Followers

Powered by Blogger.

பாவ சேர்க்கை பலன்கள் –ஓர் விளக்கம்
தசா-புக்தி பலன் நிர்ணயத்தில், ஒரு புக்தியில் குறைந்த பட்சம் ஒரு பாவம்,அதிகபட்சம் மூன்று பாவங்கள் வரை ஒரே நேரத்தில் இயங்கும். அது எப்படி என பார்ப்போம்.
கிரகங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை கீழே தரப்பட்டுள்ளன.
1. மண்டல கிரகங்கள் – சூரியன்,சந்திரன்
2. தாரா கிரகங்கள் – சனி,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன்
3. சாயா கிரகங்கள் – ராகு,கேது
மண்டல கிரகங்களான சூரிய,சந்திரர்களுக்கு ஒரு ஆட்சி வீடு மட்டுமே உண்டு. எனவே இவர்கள் ஒரு பாவத்திற்கு மட்டுமே ஆதிபத்தியம் வகிப்பார்கள். தாரா கிரகங்களான சனி,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகியோர்களுக்கு இரண்டிரண்டு ஆட்சி வீடுகள் உண்டு. எனவே இவர்கள் இரண்டிரண்டு பாவங்களுக்கு ஆதிபத்தியம் வகிப்பார்கள். சாயா கிரகங்களான ராகு,கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் கிடையாது. எனவே ராகு கேதுக்களுக்கு பாவாதிபத்தியம் கிடையாது. இதன்படி சூரிய,சந்திரர்கள் தான் நின்ற வீட்டிற்கும், தான் ஆதிபத்தியம் பெறும் வீட்டிற்குமாக சேர்த்து அதிகபட்சமாக இரண்டு பாவங்களை ஒரே சமயத்தில் இயக்குவார்கள். ஜாதகத்தில் அவர்கள் ஆட்சி வீட்டில் நின்றால் ஒரே பாவத்தை மட்டும் ஒரு சமயத்தில் இயக்குவார்கள். சனி,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகியோர், தான் நின்ற வீட்டிற்கும், தான் ஆதிபத்தியம் பெறும் வீடுகளுக்குமாக சேர்த்து அதிகபட்சமாக மூன்று பாவங்களை ஒரே சமயத்தில் இயக்குவார்கள். ஜாதகத்தில் அவர்கள் ஆட்சி வீட்டில் நின்றால் இரண்டு பாவங்களை மட்டும் ஒரு சமயத்தில் இயக்குவார்கள். ராகு,கேதுக்கள் தான் நின்ற வீட்டை மட்டுமே இயக்குவார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட புக்தியில் குறைந்த பட்சமாக ஒரு பாவம்,அதிக பட்சமாக மூன்று பாவங்கள்வரை இயங்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பாவங்கள் ஒரே சமயத்தில் இயங்கும்போது, அந்த பாவங்களின் கூட்டு விளைவே ஜாதகருக்கு பலாபலன்களாக கிடைக்கும். இத்தகைய பாவங்களின் கூட்டு விளைவே பாவ சேர்க்கை பலன்கள் என கூறப்படுகிறது.
ஒரே சமயத்தில் இயங்கும் இரண்டு பாவங்கள் ஒன்றுகொன்று சஷ்டாஷ்டகமாக (6-8) அமைந்தால் அவ்விரண்டு பாவங்களும் கெடு பலங்களையே செய்யும் (இரண்டு பாவாதிபதிகளும் ஒரே கிரகமாகவோ, பரஸ்பரம் நட்பு கிரகங்களாகவோ அமைந்தால் கெடு பலன்கள் அதிகமாக இருக்காது). அதாவது ஆய்வுக்குரிய பாவத்திற்கு எட்டாவதாக அமையும் பாவம் ஆய்வுக்குரிய பாவத்தை அழிக்கும். ஆய்வுக்குரிய பாவத்திற்கு ஆறாவதாக அமையும் பாவம் ஆய்வுக்குரிய பாவத்திற்கு தடைகளையும்,சிக்கல்களையும் உண்டாக்கும்.
ஒரே சமயத்தில் இயங்கும் இரண்டு பாவங்கள் ஒன்றுகொன்று துவிதுவாதசமாக (2-12) அமைந்தால், ஆய்வுக்குரிய பாவத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவம், ஆய்வுக்குரிய பாவத்தை தடை செய்யும். ஆய்வுக்குரிய பாவத்திற்கு இரண்டாவதாக அமையும் பாவம் ஆய்வுக்குரிய பாவத்தை வளர்க்கும்.
ஒரே சமயத்தில் இயங்கும் இரண்டு பாவங்கள் ஒன்றுகொன்று சதுர்தசமமாக (4-10) அமைந்தால், அப்பாவாதிபதிளின் பரஸ்பர நட்பு, பகை உறவை பொறுத்து, நற்பலன்களோ,தீய பலன்களோ நடக்கும். இரண்டு பாவங்களுக்கும் ஒரு கிரகமே அதிபதியாக அமைந்தால் நற்பலன்களே நடக்கும்.
ஒரே சமயத்தில் இயங்கும் இரண்டு பாவங்கள் ஒன்றுகொன்று 1-7, 3-11, 5-9 ஆக அமைந்தால், அப்பாவங்களின் கூட்டு விளைவு, ஜாதகருக்கு நற்பலன்களாக கிடைக்கும்.
உதாரணமாக தனுசு லக்கினக்காரர் ஒருவருக்கு ராகு தசையில் புதன் புக்தி நடந்துகொண்டிருக்கிறது. புக்தி நாதன் புதன் குருவின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) அமர்ந்துள்ளார். அவருக்கு எந்தெந்த பாவங்கள் கூட்டாக இயங்கும் எனப்பார்ப்போம்.
புக்தி நாதன் நின்ற நட்சத்திர நாதனான குரு, லக்கினத்திற்கு 9ல் அமர்ந்துள்ளார். அவர் 1-4 ஆம் பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறார். எனவே புதன் புக்தி காலத்தில் 1-4-9 ஆம் பாவங்கள் கூட்டாக இணைந்து செயல்படும். இப்பாவங்களின் கூட்டு விளைவே ஜாதகருக்கு பலாபலன்களாக புதன் புக்தி காலத்தில் கிடைக்கும். புதன் புக்தி காலத்தில் ஜாதகருக்கு என்னென்ன பலன்கள் நடக்கும் என பார்ப்போம்.
முதலில் குறிப்பிட்ட புக்தியில் செயல்படும் பாவங்களை, இரு பாவ சேர்க்கைகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இதன்படி 1-4-9ஆம் பாவங்களை 1+4, 1+9, 4+9 எனப் பிரித்துக்கொள்ளவும். இவ்வாறு பிரித்து எழுதிக்கொண்ட பின் அவற்றிற்குரிய பாவ சேர்க்கை பலங்களை கணிக்க வேண்டும்.
ஒன்றாம் ,நான்காம் பாவங்களின் சேர்க்கை பலன்கள் (1+4)
ஒன்றாம் பாவம் ஜாதகரைக்குறிக்கும். நான்காம் பாவம் தாய்,மண்,மனை, வீடு,வாகனம் இவைகளைக்குறிக்கும். எனவே இவ்விரண்டு பாவங்களும் இணைந்து செயல்படும்போது, தாய்,சேய் உறவு சுமூகமாக இருக்கும் (இரு பாவ அதிபதிகளும் ஒரே கிரகமாகவோ,அல்லது பரஸ்பர நட்பு கிரகங்களாகவோ அமைந்தால் மட்டும்).
ஜாதகருக்கு வீடு,வாகன பிராப்தி உண்டு. தாய்க்கு ஜாதகரால் கௌரவம் கிடைக்கும் ( 4க்கு 10 ஆம் வீடு 1ஆம் வீடாகும். 10 ஆம் வீடு கௌரவத்தைக்குறிக்கும்). தாய் உத்யோகத்தில் இருந்தால் அவருக்கு பணிஉயர்வு கிடைக்கும். சொந்த தொழில் செய்பவராக இருந்தால் தொழில் விருத்தி உண்டு.
ஒன்றாம் ,ஒன்பதாம் பாவங்களின் சேர்க்கை பலன்கள் (1+9)
ஒன்றாம் பாவம் ஜாதகரைக்குறிக்கும். ஒன்பதாம் பாவம், தந்தை, ஆசிரியர், ஆலய வழிபாடு, குரு ஆசி, தீர்த்த யாத்திரை, நெடுந்தூர பயணம், உயர் கல்வி, ஆராய்ச்சிக்கல்வி இவைகளைக்குறிக்கும். ஒன்று, ஒன்பதாம் பாவங்கள் ஒன்றுக்கொன்று 5-9 ஆக அமையும் பாவங்களாகும். எனவே இவ்விரண்டு பாவங்களும் இணைந்து செயல்படும்போது தந்தை, மகன் உறவு சுமுகமாக இருக்கும். தந்தையும்,மகனும் பரஸ்பரம் உதவிக்கொள்வர். ஜாதகன் தன் இஷ்ட தெய்வத்தை வணங்குவதில் ஆர்வம் காட்டுவான். தந்தையார் தன் குல தெய்வத்தை வணங்குவதில் அக்கரை காட்டுவார்.பொதுவாக தந்தையும்,மகனும் ஆன்மீக விசயங்களில் அதிகம் நாட்டம் செலுத்துவார்கள். தந்தை, மகன் இருவருக்கும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
நான்காம் ,ஒன்பதாம் பாவங்களின் சேர்க்கை பலன்கள் (4+9)
நான்காம் பாவம் தாயைக்குறிக்கும். ஒன்பதாம் பாவம் தந்தையைக்குறிக்கும். எனவே தாய்,தந்தையரிடையேயான உறவு சுமூகமாக இருக்கும். நான்காம் பாவமும், ஒன்பதாம் பாவமும் ஒன்றுக்கொன்று 6-8 ஆக அமைவதால் தாய்க்கு உடல் நலம் பாதிக்கும்(4க்கு 6ஆம் பாவமாக அமைவது 9ஆம் பாவம்). தந்தைக்கு மரண பயம் உண்டாகும் (9க்கு 8ஆம் பாவமாக அமைவது 4ஆம் பாவம்). ஜாதகரின் பயணங்கள் தடைபடும்(9க்கு 8ஆம் பாவமாக அமைவது 4ஆம் பாவம்). ஜாதரின் வாகனம் பழுதடையும். ஜாதகரின் வீட்டில் பழுது ஏற்படும்(4க்கு 6ஆம் பாவமாக அமைவது 9ஆம் பாவம்).
மேற்கண்டவாறு பாவ சேர்க்கை பலன்களை கணித்து கூறவேண்டும்.







சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம் என்னும் தமிழ் வைத்திய நூல்


சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கை நூல்

ஆங்கில தேதிக்கு கிழமை கண்டுபிடிக்கும் வழி
----------------------------------------------------------------------
ஆங்கில வருடங்களில் எந்த வருடமானாலும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு கிழமை கண்டுபிடிக்க ஒரு எளிய வழிமுறை இருக்கிறது . அதை இங்கு விளக்குகிறேன்.
1 வருடத்திற்கு 365 நாட்கள்
1லீப் வருடத்திற்கு 366 நாட்கள்
1 வாரத்திற்கு 7 நாட்கள்
கிழமைகள் 7 நாட்களுக்கு ஒரு முறை திரும்ப திரும்ப சுழற்சியாக வரும். ஆகவே ஒரு வருடத்தின் மொத்த நாட்களான 365 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்.
365/7 = ஈவு 52 மீதி 1
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
(1)ஒரு வருடத்திற்கு மீதம் -1 நாள்
(2)100 வருடத்திற்கு மீதம் – 100 நாள்
(100*1=100)
(3) 100 வருடங்களில் 24 லீப் வருடங்கள் வரும். லீப் வருடங்களில் வரும் அதிக நாட்கள் -24 நாட்கள்
(1)+(2)+(3) = 1+100+24= 124 நாட்கள்
இந்த 124ஐ திரும்பவும் 7 ஆல் வகுக்க வேண்டும்.
124/7= ஈவு 17 மீதி 5
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
எனவே
(அ) 100 வருடங்களுக்கு மீதம் – 5 நாட்கள்
(ஆ) 400 வருடங்களிக்கு மீதம் (4*5=20) – 20 நாட்கள்
(இ) 400 வது வருடம் லீப் வருடமாகும் ஆகவே அதிக நாட்கள் – 1 நாள்
(100 வது, 200வது, 300வது வருடங்கள் லீப் வருடங்கள் இல்லை)
(ஆ)+(இ) = 20+1=21 நாட்கள்
இந்த 21 ஐ திரும்பவும் 7 ஆல் வகுக்க வேண்டும்.
21/7= ஈவு 3 மீதம் 0
ஞாபகத்தில் வைக்க வேண்டியது
100 வருடங்களுக்கு மீதம்- 5 நாட்கள்
400 வருடங்களுக்கு மீதம்- 0 நாட்கள்
எந்த வருடத்தில் எந்த தேதிக்கு கிழமை கண்டுபிடிக்க வேண்டுமோ அந்த வருடத்திற்கு முந்தைய வருடதிற்கான மீத நாட்களை கண்க்கிட்டுக்கொண்டால் தேவையான ஆண்டில் வரும் தேதிக்கு கிழமையை கண்டு பிடிக்கலாம்.
உதாரணமாக 28-07-1968 அன்று என்ன கிழமை என்று பார்ப்போம்.
முதலில் 1968 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டான 1967 க்கு மீத நாட்கள் எத்தனை என்று பார்ப்போம்.
1967 கீழ் கண்டவாறு பிரித்து எழுதிக்கொள்ள வேண்டும்
(க)1600 (4*400=1600) வருடங்களுக்கு மீதம் – 4*0 = 0 நாட்கள்
(கா) 300 (3*100 = 300) வருடங்களுக்கு மீதம் – 3*5 = 15 நாட்கள்
(கி) 67 வருடங்களுக்கு மீதம் – 67 நாட்கள்
(கீ) 1900 முதல் 1967 வரை 16 லீப் வருடங்கள் வருகின்றன ,எனவே இந்த 16 லீப் வருடங்களுக்கு அதிக நாட்கள் – 16 நாட்கள்
(க)+(கா)+(கி)+(கு) = 0+15+67+16 =98
98 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்.
98/7= ஈவு 14 மீதி 0
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
இப்பொழுது 28-07-1968 அன்று என்ன கிழமை என்று பார்ப்போம்.
(ச) 1967 ஆம் ஆண்டின் மீதம் – 0 நாட்கள்
(சா) 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் – 31 நாட்கள்
(சி) 1968 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் – 29 நாட்கள்
(1968 லீப் ஆண்டு)
(சீ) 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் – 31 நாட்கள்
(சு) 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் – 30 நாட்கள்
(சூ) 1968 ஆம் ஆண்டு மே மாதம் – 31 நாட்கள்
(செ) 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் – 30 நாட்கள்
(சே) 1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரை- 28 நாட்கள்
(ச)+(சா)+(சி)+(சீ)+(சு)+(சூ)+(செ)+(சே) = 0+31+29+31+30+31+30+28 = 210
இந்த 210 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்
210/7 = ஈவு 30 மீதி 0
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
மீதி 0 வந்தால் ஞாயிற்றுக்கிழமை
மீதி 1 வந்தால் திங்கள் கிழமை
மீதி 2 வந்தால் செவ்வாய்க்கிழமை
மீதி 3 வந்தால் புதன் கிழமை
மீதி 4 வந்தால் வியாழக்கிழமை
மீதி 5 வந்தால் வெள்ளிக்கிழமை
மீதி 6 வந்தால் சனிக்கிழமை
நாம் உதாரணமாக எடுத்துக்கொண்ட 28-07-1968 அன்று மீதி 0 வருவதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாகும். இவ்வாறு எந்த வருடத்தில் உள்ள தேதியானாலும் கிழமை கண்டு பிடித்துக்கொள்ளலாம்.

உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள். மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.

நாள் என்ன செய்யும்?
நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள். பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை. செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது. சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள். 
ஞாயிற்றுக்கிழமைசூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.
திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம் நடத்தலாம். காதுகுத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்), சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.
செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது. செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல், புதுமனை புகுதுல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி, கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது. 
வியாழக்கிழமைமேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், கிருகப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.
வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம். காது குத்துதல், சாந்தி முகூர்த்தம், புதிய வாகனங்கள் வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.
சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு, நிலம், மனை வாங்குதல், விற்றல் போன்ற செயல்களுக்கும், இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.
திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்; ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர். சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஞாயிறு-பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி
திங்கள்-சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
செவ்வாய்-உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்
புதன்-அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்
வியாழன்-கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
வெள்ளி-பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்
சனி-ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி
ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.
திதிகள்திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

நற்பலன் தரும் திதிகள்ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.
சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.
வளர்பிறை காலம் : அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள்.
தேய்பிறை காலம் : துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி திதிகள்.
ஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை, தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு. அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பூரண பலன் தராது. எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
வளர்பிறை        தேய்பிறை
பஞ்சமி                பிரதமை
சஷ்டி                    அஷ்டமி
சப்தமி                   நவமி
சதுர்த்தசி             தசமி
பவுர்ணமி              .....

பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்: -
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர். அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.

நட்சத்திர பலன்கள்
பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேநாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.
யோகங்கள்: பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும்.  அசுவினி-புதன், மிருகசீரிஷம்-வியாழன், பூசம்-வெள்ளி, சித்திரை-சனி, அனுஷம்-ஞாயிறு, மூலம்-புதன், உத்திராடம்-திங்கள், திருவோணம்-வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.

ராகுகாலம்
சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள். ஒவ்வொரு நாளிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

ராகுகாலம் என்று எப்போது?
ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை
திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை
சனி 9 மணி முதல் 10.30 மணி வரை.

எமகண்டம்
எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். பகலில் வரும் எமகண்ட நேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு நாளிலும் இரு வேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ...
கிழமை பகல் நேரம் இரவு நேரம்
ஞாயிறு 12.00-1.30 6.00-7.30
திங்கள் 10.30-12.00 3.00-4.30
செவ்வாய் 9.00-10.30 1.30-3.00
புதன் 7.30-9.00 12.00-1.30
வியாழன் 6.00-7.30 10.30-12.00
வெள்ளி 3.00-4.30 9.00-10.30
சனி 1.30-3.00 7.30-9.00

குளிகன் அல்லது குளிகை காலம்: குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. எனவே அசுப காரியங்களைத் தவிர்ப்பது அவசியம். 

கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதம்                          தேதிகள்
சித்திரை                        6, 15
வைகாசி                       7, 16, 17
ஆனி                               1, 6
ஆடி                                 2, 10, 20
ஆவணி                         2, 9, 28
புரட்டாசி                      16, 29
ஐப்பசி                             6, 20
கார்த்திகை                    1, 10, 17
மார்கழி                           6, 9, 11
தை                                   1, 2, 3, 11, 17
மாசி                                 15, 16, 17
பங்குனி                            6, 5, 19

வாரசூலைவாரசூலைக்கு சூலதோஷம் என்றும் பெயர். வாரசூலையை நிருவாணி சூலம் என்றும் களரி காலன் என்றும் அழைப்பதுண்டு. பகலில் வாரசூலை நேர் திசைகளிலும் இரவில் மூலை திசைகளிலும் இடம்பெற்று இருக்கும் என்பது ஜோதிட நியதி. வாரசூலை உள்ள திசையை நோக்கிப் பயணம் செய்வது கூடாது. அவசியம் பயணம் செய்ய வேண்டுமென்றால் பரிகாரம் மேற்கொண்டு பிரயாணம் செய்யலாம். வார சூலைக்கான பரிகாரம் செய்வது குறிப்பிட்ட பரிகாரப் பொருளை சிறிதளவு உண்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்குவது தான். சிலர் அப்பொருளை தானம் செய்வது வழக்கம்.
தின ஓரையில் பயன்கள்:  ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். எந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது.  உதாரணமாக திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் சந்திரனே ஆதிபத்தியம் செய்வதால், அது சந்திர ஓரையாகிறது. அடுத்தடுத்த ஒரு மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது. அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரை ஆரம்பாகிறது. இப்படியாக கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. மாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.
சூரிய ஓரை: விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.
சந்திர ஓரை: திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.
செவ்வாய் ஓரை: போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
புதன் ஓரை: ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.
குரு ஓரை: புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.
சுக்கிர ஓரை: கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.
சனி ஓரை: உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்.
சந்திராஷ்டமம்நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும், சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது. கோள்களின் இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படி சந்திரன் ஒருவரது ஜனன ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் காலமே அவரது சந்திராஷ்டம காலம் ஆகும். சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் அந்த நபர் இயன்றவரை புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். அவருக்கான சுபகாரியங்களை அதாவது திருமணம், பெண் பார்த்தல், பணியில் சேருதல் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத திடீர் பயணங்களையும் வெளிநாடு, வெளியூர் பிரயாணங்களையும் தவிர்ப்பது அவசியம்.
(உதாரணமாக.. மேஷ ராசியினருக்கு எட்டாம் இடமான விருச்சிக ராசிக்கு உரிய விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன் வரும் தினங்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.)
2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பு அநேகமாக 18 வருடங்களுக்கு ஒரு முறையே வரும். மல மாதத்தினை மட்டுமல்லாமல், மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல என்பது பொதுவிதி. ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே. ஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது இல்லை. 

கல்யாணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி?
1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது 4வது விதி.
5. அடுத்த வித... ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.
6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.
7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.
9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.
10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.
12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள். அனைத்துக் காரியங்களும் தடையின்றி இனிதே நிறைவேறிட இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

படித்த இட்ம்:http://yessugumaran.blogspot.in/2014/02/

Your Destiny and Scientific Hand Analysis

Posted by ss Tuesday, October 17, 2017 0 comments

| edit post

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates