெவ்வேறு வகுப்பில் கூறப்படவுள்ள ஒவ்வொரு படிமுறைகளையும் விளங்கிக்கொள்ளும்போது  Visual Studio 2012 இன் ஒவ்வொரு கூறுகளையும் அறியும் வாய்ப்பு உண்டாகும்.
முதலில் ஒரு “வணக்கம் தமிழா!” எனும் சிறிய மென்பொருளை உருவாக்குவோம்.
Windows Forms Application Project உருவாக்கல்
  1. கோப்பு (File) பட்டியில்  New Project என்பதைத் தெரிவு செய்க.
  2. பின்னர் Visual Basic,
  3. Windows Forms Application என்பதைத் தெரிவு செய்க.
  4. கீழே உள்ள எழுதுபெட்டியில் உங்கள் புதிய மென்பொருளுக்கான VanakkamThamila எனும் பெயரை எழுதலாம்.
 
 
இப்போது மேலேயுள்ள படத்தில் காட்டியது போன்று காட்சியளிப்பதை காணலாம். இங்கேதான் ஒரு மென்பொருளை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளும் அடங்கியுள்ளன. நிரல் மொழியை எழுதுவதும் இங்கேதான்.
இப்போது சில தேவையான பகுதிகளைப் பார்ப்போம்; படத்தில் உள்ள எண்களுக்குரிய விளக்கம் கீழே தரப்படுகின்றது. இதை உங்கள் விசுவல் இசுடூடியோ மென்பொருளில் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
  1. கருவிப்பெட்டி (toolbox): இங்கே ஒரு மென்பொருளுக்குரிய கட்டுப்பாட்டுக் கருவிகள், அலங்காரக் கருவிகள் போன்றன உள்ளன. ஒரு பட்டனை இடவோ அல்லது படத்தை இடுவதற்கோ இந்தக் கருவிப்பெட்டியில் உள்ளவை தேவைப்படுகின்றன. கருவிப்பெட்டி எந்நேரமும் காட்சியளிக்க ஊசி போன்றிருக்கும் அமைப்பைச் சொடுக்கவேண்டும். ஒரு பட்டனை இடுவதற்கு கருவிப்பெட்டியில் உள்ள buttonஐச் சொடுக்கிய பின்னர் மௌசை அழுத்தியபடி மென்பொருளின் முகப்பில் கொண்டுவிடுங்கள். இப்போது button ஒன்று அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
  2. எண் இரண்டால் காட்டப்பட்டுள்ளதுதான் மென்பொருளின் தோற்றத்தை நிர்ணயிக்கும் சாளரம். புதிதாக உருவாக்கப்பட்ட மென்பொருள் திட்டத்தில் ஒரு படிவம் (form) Form1.vb எனும் பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும். மேலும் தேவையான படிவங்கள் உருவாக்கலாம். ஒவ்வொரு படிவத்துக்கும் தோற்றத்துக்கான தத்தல் (எ.கா: Form1.vb [design] ), நிரலாக்கத்துக்கான தத்தல் என (Form1.vb) என இரண்டு தத்தல்கள் அமைந்துள்ளது.  ஏற்கனவே நாம் உருவாக்கிய buttonஐத் தவிர வேறெதுவும் அற்ற நிலையில் இப்போது மென்பொருளின் சாளரம் இருப்பதை அவதானிக்கலாம். ஏதாவது ஒரு வெற்றுப் பகுதியில் மௌசின் வலது விசையை அழுத்தி “view code” என்பதைச் சொடுக்குங்கள். நிரலாக்கத்துக்கான தத்தல் (Form1.vb) தோன்றியிருப்பதைக் காண்பீர்கள். இதனை எண் 6க்குரிய விளக்கத்தில் தொடருவோம்.
  3. படத்தில் மூன்றாவதாகக் காட்டப்பட்டுள்ளது மென்பொருளுக்குரிய கோப்புகள், படங்கள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகள் போன்றவற்றைக் காட்டும் தீர்வுலாவி (solution explorer) ஆகும். இங்கு புதிய படிவத்தைச் சேர்க்கலாம்; மென்பொருளை நிரலியக்கம் மற்றும் கட்டுமானம் செய்யலாம்; மென்பொருளுக்குரிய வேறு தகவல்களைச் சேர்க்கலாம். நாங்கள் ஏற்கனவே இட்ட VanakkamThamila பெயரின் கீழேயுள்ள MyProjectஐ இருதடவை சொடுக்குவதன்மூலம்  VanakkamThamila எனும் புதிய தத்தல் திறந்திருப்பதைப் பார்க்கலாம். இங்கு மென்பொருளின் பெயர், உருவாக்கியவரின் பெயர், மென்பொருளின் வெளியீட்டு வரிசை எண், மென்பொருளுக்குரிய குறுஓவம் (icon) போன்ற பல விடயங்களை மாற்றவோ புதிதாக இடவோ செய்யலாம்.  இங்குள்ள படிவங்களின் பெயரில் (Form1.vb) வலம் சொடுக்குவதன் மூலம் நிரலாக்கத்துக்கான தத்தல், தோற்றத்துக்கான தத்தல் போன்றவற்றை அணுகலாம். பல படிவங்கள் உள்ள போது Form1, Form2..... எனும் பெயர்கள் குழப்பத்தை விளைவிக்கலாம், எனவே ஒவ்வொரு படிவத்துக்கும் அதற்குரிய பெயரை இடுவது சிறந்தது. நாம் இப்போது Form1 படிவத்துக்குரிய பெயரை frmThamil என்று மாற்றுவோமா?

    பெயரிடும்போதும் ஒரு முறையைக் கையாளுவது நல்லது. இவை படிவங்கள் என்றபடியால் தொடக்க மூன்று எழுத்துகள் frm என்று சிறிய ஆங்கில எழுத்தில் இருக்க அடுத்துத் தொடங்கும் முதல் எழுத்தை பெரிய எழுத்திலும் மற்றையவை சரிய எழுத்திலும் இருக்கவிடுவது ஒரு இலகுத்தன்மையை ஏற்படுத்துகின்றது. இரு சொற்கள் உள்ளபோது பின்வருமாறு பெயரிடலாம்: frmThamilUlakam.

    நாம் இப்போது மாற்றிய பெயர் நிரலாக்கத்துக்கானது. ஆனால், மென்பொருளின் மேற்புறத் தலைப்பில் இன்னமும் Form1 என்றே இருப்பதைக் கவனித்தீர்களா? மேலும், நாம் உருவாக்கிய பட்டனில் உள்ள Button1 எனும் பெயரையும் மாற்றவிரும்புகின்றீர்களா? இவையெல்லாவற்றையும் பண்புப்பெட்டியில் (properties) இலகுவாக மாற்றலாம்.

    ஒவ்வொரு தத்தலிலும் அதன் பெயருக்கு அருகாமையில் “*” எனும் குறி உள்ளதைக் கவனித்து இருப்பீர்கள். நாம் இதுவரை செய்ததை இன்னும் சேமிக்கவில்லை என்பதையே அது காட்டுகின்றது. எனவே சேமிப்பு மெனுவைச் சொடுக்கிவிடுங்கள். எல்லாவற்றையும் சேமிக்கும் குறுஓவத்தைச் (Save All) சொடுக்குங்கள். இப்போது ஒரு சாளரம் திறக்கும். எங்கு உங்கள் கணினியில் சேமிக்கப் போகின்றீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள். Create directory for Solution என்பது சரிசெய்தே இருக்கட்டும்.
     சிலவேளை அவை தானாகவே சேமிக்கப்படும்.

  4. பண்புப்பெட்டி (properties): ஒரு மென்பொருளில் அமைந்துள்ள ஒவ்வொரு பகுதி அமைப்புகளுக்கும் உரிய இயல்புகளை மாற்ற இங்கு செல்கின்றோம். ஏற்கனவே கூறியுள்ள Form1 எனும் பெயரை இங்கும் மாற்றலாம். சேமித்தபின்னர் frmThamil என்று அமைந்துள்ள படிவத்துக்குரிய பண்புப்பெட்டியில் (properties) பெயர் என்று “(name)” இருப்பதைக் கண்டு frmThamil எனும் பெயரை frmThamila என்று மாற்றுங்கள். மீண்டும் சேமியுங்கள். இப்போது பண்புப்பெட்டியில் Text எனும் பண்புக்குச் சென்றால் Form1 என்றிருப்பதைக் காணலாம். இதனைத் தமிழில் “வணக்கம் தமிழா!” என்று மாற்றுங்கள்; சேமியுங்கள்.  

    இப்போது பட்டனைச் சொடுக்கி அதற்குரிய பண்புகளை மாற்ற முயற்சியுங்கள். buttonக்குரிய பண்புப்பெட்டியில் Text எனும் பண்புக்குச் சென்றால் Button1 என்று இருப்பதைக் காண்பீர்கள். இதனை இப்போது “வணக்கம்” என்று மாற்றுங்கள். மென்பொருள் முகப்பில் வணக்கம் எனும் பட்டனை படத்தில் காட்டப்பட்டுள்ள பகுதிக்கு நகர்த்துங்கள். இப்போது Button1 என்று பண்புப்பெட்டியில் உள்ள (name என்று எழுதப்பட்டுள்ள) பெயரை  மாற்றுவதன்மூலம் நிரலாக்கத்தில் பயன்படுத்தப் போகும் பெயரைத் தீர்மானிக்கின்றோம். இதனை buttonக்குரிய சுருக்கமான btn-ஐ முதலிலும் பின்னர் பட்டனின் பண்புக்குரிய பெயரையும் சேர்ப்பதன் மூலம் உருவாக்கலாம். அதன்படி, btnVanakkam என்று பெயரிடுவோம்.

    இப்போது மேலும் ஒரு பட்டனைச் சேருங்கள். அதற்குரிய நிரலாக்கப்பெயர் “btnClose” என்றும் தோற்றப் பெயர் “மூடு” என்றும் வையுங்கள்

    மேற்கொண்டு toolboxஇலிருந்து உரைப்பெட்டியை (TextBox) மென்பொருள் தோற்றப் படிவத்தின் மீது நகர்த்துங்கள். txtHello என்று அதற்குப் பெயர் சூடுங்கள், ஆனால் Text எனும் பண்பில் ஒன்றும் எழுதாது விடுங்கள். txtHello உரைப்பெட்டியை மென்பொருளின் இரு புற எல்லையையும் தொடுமாறு நீட்டுங்கள்.

    உரைப்பெட்டி மற்றும் இரு பட்டன்கள் ஆகியனவற்றை மேலே நகர்த்துங்கள். இப்போது மென்பொருளின் பிரதான சாளரத்தின் உயரம் 140, அகலம் 300 என்று அதன் பண்பில் மாற்றுங்கள். (அல்லது மௌசாலும் குறுக்கலாம்)
    இப்போது உங்கள் மென்பொருளின் தோற்றம் இவ்வாறு காட்சியளிக்கின்றதா?

    இப்போது சேமியுங்கள். தீர்வுலாவியில் வலம் சொடுக்கி “build” என்பதை அழுத்துங்கள்.
  5. இப்போது கீழேயுள்ள பகுதியில் output என்பதில் கட்டுமானம் வெற்றிகரமாக நிறைவேறியது அல்லது வழு உள்ளது என்பது போன்ற தகவல்கள் தோன்றும். ------ Build started: Project: VanakkamThamila, Configuration: Debug Any CPU ------
      VanakkamThamila -> C:\Users\MedPhoenix\Documents\Visual Studio 2012\Projects\VanakkamThamila\VanakkamThamila\bin\Debug\VanakkamThamila.exe
    ========== Build: 1 succeeded, 0 failed, 0 up-to-date, 0 skipped ==========
    பின்னர் மேலே இருக்கும் “start” என்பதை அல்லது விசைப்பலகையில் உள்ள “F5”ஐ அழுத்துங்கள். உங்களது முதலாவது மென்பொருள் காட்சியளிக்கும்.

  6. ஆனால், நாம் இன்னமும் நிரலாக்கம் செய்யவில்லை அல்லவா? அதனால் எந்தப் பொத்தான்களை அழுத்தினாலும் எதுவித பதிலும் மென்பொருளிடம் இருந்து கிடைக்காது.
இப்போதுதான் நாம் செய்ய இருக்கும் முக்கிய கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. இப்போது மென்பொருள் இயங்கிக் கொண்டிருந்தால் மூடிவிட்டு தோற்றத் தத்தலில் உள்ள மூடு என்பதைச் சொடுக்குங்கள்:
Public Class frmThamila

    Private Sub btnClose_Click(sender As Object, e As EventArgs) Handles btnClose.Click

    End Sub
End Class

இங்கே Public Class frmThamila என்பது நிரலாகக்தின் முதல் வரி, இது படிவத்தின் தொடக்கத்தைக் காட்டுகின்றது. End Class என்பது படிவத்தின் முடிவைக் காட்டுகின்றது.
மூடு என்பதைச் சொடுக்கினோம் அல்லவா? அதன் நிரலாக்கப் பண்புப் பெயரை நினைவுகூறுங்கள்... btnClose அல்லவா? பின்வரும் நிரல் வரிகள் மூடு எனும் பட்டனுக்குரியவை:
Private Sub btnClose_Click(sender As Object, e As EventArgs) Handles btnClose.Click

“இங்கேதான் நாம் நிரல்மொழியாக்கம் செய்யவேண்டும்”

    End Sub
 எனவே அந்த இடைவெளிக்குள் மென்பொருளை நிறுத்தும் கட்டளை கொடுத்தால் அதனைச் சொடுக்கும் போது மென்பொருள் நிறுத்தப்படும்.
Me.Close()
  என்று அங்கே எழுதுங்கள்.
இப்போது,
Private Sub btnClose_Click(sender As Object, e As EventArgs) Handles btnClose.Click

        Me.Close()

    End Sub

என இருக்கவேண்டும்.
இதேபோல btnVanakkamத்தை சொடுக்கி பின்வருமாறு எழுதுவோம்:

Private Sub btnVanakkam_Click(sender As Object, e As EventArgs) Handles btnVanakkam.Click

        txtHello.Text = "வணக்கம் தமிழா!"

    End Sub
 “வணக்கம்” எனும் பட்டனைச் சொடுக்கும்போது உரைப்பெட்டியில் “வணக்கம் தமிழா!” தோன்ற  இக்கட்டளை உதவுகின்றது.
உரைப்பெட்டியின் நிரலாக்கப் பண்புப் பெயர் txtHello இதனுடன் புள்ளி (.) ஒன்று இட சில நிரல் சொற்கள் தோன்றும் அங்கிருந்து text என்பதைத் தேர்வு சியலாம் அல்லது நீங்களே எழுதலாம். இதன் பின்னர் சமன்பாட்டுகுறி இட்டு, தோன்றவேண்டிய உரையை மேற்கோள் குறியிட்டு எழுதவேண்டும்.
இப்போது start ஐச் சொடுக்குங்கள்:

 
படித்த  இடம் http://www.palkalaikazhakam.com/computer-ed/software-dev/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/336-visual-basic-dot-net-in-tamil-1.html

| edit post

வாசி யோகப் பயிற்சி

Posted by ss Sunday, November 10, 2013 13 comments


ஓகத்தின்படி நம் உடலில் ஏழு அடிப்படையான தளங்கள் உள்ளன. இவற்றை சக்கரம் என்றும் இயம்புகின்றனர். இதில் மூலாதாரம் எனும் மூல அடிப்படையில் குண்டலினி எனும் ஆற்றல் பாம்பு வடிவில் உறைவதாகச் சொல்வர். ஓகம் (யோகம்) பயிற்றுவிக்கும் ஆசான்கள், குருமார்கள் இந்த குண்டலினி ஆற்றலை முதுகந்தண்டு வழியே மேலே ஏற்றிக் கொண்டு போய் உச்சந்தலையில் அமைந்த பதின்நூறு ஆரச்சக்கரத்தில் (ஸஹஸ்ராரம்) சேர்க்க வேண்டும் என்பதை மட்டும் சொல்கின்றரே தவிர அதை மீண்டும் அப்படி கீழே கொண்டு வந்து மூல அடிப்படையிலேயே சேர்த்துவிட வேண்டும் என்று சொல்வதேயில்லை. அச்சாகும் ஓக நூல்களிலும் இந்தக் குறை உள்ளதை வாசிப்பவரால் அறியமுடியும். இது ஏனென்றால் அந்த ஆசான்களுக்கு, குருமார்களுக்கு அது பற்றி தெரியாமை ஒரு காரணம் எனலாம், மற்றொன்று ஒருவரது ஓக அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமே எனலாம். ஓகத்தை பழகுவோர் தம் குண்டலினி ஆற்றலை மேலே ஏற்றி பதின்னூறு ஆரச்சக்கரத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அவரது முயற்சியைப் பொருத்து 12 முதல் 30 ஆண்டுகள் வரை பிடிக்கின்றன. இதனாலேயே பலர் ஓகத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை. மாறாக ஆன்மீக முன்னேற்றம் தராத சடங்கு, மதம் ஆகியவற்றை காலம், எளிமை கருதி கைக் கொள்கின்றனர்.
இந்த நீண்ட கால ஓகப் பயிற்சியைத் தவிர்த்து சில நாள்களில் அல்லது சில மாதங்களில் அந்தக் குண்டலினியை பதின்னூறு ஆரச்சக்கரத்திற்கு கொண்டு போவதோடு அல்லாமல் அதை மீண்டும் கீழேயுள்ள அதன் மூலஅடிப்படையிலேயே கொண்டு வந்து சேர்க்கவும் அமைந்த எளிய ஓகப் பயிற்சி தான் இந்த வாசி யோகம் எனும் காற்றுப் பயிற்சி. இதை தமிழ் நாட்டு சித்தர்கள் பன்னூற்றாண்டுகளாகப் பழகி வந்துள்ளனர். ஆனால் ஒரு இயக்கம் நடத்தி மக்களிடையே இந்த வாசி ஓகத்தைக் கொண்டு செல்லாமல் தம்மை  அண்டிவந்த தம் மாணவர்களுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தனர். அந்த மாணவர்கள்  தம் இசைவைப் பெறாமல் வாசி ஓகத்தை பிறருக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்தம் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்று எச்சரித்து மக்களிடம் பரவாமல் தடுத்துவிட்டனர். இது ஏனென்றால் இந்த பயிற்சியால் கிட்டும் சித்துகளை பக்குவமற்ற பழகுநர் தம் சொந்த நலனுக்காகப்  பயன்படுத்தி தமக்கும், பிறருக்கும் கேட்டை பயக்குவர் என்பதால் எனலாம். மக்களுடைய எல்லா நல்ல, தீய செயல்களுக்கும் எங்கும் நிறைந்த பரம்பொருளே கட்டுப்பாட்டாளன் (controller) என்பதால் சித்தர்களின் இந்த அச்சம் தேவையற்றது. தமிழ்ச் சொல் ஆண்டவன் என்பதற்கும், சமற்கிருதத்தில் ஈஸ்வர என்பதற்கும் கட்டுப்பாட்டாளன் என்பதே பொருள்.
இனி, வாசி ஓகம் பழகும் முறையை குறித்து தெளிவான விளக்கமும், அதன் பின் அதைப் பழகுபவருக்கு அதனால் ஏற்படும் ஆன்மீக அனுபவங்களும் என்னென்ன என்பதும் சொல்லப்படும். வாசிஓகத்தில் அடிப்படையானது காற்று. வாசி என்றால் காற்று எனப் பொருள். இதை பழக விரும்பவர் எட்டு அகவைக்கு மேற்பட்டவராக,  உடல் வளைவதற்கு இயன்றவராக இருந்தால் போதும். பிற ஓக, ஊழ்க (தியான) பயிற்சி முறையில் உள்ளது போல் சைவ உணவே உண்ணவேண்டும் என்பது போன்ற உணவுக் கட்டுப்பாடு ஏதும் இதில் இல்லை. ஒரு நாளில் ஒரேஒரு முறை மட்டும் இதைப் பழகினால் போதும். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு அமைதியான மன நிலையில் இதைப் பழுகுவது சாலவும் நன்று.  

பயிற்சி முறை:

வாசிஓகம் பழகுநர் முதலில் ஒரு தடியான விரிப்பை தரைமேல் விரித்துக் கொள்ள வேண்டும். இது முட்டியில் வலி ஏற்படாமல் தவிர்க்கும்  உடலை வளைத்து பழக வேண்டி உள்ளதால் தளர்த்தியான ஆடையே மிகவும் ஏற்றது. முதலில் விரிப்பின் ஒரு கோடியில் முட்டி போட்டு அமர்ந்து இடது கால் கட்டை விரல் மேல் வலது கால் கட்டை விரலை வைத்து அழுத்தியபடி புட்டத்தை கால்களின் மேல் இருத்தி அமர வேண்டும். பின்பு, வலதுகைப் பெருவிரலால் வலது மூக்குத் துளையை மூடி  இடது மூக்குத் துளை வழியாகக் காற்றை மெல்ல மெல்ல முழுமையாக இழுத்து பின்பு அக்காற்றை உள்ளே நிறுத்தி வைக்காமல் உடனேயே இடது மூக்குத் துளையை நடுவிரலால் மூடி வலது மூக்குத் துளை வழியாக உள்ளே உள்ள காற்று முழுவதையும் வெளியே விட்டுவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து அதே வலது மூக்குத் துளை வழியாக காற்றை மெல்மெல்ல உள்ளுக்கிழுக்க வேண்டும். காற்றை இழுத்த பின் இப்போது வலது மூக்குத் துளையை மூடிவிட்டு இழுத்த காற்று அத்தனையையும் மெதுவாக இடது மூக்குத் துளை வழியாக முழுவதுமாக வெளியே விட்டுவிட வேண்டும். இது மூக்கில் உள்ள காற்றடைப்பை அகற்றி இனி செய்ய இருக்கின்ற வாசிஓகப் பயிற்சியில் தடை ஏதுமின்றி மூக்குத் துளையில் காற்று போய் வருவதற்கு உதவிசெய்யும். (கீழே உள்ள படம் ஒரு தெளிவிற்காக)
   

இனி, முட்டியிட்டு அதே உட்கார்ந்த நிலையில் இரு தொடைகளின் மேல் கைகளை வைத்து இடக்கால் பெருவிரலை வலக் கால் பெருவிரலால் அழுத்தியபடி முதுகை நேராக நிமிர்த்தி இருக்கவேண்டும். பின்பு வாயை முன்குவித்து காற்றை மெல்லிதாக 'ஊ' என உள்ளே இழுக்கவேண்டும். காற்று உள்ளே செல்லும் போது அடிவயிறு இயல்பாகக் குறுகி மார்பு விரிவடையும். இப்படி முக்கால் அளவிற்கு காற்றை இழுத்துக் கொண்டிருக்கும் போது தலையை முன்னோக்கி வளைத்தபடியே தொடை மீதுள்ள இரு கைகளையும் தரையோடு தேய்த்தாற்ப்போல் நீட்டி தரையில் கையை பதித்தபடி குனிந்து நெற்றியால் தரையைத் தொடவேண்டும்.      நெற்றியால் தரையைத் தொடுவதற்கு வளைகின்ற போது வயிறு அப்படியே மடிந்து உள்நோக்கி சுருங்கி வளையும். வயிறு வளைந்தால் அவர் பயிற்சியை முறையாகச் செய்கின்றார் எனக் கொள்ளலாம். குனியும்போது உடலும் முன்னோக்கி நகரும். நெற்றியால் தரையைத் தொடும் வரை காற்றை 'ஊ' என உள்ளே இழுக்கவேண்டும்.
கீழே குனிந்து நெற்றியால் தரையைத் தொடும் போது மட்டும் வாயை லேசாக  திறந்து  'ஆ' என்று காற்றை வெளியே விடவேண்டும். ஆனால் முழுமையாக விடவேண்டும்  என்று இல்லை. அதைத் தொடர்ந்து இரு கைகளையும் தரையை ஓட்டினார் போல் தொடையை பின்நோக்கி இழுக்க வேண்டும். கைகளை  இழுக்கின்றபோது மீண்டும் வாயைக் குவித்தபடி  'ஊ' என்று காற்றை உள்ளுக்கிழுத்தபடியே தோளைத் மேலே தூக்காமல் கழுத்தையும் சேர்த்தே  பின்னோக்கி இழுத்து நேராக நிமிர்ந்து இரு கைகளையும் தொடைகளின் மேல் இருத்த வேண்டும். இப்படி குனிவில் இருந்து மெல்ல எழுந்து நிமிரும் வேளையில் காற்றை முக்கால்வாசி இழுத்திருப்பீர்கள். மீண்டும் முன்போல் காற்றை உள்ளுக்கு இழுத்தபடியே தொடைமேல் உள்ள கைகளை முன்னோக்கி நகர்த்தி தரையைத் தேய்த்தாற் போல குனிய வேண்டும். நெற்றி தரையைத் தொடும் நேரத்தில் மட்டும் சிறிது வாய் திறந்து காற்றை 'ஆ' என்று விடவேண்டும். பின் மீண்டும் இரு கைகளையும் தொடையை நோக்கி இழுக்க வேண்டும். தோளை உயர்த்தாமல் கழுத்தையும் பின்னே இழுத்து உடலை நிமிர நிறுத்த வேண்டும். பின்னோக்கி இழுக்கின்ற போது வாயைக் குவித்து காற்றை மெல்லமாக 'ஊ' என்று இழுக்கவும் வேண்டும். இதனால் காற்று உடல் முழுவதும் நிறையும். உடல் காற்றாலேயே நிறைந்து போகும். உடல் முழுதும் வியர்க்கும். இப்படியே 30 நிமிடங்கள் காற்றை உள்ளுக்கிழுத்தும் விட்டும் வரும் பயிற்சியால் காற்று கழுத்து வரை நிரம்பிவிடும். (காற்றை விரைந்து நிரப்ப சில நாள்களில் இந்த குனிந்து நிமிர்வதை வேகமாக செய்யவேண்டும்). 
காற்று கழுத்து வரை நிரம்பிய பின் குனிந்து எழுவது கடினமாகிப் போகும். அப்போது முதுகு நிமிர்ந்த நிலையிலேயே கண்ணைமூடி சிதறாத கவனத்துடன் வலக்கண் பாப்பாவில் மனத்தைக் குவித்தபடி வாயைக் குவித்து காற்றை 'ஊ' என்று உள்ளுக்கு முழுமையாக இழுக்க வேண்டும் பின் வாயை சிறிதளவே  திறந்து  'ஆ' என்று சிறிதளவே காற்றை விட வேண்டும். இப்படியே சில நிமிடங்கள் காற்றை இழுப்பதும் விடுவதும் நிகழ்த்திவந்தால் காற்று கண் வரை நிரம்பும். அதன் பின் கண்ணைத் திறந்து ஒரு கண்ணாடியில் தன் வலக்கண் பாப்பாவை மட்டும் முறைத்துப் பார்க்கவேண்டும். இதனால் அப்போது கண்ணில் நீர் கசியும். கண்ணீர் நின்றதும் காற்று வலக்கண்ணுக்கு மேலே ஏறுவது  தெரியும். காற்று அப்படியே ஏறிச்சென்று உச்சந்தலையில் உள்ள பதின்னூறு ஆரச்சக்கரதில் நுழையும். காற்று நுழைவதை உற்று கவனிப்பதால் உச்சந்தலையில் குயவன் சக்கரம் சுழல்வது போல் ஒரு சக்கரம் அல்லது தாங்கி (bearing) சுழல்வதை உணரமுடியும். அங்கேயே எண்ணம் சிதறாமல் கவனித்துக் கொண்டிருந்தால் அருவி போல் நீர் வடியும். இது நீரில்  குளிப்பது போல இருக்கும். இதை அந்த வாசிஓகப் பழகுநர் மட்டுமே அனுபவித்து உணர்வார். மற்றவர் கண்களுக்கு இது தெரியவே தெரியாது. இதைத் தான் காசியில் குளிப்பது என்றனர் ஓகியர். இதில் குளிப்பவர்க்கு மறுபிறப்பு கிடையாது என்பர். இந்த வாசிஓகப் பயிற்சியில்  ஈடுபடுபவர் உள்ளுக்கு இழுத்து விடும் காற்றை மட்டுமே கவனிக்க வேண்டும் வேறு சிந்தனையில்  ஈடுபடக் கூடாது. காற்று உடலின் உள்ளே எங்கே நுழைகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.     
இந்த பயிற்ச்சியை தொடர்ந்து செய்து வந்தால் நாளாவட்டத்தில் குனிந்து விழுந்து எழுவதை தவிர்த்து நிமிர்ந்த நிலையிலேயே வாய்வழியாகவே காற்றை இழுத்தும்  வாய்வழியாகவே விட்டும் பழகிக்கொள்ளலாம்.     
இன்னும் சில நாள்கள் இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்துவர வாசிஓகப் பழகுநரின் தலை உச்சியில் (பதின்னூறு ஆரச்சக்கரத்தில்) கவனம் மேம்பட்டுவரும். அந்த சிதறாத கவனத்தால்  அக்காற்று பனியாக மாறி பழகுநருக்கு பனிக்காற்று உணர்வை ஏற்படுத்தும் அதனால் உடல் முழுவதும் குளிரால் நடுங்கும். இதில் வெப்பக் காற்று குளிர் காற்றாக மாறுகிறது. இதன்பின் கட்டி கட்டியாகத் தொங்கும் பனியாக அது வளர்ச்சி பெறும். இதை 'வெள்ளி பனித்தலையர்'  நிலை எனலாம். இதை அந்த வாசிஓகியால் மட்டுமே அனுபவிக்க முடியும் மற்றவருக்கு இது சிறிதளவும் தெரியவராது.  இந்த நிலையை கடந்தால் சில நாள்களில் பதின்னூறு ஆரச்சக்கரம் தானாகவே திறக்கும். அப்போது வான்மண்டலமே அங்கு தெரியும். பின் காற்று அதன்வழியே வெளியே போகும். அண்டவெளிக் காற்று அந்தத் துளை வழியாக இறங்கும். இதுவே பத்தாவது வாசல் காற்று எனப்படும். இங்கு தான் நான் என்ற தனியாள் உணர்வு அந்த சுழியத்தோடு (cosmic entity)  இணைகின்றது. அப்போது நானும் அவனும் ஒன்று என்ற உணர்வு மேலிடும். இதுவே துவைதம் எனப்படும் இருமை நிலை ஆகும். இதாவது, இறைவனும் இருக்கிறான் நானும் இருக்கிறேன் என்பது.     
இந்த இருமை நிலையை உணரும் போது நீல நிறம் தெரியும் என்பது மட்டும் அல்ல கண்ணால் காணும் புற உலகப் பொருள்கள் யாவும் நீலநிறமாகவே காட்சியளிக்கும். அந்த நீல நிறத்தை பதின்னூறு ஆரச்சக்கரத்தின் வழியாக கீழே உடலுள் இறக்க வேண்டும். இதற்கு பதின்னூறு ஆரச்சக்கரத்திலேயே கவனத்தை குவிதிருந்தால் போதும் காற்றை இழுத்து விடத் தேவை இல்லை. இந்த நீல நிறத்தின் ஊடாகவே இறை மூலஅடிப்படையில் (supreme muladhara) இருக்கும் ஐம்பெரும் பூதங்களையும் ஒவ்வொன்றாக உடலுள் ஈர்க்க வேண்டும். இதை ஈர்க்கும் போது முட்டிபோட்டு வாசிஓகம் செய்வது போல் உட்காரத்தேவையில்லை. அப்போது  இயல்பாக உட்கார்ந்து கொண்டு வலது கால் மேல் இடது காலை வைக்க வேண்டும் அல்லது தட்சிணாமூர்த்தி போல் அமர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இடக் காலை வலக் காலின் மேல் போட்டு உட்காருவது காற்றை கீழ் நோக்கி செலுத்தவும் உடலைக் குளிருட்டவும் செய்கின்றது.  இந்த நிலையில் வாய்வழியாக காற்றை உள்ளிழுத்து விடுவதை நிறுத்த தேவையில்லை. மூக்கு வழியாக இயல்பாக மூச்சை இழுத்து விட்டால் போதுமானது. இந்த பயிற்சியை சிலநாள்கள் தொடர்ந்தாற்போல் செய்தால் அந்த இறை மூலஅடிப்படையை நம்முடைய மூலஅடிப்படையில் கொண்டு வந்து சேர்க்க முடியும். இடையில் கிட்டும் சித்துக்களில் ஈடுபாடு உண்டாகுமானால் மேற்சொன்ன முன்னேற்றம் கிட்டாமல் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடை உண்டாகும். ஆதலால் அவற்றை நாடவே கூடாது. இவ்வாறு இறை மூலஅடிப்படையை சேர்த்தால் ஒருவர் ஐம்பெரும் பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுவதோடு முக்காலத்தையும் உணர்ந்தவர் ஆகின்றார். இந்த நிலையில் அந்த வாசிஓகப் பழகுநர் "அவனே நான், நானே அவன்" என்ற உணர்வை அடைகின்றார். இதுவே "நான் கடவுள்" எனும் "அஹம் பிரம்மாஸ்மி" என்ற உபநிடதக் கருத்துநிலை எனப்படுகிறது. இந்த நிலைதான் இரண்டன்மை எனும் அத்துவைதம் ஆகும். இது தான் உண்மையில் வீடுபேறு எனும் மோட்சமுமாகும். மோட்சம் என்று தனியே வேறொரு இடம் இந்தப் புடவியில் (universe) இல்லவேயில்லை. ஆகவே வீடுபேறு என்பது தன் மூலஅடிப்படையுடன்  இறை மூலஅடிப்படையை சேர்த்தால் மட்டுமே வாய்க்கும்.
இப்படியாகப்பட்ட உயர்நிலையை எய்தியவர் மனநாட்டம் காரணமாக ஐம்பெரும் பூதங்களினால் ஆன உலகியலில் ஈடுபாடு கொள்வாரானால் இறைஆற்றல் அவரைவிட்டு நீங்கப்பெற்று அவரது குண்டலினி மீண்டும் கீழே இறங்கிவிடும். அப்போது அவர் மற்றவர் போல் இயல்பான மனிதராக ஆகிவிடுவார். இதை அவரால் நன்றாக உணரமுடியும். ஆனாலும் பயிற்சியின் வாயிலாக மீண்டும் அந்த உயர்நிலையை அவரால் எளிதில் எய்தமுடியும். நல்ல தேர்ச்சி ஏற்பட்ட பின் குனிந்து வளையாமல் இயல்பாக அமர்ந்து வாய்வழியாகவே காற்றை 'ஊ' என இழுத்தும் 'ஆ' என விட்டும் வாசிஓகத்தை பழக முடியும்.    
பழனிமலைக் கோவிலின் திருச்சுற்றில் கல்வெட்டாய் பொறிக்கப்பட்டுள்ள அகத்தியர் பாடல் ஒன்றில் உச்சந்தலையில் சக்கரம் சுழல்வது, அருவி போல் நீர் கொட்டுவது, பனிக்குளிர் வீச்சு, பனிகட்டியாக ஆதல், நீல நிறக்காட்சி ஆகியன பற்றிய குறிப்பு மேற்சொன்னவை யாவும் உண்மை என்பதற்கு ஒரு சான்றாகும்.  மக்களைப் பிளவுபடுத்தும் மதத்தை விட்டொழித்து உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தை எல்லோரும் நாடி அடையவேண்டும் என்ற நன்னோக்கத்தில் தான் இதுகாறும் கமுக்கமாக சொல்லித்தரப்பட்ட இந்த எளிய வாசிஓகத்தை பொதுப்பட வழங்கியுள்ளேன். இந்த வாசியைப் பழகி இந்த அனுபவங்களை எல்லாம் முழுதுமாகப் பெற்று 'நானே அவன், அவனே நான்' என்ற நிலையையும் எய்தியவர் எடுத்துரைத்த (narrate) செய்திகளே இங்கு தரப்பட்டுள்ளன. 

http://tamilnanbargal.com/yoga/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

சுழுமுனை தியானம்
                                                                                
நன்றாக கால்களை மடித்து நேராக அமர்ந்துகொள்ளுங்கள். கண்களை மூடிகொள்ளுங்கள்.மனதை அண்ணாக்கிற்கு நேரே சுழுமுனையில் நின்று, நாக்கை மேலண்ணத்தில் அழுத்தி, பின் தொண்டையில் காற்றை அழுத்தி சுழுமுனையை நோக்கி  செலுத்தவும்.
 மனதை அழ்ந்த அமைதியில் வைத்திருக்கவும். காற்றின் அசைவை மேல்நோக்கி மனதையும் சேர்த்து அண்ணாகிற்கு மேல் செலுத்தவும்.  சிறுதுகாலம் சென்றபெறகு பலபல வண்ணங்கள் தோன்றும்.  பின் கடைசியாக ஒரு சிருஒளி வெண்மை நிறத்தில் தோன்றும் பின் அதுவே வளர்ந்து அளவில்லாத எல்லையிலததாக மாறிவிடும்.  
இப்போது கண்ணை மூடினால் இருட்டு தெரியாது வெறும் வெளிச்சம் தான் தெரியும்.  பின்னர் அந்த வெள்ளை ஒளிக்குள் ஒரு பொன்னிற ஒளி தோன்றும்.  அதுவும் எல்லையில்லாமல் வளர்ந்துவிடும்.  பின்னர் அந்த பொன்ஒளிகுள்.  ஒரு செவ்வொளி தோன்றும். அந்த ஒளி எங்கும் எல்லையில்லாமல் வளர்ந்து நிக்கும்.  பின் அந்தஒளிக்குள் ஒரு ஒளி உருவாகும் அது வந்து வந்து செல்லும்.  
இதுவே நடராஜர் நடனம் ஆகும்.  பொன்னமம்பலம் மேடையில் நடராஜர் நடனம்  நடக்கும். இப்போது நாம் ஒரு பொருளாகவும் செவ்வொளி ஒரு பொருளாகவும் இறுக்கும்.  பின்னர் நீ நான் என்று வேறுபாடு இல்லாமல் அந்த பொன்னம்மபலமே மிஞ்சும். (அட்டகம் --  தந்தனை தன் மயமாக்கி ....).  பின்னர் எல்லையில்லா ஆனந்தம் உடலில் பாயும்.  வானவேடிக்கை நடக்கும் ஆயிரதுஎட்டு தாமரை இதழ் மேல் சிவலிங்கம் தோன்றி மறையும். 
அதன் பின்னர் இப்போது கூடவே சங்கு ஓசையும் பின்னர் சலங்கை ஓசையும் கேட்கும்.  பின்னர் அமைதி நிலவும்.  பின்னர் பொன்னம்பலத்தில் ஒரு ஓட்டை ஏற்படும் அதுதான் சொர்கவாசல் திறப்பதாகவும். ( காகபுஜண்டர் பாடல் --  கொல்லிமலை ஏறி குகையை கண்டு குகையில் இருந்து தவமே செய்தால் ....) . இப்போது உள்ளே செல்லும் காற்று  வெளியே வராது. 
இடகலை, பிங்கலை மற்றும் பொன்னம்பலம் மூன்றும் ஒன்றாகிவிடும் இதுவே முச்சுடர் ஆகும். ( அகத்தியர் பாடல் --  ரவிமதிசுடர் மூன்றும் ஒன்றது ஆகும் பின்னர் தணலாய் கீழ் நோக்கி  பாயும் .....) கனல் போல் உடலில் வெப்பம் பரவும். உடல் வெப்பத்தில் வேதிக்கபடும்.   பின்னர் எல்லா காட்சிகளும் மறைந்து நான் நீ என்ற இரு நிலையும் இல்லம்மல் போகும். 
இப்போது பத்து திசைகளும் தெரியும் உங்கள் உடல் பற்றிய நினைப்பு மறைந்து எல்லையில்லாமல் நாமே விரிந்து விளங்கும்.  பின்னர் அந்த நிலையும் போய் இப்போது இங்கு என்ன நடக்கிறது  என்றே தெரியாது.  இதுவே சும்மா  இருக்கும் இடமாகும்.  அந்த நிலையில் எவ்வளவு நேரம் நீடித்தது என்றும் தெரியாது. 
கண்ணை திறந்தால் சிலமணி நேரம் கடந்து இருக்கும். இதுவே அருட்பெரும் ஜோதி அனுபவமாகும்.  இந்தநிலையை  அடைந்த பிறகே அறிவு துலங்க ஆரம்பிக்கும்.  தன்னை பற்றிய அறிவும், உலகத்தின் இயக்கம் மற்றும் இறைநிலை பற்றிய அறிவும் விளங்கும்.  இதன் பின்னர் ஞான பாதை துலங்கும்.  அதன் பின்னர்  என்னவாகும் என்று ஆண்டவர் அறிவித்தபின் எழுதுகிறேன். 
கண்களின் ஒளி ---  நட்சத்திர ஒளி . 
மனதின் ஒளி ---  வெள்ளை ஒளி . 
ஜீவனின் ஒளி ---  பொன் ஒளி. 
ஆன்மாவின் ஒளி --- செவ்வொளி 
ஆன்மாவுக்குள் -- பதியாக அருட்பெரும்ஜோதி ஆண்டவர் விளங்குகிறார். நானே கடவுள் 
என்று சொல்லுவதை விடுத்தது என்னுள் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கிறார் என்பதை 
உணர்ந்து தத்துவ நிவர்த்தி செய்து அவரோடு கலப்பதே சித்தி நிலையாகும். 

http://tamilnanbargal.com/tamil-blogs/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

கர்மயோகப் பயிற்சி முறை
ஓகத்தை (யோகம்) இராச யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கர்மயோகம் என்று நான்காக நம் ஆன்றோர் பிரித்து உள்ளனர். பதஞ்சலி முனிவர் சொல்லியபடி பயிலப்படுவது இராச யோகம், இறைவனே எல்லாம் என்று எண்ணி அவன் பால் ஒட்டுதல் கொள்ளுவது பக்தி யோகம், அறிவின் ஊடாக உண்மையைக் காண முயல்வது ஞான யோகம். கவனம் சிதறா மனத்துடன் ஒரு வேலையை மேற்கொள்ளுவது கரும யோகம் எனப்படுகின்றது. ஞான யோகத்தினும் சிறந்தது கருமயோகம். இந்த கருமயோகத்தை எவ்வாறு பயில்வது என்பது குறித்து சொல்லித் தருவார் யாரும் இலர்.
என்னுடைய 21 ஆம் அகவையில் இராசாசி கூடத்திற்கும் சட்டமன்ற மன்ற உறுப்பினர் விடுதிக்கும் பின்புறம் இருந்த சிவன் கோவிலின் பூசகர் திரு குப்புசாமி சிவாச்சாரியாரை அணுகிய போது அவர் எனக்கு பயிற்சி ஏடாக தந்த தட்டச்சு படியில் இருந்து பிறருக்கு பயன் நல்கும் எனும் நோக்கில் இங்கு எழுத்தில் வழங்குகிறேன்.
தன்நிலை அறிதல்
'தன்னை உணர்ந்தவர்க்கு தரணியில் குறைவில்லை' என்று ஒரு முதுமொழி உண்டு. உள்ளத்தில் எண்ணங்களை ஏந்திடுவோர்க்கு தன்னை அறிந்திடும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகின்றது. எண்ணங்கள் ஒருவர்க்கு சுமையே அன்றி இன்பம் அல்ல. தன்னை அறிதல் என்றால் என்ன? எங்ஙனம் தன்நிலை அறிவது. இயல்பாக இருப்போர் எவரும் தன்நிலை அறிவதில்லையா? தன்நிலை அறிதல் என்பது நாம் சற்றும் விரும்பி எதிர்பார்த்திடாத ஒன்று.   நாம் அவ்வப்போது என்ன செய்கின்றோம் என்பதை உள்ளதை உள்ளபடியே உணர்வது தன்நிலை உணர்தல் ஆகும். ஒரு காட்டு, ஒருவர் உண்ணுகின்ற போது மனம் உண்ணுதலோடு ஒன்றிப் போவது இல்லை. மாறாக, உணவு கொள்ளுகின்ற போது மற்றைய சேதிகளில் மனம் ஆழ்ந்து எண்ணமிடுகின்றது. அல்லது, உண்ணுபவர் பக்கத்தில் உள்ளவரோடு இடையிடையே அளவளாவுவார். இனி, சிந்தனையில் பேச்சில் மூழ்கிவிடுங்கால் உணவின் தன்மைகள் இன்னதென்பது அறவே மறந்துவிடும். இவ்வாறு உணவு உண்டுவிட்டு வருபவரிடம் என்ன உணவு உண்டீர்கள் என வினாவினால் அவருக்கு புசித்த உணவு குறித்து மறந்து போய் இருக்கும். மிகுந்த நினைவுகூர்தலுக்குப் பிறகே ஒருவாறு அதைப்பற்றி விடை இறுத்துவார். இதே போல் பல வேறு வேலைகளைச் செய்யும் போது மனம் அச்செயல்கள் மேல் படியாமல் வேறு எவற்றையோ சிந்திக்கின்றது. இது போன்ற நிலையைத் தான் தன்நிலை அறியாத நிலை என்பர்.
இன்னொரு காட்டு, நடந்து கொண்டிருக்கும் ஒருவருடைய மனம் தன் நடையில் ஏற்படும் பிழையை உணர்வதில்லை. சாலையில் செல்லும் போது ஏதோ ஒரு வழியாகச் சென்று விடுவதால் ஊர்தி போக்குவரத்து மிகுதியாக உள்ள சாலைகள் தவிர்த்து மற்றைச் சாலைகளில் மிகுந்த கவனம் தேவைப்படாததால் கால் ஏதோ நடந்து கொண்டிருக்க மனம் உலகம் எல்லாம் சுற்றித் திரியும். அப்போது நடையில், உடையில் ஏற்படும் கோல அலங்கோலங்களை அவர் அறிவதில்லை. சிலர் மிக அறுவறுப்பானபடி பேசிக் கொண்டோ அல்லது முகபாவங்கள் செய்து கொண்டோ கூட நடப்பர். அவற்றினை அவர்கள் அறியாமை நிலை கண்டு சிறுவர்கள் பார்த்து நகையாடுவர். அதையும் கவனிக்காமல் தான் போகின்ற போக்கில் போய்க் கொண்டிருப்பவரை பாதையில் இன்றும் பார்க்க முடிகின்றது. இதுதான் தன்நிலை மறத்தல் என்பது. தன்நிலை மறத்தல் என்ற எதிரிடையான செயலுக்கான இவ் விளக்கத்தின் மூலம் தன்னையறிதல் என்பது தன்நிலையை எப்போதும் உணர்ந்தபடி இருப்பதுவே என்பது படிப்பவர்க்குப் புலனாகும். ஆகவே, மன ஈடுபாட்டுடன் நாம் செய்யும் செயல்களைச் செய்வதே தன்னையறிதல். தன்னை அறிந்து செயல்படுவோர் தம் செயலில் வெற்றி கொள்வது உறுதி.
ஒரு வினையில் மனம் முழுமையாக ஈடுபடுமானால் அவ்வினையின் இறுதி முடிபு முன்கூட்டியே தெரிந்துவிடும்.
மனஈடுபாட்டுடன் செயற்படுவதைப் பழகுவோருக்கு எதிர்கால வாழ்வே, நிகழ்வே தெரிந்துவிடும். இதைத் தான் 'கர்மயோகம்' என்கின்றனர் ஆன்றோர். கர்மயோகத்தின் வாயிலாக ஒருவர் வளமை, வசதி, உடல்நலம், நீண்ட வாழ்நாள், எண்பெருஞ் சித்துகள் முதலாயவற்றை அடைகின்றார். தன்னைஅறிதல் என்பதன் அடிப்படையில் தான் 'கர்மயோகம் ' அமைந்துள்ளது, செயல்புரிகின்றது.
இனி. கர்மயோகத்தை பயிற்சி செய்வதற்கான சில எளிய வழிமுறைகள். இயல்பாக யோகத்திற்கு என்று நேரத்தை ஒதுக்கி காலத்தைச் செலவிட்டுப் பழக முடியாதவர்களுக்கு இந்த கர்மயோக முறை நிச்சயமாக மிகப் பயனுள்ளதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருக்கும். இவ்வகையில் செய்ல்பட்டு கர்மயோகத்தை கைக்கொள்ளுவதால் துன்பமற்ற வாழ்க்கையையும், இன்பமான வளத்தையும் வரையறையின்றி அடையலாம் என்பது இதன் சிறப்பான சேதி. மனிதர் வாழ்வில் யோகத்தை எந்த நிலையிலும் கடைப்பிடிக்கலாம். பொழுது இல்லை, நேரமில்லை என்பதற்காக ஒதுங்கிவிடும் கலை இதுவல்ல.
உறங்கிடும் முன்னம், உண்ணும் நேரம், குளிக்கும் வேளை, பணி செய்யும் நேரம், பிறரோடு பேசுகின்ற நேரம் என இப்படி நாம் நாள்தோறும் ஈடுபாடு கொள்ளும் வினைகளின் போதே இந்த யோகத்தைக் கடைப்பிடிக்கலாம். அதற்கான நிலைகள் இருக்கின்றன. அதன்படி கடைப்பிடிப்பதால் - பிற யோகிகள் செய்கின்ற யோகத்திற்கு கிடைக்கின்ற பயன்போல் இதிலும் பயன் கிட்டுமா? முன்னேற்றம் கிட்டுமா? என்றால் நேடுநேரம் தவம் இயற்றி அடைகின்ற அரும்பயன்கள் இந்த கர்மயோகத்திலும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
காலை வேளையில் கண் விழிக்கின்ற போதே இந்த கர்மயோகப் பின்பற்று முறைகள் தொடங்கிவிடுகின்றன. முதலில் சின்னாட்களுக்கு இது கடினமாகத் தோன்றினாலும் பின்னர் இது கைவந்த நிலை பெற்று மிக எளிதாகிவிடும். இதனை செய்யத் தொடங்கிய பின் நமது சாதாரண் வாழ்வில் எத்தனை நலன்களை உணராது இருக்கின்றோம் என்பது நமக்குப் புலனாகும்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் அறுசுவை கலந்திருக்கின்றது. நாம் பாடல் கேட்டுக் கொண்டும், தொலைக் காட்சி பார்த்துக் கொண்டும் அவசரத்தில் அள்ளிப் போட்டுக் கொள்வதால் அத்தனை சுவையும் உணராமல் வயிற்றை மட்டும் நிரப்பிக் கொண்டு எழுந்து விடுகின்றோம். இந்த கருமயோகப் பயிற்சியை மேற்கொண்ட பின் எத்தனைச் சுவையுள்ளதான உணவை சத்தற்றதாக எண்ணி உட்கொண்டு அறியாது இருக்கின்றோம் என்று எண்ணத் தோன்றும்.
காலைப் பயிற்சி
காலையில் தன்ணுணர்வு பெற்றவுடன் படுக்கையில் இருந்தவாறே எந்த இடத்தில் நாம் படுத்து இருக்கின்றோம், எந்த திசையில் தலை வைத்திருக்கின்றோம். தலைக்கு நேரே கதவுஅல்லது சாளரம் உள்ளதா? இரவு நாம் படுத்த நேரம் என்ன? இப்போது நேரம் என்ன? இந்த நேரத்தில் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று எண்ணி முடித்துவிட்டு அடுத்து இன்று முக்கியமாக என்னென்ன வேலைகளை என்னென்ன நேரங்களில் செய்யவேண்டும். இவ்வேலைகள் காரணமாக யார்யாரைச் சந்திக்க வேண்டும்?  அவ்ர்கள் பெயர்கள், அவர்களின் முகவடிவம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். இதுவே முதல் பயிற்சி. இதனை ஒருவார காலம் தொடர்ச்சியாகச் செய்யவேண்டும். ஒருவரது மனம் கூர்மை எய்துவதைக் கணக்கிட இது உதவும்.
இவ்வகையில் காலையில் கண் விழிக்கின்ற போதே இந்த கருமயோகப் பயிற்சியை துவக்கிடலாம். காலையில் கண் விழித்து எழுகின்ற போது தன்நிலை உணர்வது தான் மிக முக்கியம். இதனை ஒருவாரம் செய்த பின்பு தான் இதனால் எத்தனை நன்மைகள் கிட்டுகின்றன என்பது புரியும்.
இரவுப் பயிற்சி
ஒரு வாரம் அல்லது ஒரு மாதக் காலைப் பயிற்சிக்குப் பின் இரவில் படுக்கையில் படுத்து தூக்கம் கொள்ளும் முன் படுக்கையில் இருந்தபடியே தான் எந்த இடத்தில் படுக்கின்றோம்? எந்த திசையில் படுக்கின்றோம்? தலைமாட்டில் கதவு அல்லது சாளரம் இருக்கின்றதா? வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் படுக்கப் போய்விட்டனரா? என்று இருக்கும் இடம் பற்றிய நிலையும் அடுத்து இன்று காலை முதல் என்னென்ன வேலைகள் செய்தோம் அவை தொடங்கிய நேரம் நினைவில் இருக்கின்றதா?  எவர் எவரைக் கண்டோம். செய்த வேலைகளில் திருப்தி ஏற்பட்டதா? என்றுமில்லாத ஏதேனும் புதிதாக செய்திருக்கின்றோமா?  என்று எண்ணிய பின் 'இறைவா எனது வாழ்வில் இனியவை நிகழவும் முன்னெடுத்த முயற்சிகளில் வெற்றி கொள்ளும்படிக்கு ஆற்றல் பெறவும் நீ என்க்கு அருள் புரியவேண்டும்' என்று சொல்லிவிட்டு உறக்கம் கொள்ள வேண்டும். இதனை நாள்தோறும் தவறாமல் செய்ய வேண்டும். இவ்விரண்டையும், இதாவது, அதிகாலை விழித்து எழும் போதும், இரவில் தூங்கும் முன் படுக்கையில் இருக்கும் போதும் இப்பயிற்சிகளை செய்து வந்தால் 'தன்நிலை உணர்தல்' எனும் கருமயோகம் ஒருவர்க்குக் கைக்கூடும்.
இவற்றைத் தொடர்ந்து இந்தப் பயிற்சியில் ஒருவர் செய்ய வேண்டிய ஒன்று உணவு உண்ணும் போதும் 'தன்நிலை உணர்தல் ' என்னும் பயிற்சி ஆகும்.  இப்பயிற்சியில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளைச் செவ்வனே அமைத்துக் கொள்ள வேண்டும்.
உணவுப் பயிற்சி
உணவு உண்ணும் மூன்று பொழுதும் பிறருடன் இணைந்து உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். பாடல் கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது ஆகியவற்றை உணவின் போது கைவிட வேண்டும். உண்ணும் போது சிந்தனை செய்வதை விட்டுவிட வேண்டும். இவற்றைக் கைக்கொண்டால் மட்டுமே பயிற்சியை செவ்வனே செய்யமுடியும்.
உண்பதற்கு முன் எத்தகைய மன உறுத்தலும் இல்லாமல் உட்கார வேண்டும். மனதில் வேறு எந்த சிந்தனையும் அற்ற நிலையில் தான் உணவை உட்கொள்ள வேண்டும். சோற்றில் கைவைக்கும் முன் 'எனக்கு இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் ஊக்கத்தை குறைவுபடாமல் வைத்து வெற்றி கொள்ளும்படியாகச் செய் ' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு பின் சொல்லப்படும் முறையை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பிடி அல்லது கவள உணவையும் கவனமாக வாயில் வைத்து நன்றாக மென்று உமிழ்நீருடன் நன்கு கலந்து உண்ண வேண்டும். முதலில் நாம் என்ன உண்கின்றோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். முதல் கவளத்தின் அல்லது பிடியின் அளவு சற்றொப்ப என்ன அளவில் இருக்கும், இதில் என்னென் சுவைகள் இருக்கின்றன, இதாவது, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய அறு சுவையும் எந்தெந்த விகிதத்தில் கலந்திருக்கின்றன என்று கவனித்தால் அந்த உணவு எத்தனைச் சுவையோடு அமைந்து இருக்கின்றது என்பது விளங்கும். இயல்பாக நாம் உண்ணும் உணவில் இத்தகைய சுவை எங்ஙனம் ஊடுருவி நிற்கின்றது என்பது வியப்பாகவே இருக்கும். சுவைத்து உண்ணும் போது தான் அத்தனைச் சுவையும் இருப்பது நமக்குத் தெரியவரும். இவ்வாறே ஒவ்வொரு பிடி/கவள உணவையும் கூர்ந்து சுவைத்து உண்ண வேண்டும்.
இவ்வகையில் சுவைத்து உண்ணும் போது அளவிற்கு விஞ்சி உணவை உண்டிடமுடியாது. உமிழ்நீருடன் உணவு நன்றாகக் கலந்துவிடுவதால் செரிப்பதற்கு மிக எளிதாக இருக்கும். இதனால் உடல்நலத்தோடு மனநலமும் கிட்டுகின்றது. இதனை மட்டும் செவ்வனே தவறாமல் கடைப்பிடித்து உண்பதனால் தன்நிலை உணர்ந்துவிடில் வாழ்வுப் பாதையில் வளமான சோலைகளை சந்திக்கலாம்.
இப்படியாக விழிக்கின்ற வேளை, உண்ணுகின்ற வேளை, உறங்கு முன் என மூன்று நிகழ்விலும் தன்நிலை உணர்கின்ற பயிற்சியை செய்துவந்தால் வாழ்வில் கருமயோகத்தைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நலத்தில் பாதி நலம் கிட்டிவிடும். இதனை 90 நாள்கள் தவறாமல் கடைப்பிடித்துவரின் தன்னைச் சுற்றி உள்ள சூழ்நிலை விளங்கத் தொடங்கும்.
இவ்வாறாகவே எல்லாப் பொழுதிலும் தான் செய்கின்ற எல்லா வேலைகள் மீது கவனம் சிதறாத கருத்தை வைத்து நாள் முழுவதும் வினையாற்றி முடிப்பவர்களாக சிறிது சிறிதாகப் பயிற்சியை ஒவ்வொரு செயலிலும் செய்திடப் பழகிட வேண்டும். இதுவே கருமயோகத்தின் சாரம். இது யோக அடிப்படையில் நல்ல பயனை விளைக்கும்.
கர்மயோகத்திற்கு தமிழில் வினையாண்மை ஓகம் என்று சொல் அமைப்போம்.


http://paramarakasiyam.wordpress.com
http://tamilnanbargal.com


தன்வந்திரி அருளிய “தன்வந்திரி 1000” என்கிற நூலில் விவரிக்கப் பட்டிருக்கும் முத்திரைகளின் முதல் வகையான யோக முத்திரைகள் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் மற்ற வகையான தேக முத்திரைகளைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த முத்திரைகளைப் பற்றி தனது நூலின் 679 முதல் 713 வரையிலான பாடல்களில் விவரித்திருக்கிறார்.
முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிரதானம் என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம்.கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது.

நமது உடல் இயங்கத் தேவையான உயிர்சக்தியை நமது உடலிலுள்ள சக்கரங்களே உற்பத்தி செய்து தருகின்றன. எனவே இவற்றை சக்தி மையங்கள் என்று அழைக்கிறோம். இது மாதிரி மனித உடலில் சக்தி மையங்கள் 20000 க்கு மேல் இருப்பதாகவும், அவற்றில் முக்கியமானவை ஏழு என்றும் மற்றவை துணைச்சக்கரங்கள் என்று தன்வந்திரி கூறுகிறார்.

மூலாதாரம், சுவாதிச்டானம், மணிபூரகம், விசுத்தி, அனாகதம், ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகியன முதன்மை சக்கரங்கள் ஆகும்,இவை நலமாக இயங்கும் வரை உடல் நலமுடன் இருக்கும் என்றும், இவற்றில் ஏதும் தடைகள், தேக்கங்கள் உண்டாகும் பொது உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படும் என்கிறார். இந்த பாதிப்புக்களை இலகுவாக நிவர்த்தி செய்யவே முத்திரைகள் பயன்படுகின்றன என்கிறார். இந்த முக்கிய சக்கரங்கள் நமது விரல்களினால் கட்டுப்படுத்தப் படுகிறது என்கிறார் .

பெருவிரல் மணிப்பூரகத்தையும், சுட்டுவிரல் அனாகதத்தையும், நடுவிரல் விசுத்தியையும், மோதிரவிரல் மூலாதாரத்தையும், சுண்டுவிரல் சுவாதிச்டானத்தையும் கட்டுப்படுத்தும் என்றும் மற்றைய இரண்டு சக்கரங்களான சகஸ்ராரம், ஆக்ஞை ஆகியவை ஞானச் சக்கரங்கள் என்றும் இவற்றை விரல்களால் கட்டுப்படுத்த முடியாதென்றும் குறிப்பிடுகிறார். நமது உள்ளங்கையில் ஒரு துணைச் சக்கரமும், விரல் மூட்டுகளில் ஒவ்வொரு துணைச் சக்கரங்கள் வீதம் பல சக்கரங்கள் இருப்பதாகவும் அவை இந்த முத்திரைகள் மூலம் தூண்டப்பட்டு மூல சக்கரங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கும் என்கிறார். ஆகவே இவற்றை தெளிவாக உணர்ந்தே முத்திரைகளைப் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்கிறார். முத்திரைகள் வரிசையில் இன்று முதலாவதாய், நாம் இருகரங்களையும் கூப்பி வணக்கம் செய்வதே ஒரு முத்திரைதான்.தன்வந்திரி இதனை அஞ்சலி முத்திரை என்று சொல்கிறார். ஒவ்வொருவரும் தமக்கு அறிவை கற்பித்த குருவையும், தெய்வத்தையும் பிரம்மமாக எண்ணி இந்த முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.

படத்தில் உள்ளவாறு வலது கையின் விரல்கள் இடது கையின் விரல்களுடன் இடைவெளியின்றி இணைத்து இருகைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தல் வேண்டும்.இந்த முத்திரையைப் பிடித்த கைகள் மார்புப் பகுதியின் மையத்தில் இருத்தி கண்களை மெதுவாக மூடி தலையை சற்றுக் குனிந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நின்று கொண்டு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

நமது உடலில் வலப்பாகம் சிவனாகவும், இடப்பாகம் சக்தியாவும் இரண்டு ஆற்றல் மையங்களாய் உள்ளது. கைகளை இவ்வாறு இணைக்கும் போது புதிய அருட் சக்தி ஓட்டம் ஒன்று உருவாகி, பிராண சக்தியை நம்முள் நிலைகொள்ள செய்யும் என்கிறார்.

பின் குறிப்பு :-

இறைவனை அன்பால் வணங்குபவர்கள் மார்புக்கு நேராயும், ஞானத்தால் வழிபடுபவர்கள் நெற்றிக்கு நேராகவும், இறைவனிடம் சரணாகதி என்று வணங்குபவர்கள் தலைக்கு மேலாயும் இந்த முத்திரையை பிடித்து வணங்கலாம்.


லிங்க முத்திரை

படத்தில் உள்ளது போல, இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் அழுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும் இதுவே லிங்க முத்திரையாகும்.இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து, அளவான உடல் எடையினைக் கொடுக்கும். மேலும் இந்த முத்திரை ஜலதோசதிற்கு சிறந்த நிவாரணமாக அமையும் என்கிறார்.

வயிறு சம்பந்தமான நோயுள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் எச்சரிக்கிறார்.


ருத்ர முத்திரை...

படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல்வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும் என்கிறார்.

பொதுவில் முத்திரைகளை யாரும் செய்யலாம், இதற்கென எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவையில்லை. அமைதியான சூழலில் பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது இன்னமும் சிறப்பு. முத்திரைகளின் வகைக்கேற்ப குறைந்தது பத்து நிமிடம் முதல் முக்கால் மணி நேரம் வரை செய்ய வேண்டும். முத்திரைகளை தொடர்ந்து செய்து வருவதனால் மட்டுமே தேவையான பலன் கிட்டும். தகுந்த குருவின் மேற்பார்வையில் இவற்றை பழகி, பயன்படுத்துவது சிறப்பு.


அனுசாசன் முத்திரை

சுட்டு விரலை வளைவின்றி நேராக வைத்துக் கொண்டு, நடுவிரல் , மோதிரவிரல், சுண்டு விரல் ஆகியவற்றை பெருவிரலுடன் இணைந்து இருத்துவதே அனுசாசன் முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் மனமும் தெளிவடையும் முதுகுத்தண்டு வலுவடையும். அத்துடன் பல்வலி குறைந்து பற்கள் உறுதியாகும் என்கிறார்.


கருட முத்திரை

படத்தில் உள்ளவாறு இடது கையின் மேல் வலது கை வைத்து, இறுகிப் பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, பின்னர் மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடல் அசதி சோர்வு போன்றவை மறைவதுடன், உடல் புத்துணர்ச்சி பெருகும், நினைவாற்றல் அதிகரிக்கும், அத்துடன் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி பார்வை கூர்மையடையும்.இந்த முத்திரையை உணவு அருந்த முன்னர் (வெறும் வயிற்றில்) செய்தால் அதிகபலன் கிடைக்கும் என்கிறார்.

முகுள முத்திரை

வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்களா வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப் பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.


சுரபி முத்திரை

இந்த முத்திரையானது சற்று சிக்கலானது. அவதானமாக செய்ய வேண்டும்.

பெருவிரல்கள் இரண்டும் தொடாமல் படத்தில் உள்ள மாதிரி இருத்தல் வேண்டும், வலது ஆள்காட்டி விரல் நுனி இடது நடுவிரல் நுனியுடனும், வலது நடுவிரல் நுனி இடது ஆள்காட்டி விரல் நுனியுடனும், வலது மோதிரவிரல் நுனி இடது சுண்டு விரல் நுனியுடனும், வலது சுண்டு விரல் நுனி இடது மோதிரவிரல் நுனியுடனும் இணைந்து இருத்தல் வேண்டும் இதுவே சுரபி முத்திரையாகும். விரல்களில் அதிக அழுத்தம் தேவையில்லை.

ஆரம்பத்தில் இந்த முத்திரை செய்வது சிரமமாக இருந்தாலும் படிப்படியாக பழக்கப்பட்டுவிடும். நன்கு பழக்கப் பட்ட பின் இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

இந்த முத்திரை உடலை வலுவடையச் செய்யும் சிறுநீரகக் கோளாறு நிவர்த்தியாகும். சிந்தனை தெளிவாகும் உயர்ந்த எண்ணங்கள் மனதில் தோற்றுவிக்கும் என்கிறார். அத்துடன் இந்த முத்திரையானது யோகம் பயில்வோருக்கு மிகவும் உகந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

ஞான முத்திரை

மேலே படத்தில் உள்ளது போல சுட்டு விரல் நுனியால் பெருவிரல் நுனியை சற்று அழுத்தமாக தொட்டு, மற்ற விரல்கள் மூன்றும் வளைவின்றி நேராக ஒன்றோடொன்று சேர்ந்தபடி இருப்பதே ஞான முத்திரையாகும்.இதனை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

பெருவிரல் நெருப்பையும் , சுட்டுவிரல் காற்றையும் குறிப்பாதால் இவை இரண்டும் இணைந்து மனதில் உள்ள தீய சிந்தனைகளை அகற்றி ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் என்கிறார் தன்வந்திரி. மேலும் மனம் ஒருமுகப் படுவதுடன், கோபம் பிடிவாதம் பொறுமையின்மை போன்றவை மறையும். எதனையும் இலகுவாக கற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கும்

ஞானமுத்திரையை செய்து கொண்டே, தியானம் செய்தால் பல அற்புத சித்திகள் கை கூடுமாம்


குபேர முத்திரை


மேலே படத்தில் உள்ளவாறு பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.

இந்த முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.

சங்கு முத்திரை

இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதிய வைத்து, அதனை வலது கை விரல்களால் (பெருவிரல் தவிர்த்து) அதை இறுக மூட வேண்டும். வலது பெருவிரலானது இடது கையின் மற்றைய நான்கு விரல்களை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே சங்கு முத்திரையாகும்.(படம் மேலே இணைக்கப் பட்டுள்ளது)

இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

பெருவிரல் நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களில் ஒன்றை இயக்கம் விரல் இது மற்றைய நான்கு பஞ்ச பூதங்களையும் ஒன்றிணைக்கும் இதுவே இந்த முத்திரையின் செயற்பாடு என்கிறார் தன்வந்திரி. இந்த முத்திரை யானது மணிபூரகத்தை சிறப்பாக செயல்பட வைத்து குரலை வளமாகும் . மேலும் திக்குவாய், தொண்டை நோய்கள் போன்ற குறைபாடுகளையும் நீங்கும் என்கிறார்.


சுவகரண முத்திரை


தன்வந்திரி, தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்ற நூலில் சுவகரண முத்திரையை செயல் படுத்திடும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.
"சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டுசங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்திசகலகலை சாத்திரமுஞ் சித்திதோற்றியதோர் ஆதார மூலஞ்சித்திதிருவாசி ஆனதொரு வாசிசித்திதோத்திரமாய் நின்றதொரு பூசைசித்திசுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே"
- தன்வந்திரி வைத்தியம் 1000 -
சுவகரண முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”சம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பத்துக் கோடி மந்திரமும், சகல சாத்திரங்களும், ஆதாரமான மூலப் பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.
இந்த யோக முத்திரைகளை தினமும் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் செய்து வர உடலில் உள்ள பஞ்சபூத அம்சங்கள் நிலைபெறும். இதனால் கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்கா....யோக முத்திரைகளை முறையாக, குருமுகமாய் பயிற்சினை தொடங்கி, தொடர்ந்து பழகி வருதல் சிறப்பு.

யோனி முத்திரை

யோனி முத்திரையை செயல்படுத்தும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டுதீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ்சித்திமேலான அண்டமொடு புவனஞ்சித்திமய்யப்பா மையமென்ற சுழினைசித்திமாலொடு லட்சுமியும் தனங்கள்சித்திபையப்பா யோனி முத்திரயைப் பெற்றுபக்தியுடன் சிவயோகம் பணிந்து காணே"
- தன்வந்திரி வைத்தியம் 1000 -
மேலே படத்தில் உள்ளவாறு ”யோனி முத்திரை”யை இரு கரங்களிலும் செய்து, கண்களை மூடிக் மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”றீங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்திட தேவாதி தேவர்களுடன், அண்டமும், புவனமும் சித்தியாவதுடன், லட்சுமியும், பொன் பொருட்களும், மையமான சுழினையும் சித்தியாகும் என்கிறார்.

அபான முத்திரை


அபான முத்திரையினை செயல்படுத்திடும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"சித்தான அபான முத்திரையைச் செய்துதீர்க்கமுடன் கிலியென்று தியானஞ்செய்யவத்தான பூரணமாய் சிவயொகஞ்சித்திமகத்தான கற்பூர தீபஞ்சித்திவித்தான பிரமனொரு சரசுவதியுஞ்சித்திவேத மயமான சிவயொகஞ்சித்திசத்தான அபான முத்திரயினுடமகிமைசங்கையுடன் கண்டுசிவ யோகஞ்செய்யே"
- தன்வந்திரி வைத்தியம் 1000 -
மேலே படத்தில் உள்ளவாறு அபான முத்திரையை இரு கைகளிலும் செய்து, கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”கிலி”என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பூரணமான சிவயோகமும், வேத மயமான சிவயொகமும் சித்தியாவதுடன் பிரம்மன், சரசுவதி அருளும் சித்தியாகும் என்கிறார்.


“திருவினி”

திருவினி முத்திரையின் மகத்துவம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
"காணவே திருவினி முத்திரையைக் கொண்டுகருணையுடன் வங்கென்று தியானஞ்செய்யில்பூணவே ருத்திரர் முதல் சகல செந்தும்பூலோக ராசரோடு வசியமாகும்தோணவே சந்தான சவுபாக்கியம்சுத்தமுடம் ஐந்தறிவுஞ் சித்தியாகும்பேணவே ருத்திரியும் சித்தியாகும்பிலமான திருவினியால் சித்தியாமே"
- தன்வந்திரி வைத்தியம் 1000 -
மேலே படத்தில் காட்டியுள்ளவாறு திருவினி முத்திரையினை இரு கைகளிலும் அமைத்து, கண்களை மூடி, மனதினை ஒருமுகப் படுத்தி மனக்கண்ணால் புருவ மத்தியை கவனித்து பார்த்து ”வங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய ருத்திரன் முதலான அனைத்து தெய்வங்களுடன், பூலோக அரசர்களும் வசியமாவதுடன் புத்திர பாக்கியமும், ஐந்தறிவும், உருவத்தை மாற்றும் தன்மையும் சித்திக்கும் என்கிறார்.
யோக்முத்திரை வரிசையில் மூன்றாவதான இந்த முத்திரையை பிரம்ம முகூர்த்தத்தில் ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.
மோகினி முத்திரை


"ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்துஅருள் பெருக்கும் புருவமதில் மனக்கண்சாற்றிஓமப்பா யகாரமுடன் உகாரங்கூட்டிஉத்தமனே மகாரமென்ற மவுனத்தேகிகாமப்பால் கானற்பால் சித்தியாகும்கருணைதரு மனேன்மணியுஞ் சித்தியாகும்வாமப்பால் பூரணமுஞ் சித்தியாகும்மகத்தான நால்பதமுஞ் சித்தியாமே"
- தன்வந்திரி வைத்தியம் 1000 -
மேலே படத்தில் உள்ளது மோகினி முத்திரை, இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”ஓம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நான்கு பாதங்களும், பரம்பொருள் பற்றிய தெளிவும், கருணையுள்ள மனோன்மணித் தாயின் அருளும் சித்தியாகும் என்கிறார்.

சோபினி முத்திரை


"பாரப்பா சோபினி முத்திரையைச் செய்துபக்தியுடன் அம்மென்று தியானஞ்செய்யநேரப்பா சொல்லுகிறேன் சர்வலோகம்நிசமான ஆதாரஞ் சித்தியாகும்மேரப்பா மேருகிரி தீபஞ்சித்திமெய்யான மயேச்வரனும் மீச்வரியுஞ்சித்திகாரப்ப சோபினி முத்திரையினாலேகண்ணடங்கா போதசிவ யோகமாமே"
- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் இருப்பது சோபினி முத்திரை. இந்த முத்திரையை இரு கைகளில் வைத்துக் கொண்டு கண்களை மூடி கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”அம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நிஜமான ஆதாரப் பொருளை உணர்வதுடன், மகேச்வரன், மகேச்வரி அருள் கிடைப்பதுடன், சிவயோகம் சித்திக்கும் என்கிறார்.
_________________


http://1234567.forumbuild.com/viewtopic.php?f=19&p=1823

குண்டலினி சக்தி

Posted by ss Saturday, November 9, 2013 0 comments

அது என்ன குண்டலினி? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தை யை உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக “யோகம்” இருக்கிறது. அடிப் படையான உயி ராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத் தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.
இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங் கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்க ளில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார் கள். உண்மையில் பாம்பு குண்ட லினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினி யும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும். குண்டலி னியை எழுப்பினால் என்ன செய்ய முடி யும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.
சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உண வாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. (விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்து விட்டேன்.)
இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக் கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொரு ளாகக் கருத வேண்டுகி றேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ் வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்க ளையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.
முதலில் மூலாதாரம்: இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள் ளது. இந்தச்சக்கரத்தின் முக்கிய செயல் பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவ னாக இருப்பான். இந்த மூலா தாரச் சக்கரம் தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப் படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங் களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.
இரண்டாவது சுவாதிஷ்டானம்: இது பிறப்புறுப்புக்கு சற்று மேலா க அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட் டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன் பங்களை அனுபவிக்க நாட்டம் கொள் வான். இந்தச் சக்கரம் நீர்த்தத்துவத்துக்கு உதாரண மாகச் சொல் லப்படுகிறது.
மூன்றாவது மணிப்பூரகம்: இது தொப்புளு க்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதி பலிக்கிறது.
நான்காவது அனாகதம்: இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதய த்துக்கு அரு கில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படை ப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத் தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகி றார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது? சிந்திக்க நேர்கிறது.)
ஐந்தாவது விசுக்தி: இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்து வது ஆகும்.(ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்த ப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப் பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்?)
ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை): இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்து ள்ளது. ஞானம், பேரறிவு ஆகிய வை வெளிப் படக் காரணமாக அமை வது இந்தச் சக்கரம்தான்.
இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்): இது உச்சந் தலை யில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தரு வது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர் வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹா ரம் தூண்டப் பட்ட நிலையைக் குறிக்கவே.) (சக்கரங் களோடு சேர்த்து பஞ்சபூதத் தத்து வத்தை இங்கே விளக்க இயலாது. அதில் கேள்வி, குழப்பம் இருப்பின் பின்னாளில் விளக்கம் தரப்படும்.)
சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்  தூண்டப்படுவது இல்லை. பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப் பட்டிருப்பதிலே யே வாழ்க்கையை முடி த்துக்கொள்கிறார் கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகி றார்கள். ஏழு சக்க ரங்களும் தூண்ட ப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.
இந்தக் குண்டலினியின் முக்கிய செயல் பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலி னியை எழுப்பி, சக்கரங்க ளைத் தூண்டும் போது மனிதனின் அளப் பறியா ஆற்றல் வெளிப் படுகிறது.
அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனு க்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும். பொதுவாக வே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சி களும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன் கள், மனம் மற் றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப் பட்டிருக்கின்ற ன. இவ்வாறு கொண்டு வரும் போது புலன் கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடை வதே மனித வாழ்வின் இலட்சி யம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு. ‘ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந் தம்?’ என்கிறீர்களா?
நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, “ நான் ஏன் பிறந்தேன்” என்று உங்களைக் கேட்டுக் கொண்டதுண்டா? கேட்டிருந் தால் பதில் கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையான தா? அப்பதில் முழுமை எனில் உங்க ள் வாழ் வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும். ஆனால் பெரும் பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத்தான் இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவ தில்லை. பெரும்பான்மை மக்கள்  “பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன்” என்று தான் வாழ்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வாழ்வை பரி பூரணமாக உணர்வ தோ வாழ்வதோ இல்லை. (நீங்களும் தான்!!?)
பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப் பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவ தில்லை. இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால்தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரண மாக்க முடியும். இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண் டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்பு க்கு பின்) புரியவில்லை. அப் புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னு ம் உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது. நீங்கள் வேறு எதிலாவது ஈடு பட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளா கவோ இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விக ளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரியவைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறும னே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித்தள்ளத் தான் முடியும். இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரி பூரணமாக்கும் அரு மருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண மனிதனுக்கும் இது சாத்திய மே. தேவை முயற்சி மட்டுமே. அதற் கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகா வும் தியானமும். சாதார ண வாழ் வுக்கு இது மிகத் தொலைவா னது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகைய தொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாண த்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த் திச் செல்லும். இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”. இந்த யோக நிலையை யே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பல வாறாகச் சொல்கிறார்கள்.
சாதரண வாழ்வுக்கு இது நெருங்கி யதே என்று சொல்லியாகி விட் டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ் வில் எதை அடைவ தாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லா வற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொ வொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.
உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.
இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூத் தோடு இணைத்து இருப்பதை விரு ம்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூக த்தில் இருந்தே யோக நிலையை அடையலா ம். இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியா சப்படும். அதற்குதான், “குரு” என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால் தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.
இந்தத் தருணத்தில் யோகப் பயிற்சியை எளிமையாக வகுத்து, தொகுத்து, உலகு க்கு அளித்த யோகாவின் தந்தையாம் பதஞ்சலி முனியை வணங்கி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

 http://vidhai2virutcham.com/

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates