Followers

Powered by Blogger.

ஹோமியோபதி விவசாயம்.,3
(முந்தைய கட்டுரையின் செழுமை வடிவம்)
பயிர்களுக்கு வரும் முக்கியமான பேன் போன்ற பூச்சிகள் தான் அவை ஒருமாதிரி பிசுபிசுவென இலைகளை ஆக்கி மாவு போன்ற பொருளை சுரந்து பயிர்த்தண்டை பாழாக்கி விடும். இவற்றுக்கு அவற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் ஹோமியோபதியில் சிறப்பான நிவாரணிகள் உள்ளன.
ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்தும் முறை:
பயிர்களுக்கு தேவையான பொருத்தமான மருந்தை திரவ வடிவில் (DILUTION) அல்லது இனிப்பு உருண்டை வடிவில் (GLOBULES) வாங்கி வைத்துக் கொள்ளவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 5 சொட்டு அல்லது 5 உருண்டைகள் போட்டு நன்றாக கலக்கவும், குச்சியோ அல்லது கரண்டியோ கொண்டு நன்கு ½ மணி நேரம் கலக்கவும். கலக்கியபின் தெளிப்பான் உதவியுடன் பயிர்களுக்கு தெளிக்கலாம்;அல்லது சொட்டுநீர்ப்பாசானமாக இருந்தால் பாசான நீரில் கலந்து விடலாம்.
மருந்து ஒரு முறை தெளித்தால் அல்லது நீரில் பாய்ச்சினால் போதுமானது, பயிரின் நிலைமையை பொறுத்து இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்கலாம்.
பயிரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மீண்டும் மருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை; முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் மீண்டும் அதன் அறிகுறிகளை உற்று கவனித்து அதற்கு பொருத்தமான மருந்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டி வரலாம்.
பேன் தொல்லையுடன் இலை சுருண்டு போதல்,/பூ சுருண்டு போதல், ஒட்டக்கூடிய வகையான சுரப்புகள் உள்ள நோய்த் தன்மைக்கு சிமிசிபுகா (Cimicifuga) 30 ஓர் அருமையான மருந்து.
பேன் தொல்லையுடன் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட(அதாவது பராமரிக்காமல் அல்லது தண்ணீர் விடாமல் விடப்பட்ட) அல்லது அதிக உரமூட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அல்லது தாவரங்களுக்கு நேட்ரம் குளோரேட்டம் (Natrium chloratum) 30 .
பேன் தொல்லையுடன் பலவீனமான குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்களுக்கு சோரினம் (Psorinum) 200 முக்கிய மருந்து
பேன் தொல்லைக்கு மிக முக்கியமான மருந்து அதனுடன் காயங்களாலோ,அடிபட்டதாலோ பலவீனமடைந்த தாவரங்களுக்கு ஸ்டாபிசாக்ரியா Staphysagria 30 அல்லது200

LikeShow more reactions
Comment
.


விவசாயிகளின் தோழன்
ஹோமியோபதி சிலிக்கா
எந்த ஹோமியோ மருந்து பலவீனமான தாவரங்களை பலமாக்குகிறது? பாலைவனத்தை சோலைவனமாக்குகிறது? களைகளை களையும் மருந்தாக.. நீர் தேங்காமல் வறண்டிருக்கிற நிலத்தை ஈரப்பதமான வளமான மண்ணாக்கும் மருந்து எது?????
சிலிக்கா (எ) சிலீஜியா
Silicea!
வேறெந்த மருந்தும் இவ்வளவு குறைவான விலையில் பலவிதமான பயிர்களின் பிரச்சனைகளையோ, பலவிதமான மண் பிரச்சனைகளையோ தீர்க்கமுடியாது.
சிலிக்கா(SILICA) என்பது வெறும் மணல் அது ஹோமியோபதி முறையில் வீரியப்படுத்தப்பட்டு இலத்தீன் பெயரான சிலீஜியா(SILICEA) என்று அழைக்கப்படுகிறது.
சிலிக்காவின் பயன்களை ஒரு முறை அறிந்த எந்த ஒரு விவசாயியும் தனது தோட்டத்தில் சிலிக்கா இல்லாமல் விவசாயம் செய்யமாட்டார்.
ஏன் என்று பார்ப்போம்.
விவசாயத்தில் சிலிக்காவின் பயணம் எப்படி தொடங்கியது?
ஹோமியோபதியில் சிலிக்கா ரொம்ப காலமாகவே மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் வரக்கூடிய நோய்களைத் தீர்க்க பயன்பட்டு வருகிறது, ஆனால் பயிர்களுக்கும் மண் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இதன் பயன்பாடு அறியப்படாதது மட்டுமல்ல புதியதும் ஆகும்.
மனிதர்களுக்கு (விலங்குகளுக்கும் கூட) எதற்கு பயன்படுகிறது சிலிக்கா?
தன்னம்பிக்கையின்மை,வறண்ட தோல், பலவீனம், சோர்வு, தாமதமான வளர்ச்சி, புண் சீக்கிரம் ஆறாமை,நோய்த்தொற்று மற்றும் சீழ்க்கட்டிகள்,செழிப்பின்மை.
இந்த குறிகள் பயிர்களிலும் நிலத்திலும் ஒத்திருந்ததை கண்ட ஹோமியோபதியர் சிலிக்காவின் பரந்து அகன்ற பயனை உணர்ந்தனர்.
தோட்டக்கலை மற்றும் விவசாயத்தில் சிலிக்காவினது போன்ற நோய்க்குறிகள் சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டன.இது விவசாயத்தில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு.இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகளை திருப்ப இது ஓர் அத்தியாவசிய தேவை.
பயிர்களின் ஆரோக்கியம் மற்றும் பலத்திற்கு சிலீஜியா:
இயற்கையாக சிலிக்கா மண்ணில் இல்லாமல் தாவரங்களால் நிற்கவோ அல்லது வளரவோ முடியாது. சிலிக்கா ஒவ்வொரு செல்லிலும் திசுவிலும் வேலை செய்து பலத்தையும், உறுதியையும் கொடுக்கிறது.இது செல்களில் நடைபெறும் எல்லா நடைமுறைகளையும் சீராக்குகிறது, மற்றும் உடையக்கூடிய நிலையில் இருந்தாலும் இது ஆரோக்கியமான எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. மண்ணில் சிலிக்கா சத்து இல்லாமல் இருந்தாலோ அல்லது தாவரங்களால் சிலிக்காவை கிரகிக்க முடியாமல் போனாலோ ஹோமியோபதி சிலிக்கா இந்த உலகத்தையே மாற்றுகிறது.
பலவீனமான மெலிந்த மற்றும் நீண்டு களைபோல வளரும் தாவரங்கள்,பூஞ்சைத்தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சாத்தியமுள்ள தாவரங்கள் எல்லாம் சிலிக்கா தெளிக்கப்பட்ட சில நாட்களிலே உறுதியாகவும் தீவிரமான பலத்துடனும் வளர்வதை கண்டு வியப்பில் ஆழ்வீர்கள்.
சிலீஜியா மண்ணுக்கான சத்து மருந்து
உண்மையில் மண்ணில் அரிதாக சிலிக்கா இல்லாமல் இருந்தால் சிலிக்காவை அப்படியே மண்ணுக்கு ஊட்டச்சத்தாக கொடுப்பதோ, துணை உரமாகக் கொடுப்பதோ கடினமானது- அதே நேரத்தில் ஹோமியோபதியில் வீரியப்படுத்திய சிலிக்கா தெளித்தபின் பயிர்களின் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல் மண்ணில் உள்ள சிலிகாவை உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. இதற்கும் மேலாக மண்ணின் அயனியாக்கத்தில் வினை புரிந்து அதை மாற்றி மண்ணானது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
நாற்று நடுதலால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் பிற அதிர்ச்சிகளை தடுக்கிறது சிலீஜியா
நாற்று பிடுங்கி ஓர் இடத்தில் இருந்து வேறொரு இட்த்தில் நடுவது, பதியன் இடுவது,கிளைகளை வெட்டி நடுவது,இடம் மாற்றம் செய்யும்போது வேருக்கு ஏற்படும் பாதிப்பு அல்லது கடுமையான தட்பவெப்ப மாற்றங்கள் இவற்றால் தாவரங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு அதனால் வளர்ச்சி தடைபெறலாம்,அல்லது வெய்யிலில் வாடிப்போகலாம்,இலைகள் உதிர்ந்துபோகலாம்,அல்லது பயிரே காய்ந்து இறந்து போகும் ஆபத்தும் ஏற்படலாம்.
ஒரே ஒரு முறை சிலீஜியாவை நடவுக்கு முன்போ அல்லது பின்னரோ தெளித்தால் அது பயிரை பலமாக்கும் அதிர்ச்சியில் இருந்து விடுவிக்கும், சோர்வைத் தடுக்கும்.
பூச்சிகளுக்கும் நோய்களுக்கும் எதிராக தாவரங்களை பலப்படுத்துகிறது சிலீஜியா
ஹோமியோபதி சிலிக்கா தாவரங்களை பூஞ்சைகள்,காளான்கள் ,பூஞ்சைக்காளான்,வேர்க்கரையான் மற்றும் சில அரித்துத் தின்னும் காளான்களிடமிருந்தும் பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் பூச்சிகளிடமிருந்தும்(அசுவினி,மொக்குப்புழு,நாரத்தைப்பூச்சிகள்,பழ வண்டுகள்) பயிர்களை பாதுகாக்கிறது. ஆனால் கவனம் ஒரே முறை மட்டும் தான் தெளிக்க வேண்டும்.
ஹோமியோபதி விவசாயத்தந்தை வைகுந்தநாத் தாஸ் கவிராஜ் அவர்கள் தன்னுடைய புத்தகமான HOMOEOPATHY FOR FARM AND GARDEN இல் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். ஒரு மரக்கன்று ‘நுனியில் தொடங்கி அடி வரை கருகும் நோயில்’ (dieback disease)பாதிக்கப்பட்டு முக்கால்வாசி பட்டை கருகிவிட்டது. ஒரு பகுதி பட்டையில் மட்டும் பச்சையம் இருக்கிறது,அதுவும் தளர்ந்து வறண்டு மடியும் தருவாயில் இருந்தது.
சிலீஜியா கொடுத்த ஒரு நாளிலே பட்டைகளில் பச்சையம் துளிர்த்து நடுத்தண்டுடன் ஓட்ட தொடங்கியது, அடுத்த ஒரு வாரத்திலே அதிசயம் நிகழத் தொடங்கியது, மரம் புது இலைகளுடன் துளிர் விட ஆரம்பித்தது.நுனியிலிருந்து கருகுதல் நோயானாது உலகின் பல நாடுகளில் கட்டுப் படுத்த முடியாத நோயாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் அல்லது தீர்க்கும் இந்த முறையானது வரவேற்கக்கூடிய செய்தியாகும்.
விதையின் முளைப்புத் திறனை தூண்டுகிறது சிலீஜியா:
விதைகளை விதைப்பதற்கு அரை மணி நேரம் முன்பு சிலீஜியா கரைத்த கரைசலில் விதைகளை முக்கி அரை மணி நேரம் வைத்து எடுத்து பின் விதைத்தால் அது பல வருடங்களாக பாதுகாத்த விதையாக இருந்தாலும் அதன் முளைப்புத் திறனை தூண்டுகிறது சிலீஜியா. சிலீஜியா கரைசலில் முக்கி எடுக்கப்பட்ட விதையானது, விதைத்த அடுத்த சிலநாட்களிலே உறுதியான வேர்களுடன் தளிர் விடத் தொடங்கும், பயிரும் செழிப்பாக வளரும். அது மட்டுமில்லாமல் நோய்த்தாக்குதலில் இருந்து தடுப்பதுடன் பூச்சிகளின் தாக்குதலையும் குறைக்கிறது.
சிலீஜியா அழகான மற்றும் விருத்தியுடைய மலர்களை உற்பத்தி செய்கிறது:
ஒரு முறை மலர்மொட்டுகள் மீது சிலீஜியா தெளித்து விட்டால் அது மலரும் பூக்களின் அளவையையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்
சிலீஜியா களையை ஒழித்து நிர்மூலமாக்குகிறது:
வருடாந்திர களைப் பிரச்சனைகளை பாதுகாப்பாக களைகிறது சிலீஜியா. களைச்செடிகள் பூ வைக்கும் தருணத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறையாக இரண்டு தடவை களைச்செடிகளின் பூக்களின் மீது மட்டும் கவனமாக தெளித்து விடுங்கள்.பின் அந்த பூக்கள் முதிராமலே உதிர்ந்து விடும்,அடுத்த வருடத்திற்கான களைச்செடியின் விதையும் இல்லாமல் போய்விடும்.
இது தான் ஹோமியோபதி ..ஒரு முறை தெளித்தால் அது மருந்தாக வேலை செய்யும்.அதே பல தடவை தெளித்தால் அதுவே நோயை உண்டு செய்யும்.இது ஹோமியோபதி தத்துவம்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..இந்த பழமொழி ஹோமியோபதிக்கும் பொருந்தும்.
சிலீஜியா காய் நன்கு பிடிக்க செய்கிறது மற்றும் பழங்கள் உதிர்வதை தடுக்கிறது :
பூக்கும் தருவாயில் ஒரே ஒரு முறை சிலீஜியா தெளித்து விட்டால், அது செடியோ, மரமோ அது நன்கு காய் பிடிக்க உதவுகிறது, பிஞ்சு உதிர்தலை தடுக்கிறது. பழங்கள் பிஞ்சிலே உதிர்ந்து விடாமல் உறுதியாக இருக்க உதவுகிறது.
ஆனால் எச்சரிக்கை.! ஒரே தடவை மட்டும் தான் தெளிக்க வேண்டும், நிறைய தடவை தெளித்தால் எல்லாம் தலைகீழாகிவிடும். களைச்செடிகள் அழிவது போல் அறுவடைக்கு முன்பே பயிர்களும் அழிந்துவிடும்.
சிலீஜியா மண்ணை வளமாக்கி நல்ல நீர் தேக்கியாக, சத்தை உறிஞ்சக்கூடிய வகையில் மாற்றுகிறது.
சிலவகையான நிலங்கள் நீரை ஏற்காது புறந்தள்ளிவிடும். சில ஓடைமண், களிமண் நிலங்கள்,சரளைமண் நிலங்கள்,புழுதிமண் வயல்கள் மற்றும் சில கரிம தாதுக்கள் அதிகம் கொண்ட மண் எல்லாம் நீரை உறிஞ்சாமல் ஓடவிட்டுவிடும். நீரை கிரகிக்கும் தன்மை இவ்வகையான நிலங்களுக்கு குறைவு.மழை பெய்தாலும் நீர் பாய்ச்சினாலும் இவ்வகையான நிலங்களில் நீர் தேங்காது ஓடிவிடும், ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு தக்க வைக்க இந்த வகையான நிலங்களுக்கு திறன் இருக்காது. இதனால் இந்த நிலங்களில் விளையும் பயிர்கள் நீரின்றி வறண்டு கிடக்கும்.
சிலீஜியா இதை மாற்றும். ஒரு முறை சிலீஜியா பாய்ச்சினால் அல்லது தெளித்து விட்டால் போதும் மண்ணின் தன்மையை மாற்றிவிடும்,பின்னர் மந்திரம் செய்தாற்போல் அந்த மண்ணானது நீரை கவர்ந்து ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும், நீர் உறிஞ்சு திறனும் மேம்படும்.
குறிப்பு:
சிலீஜியா மனையாக மாற்றப்பட்ட அல்லது கெட்டிதட்டிப்போன நிலங்களை சீர்படுத்தாது, இவ்வகையான நிலங்களை முதலில் உழுது செம்மைப்படுத்த வேண்டும் பின்னரே சிலீஜியா பாய்ச்ச வேண்டும்.
பாலைவனத்தை சோலைவனமாக்கும் சிலீஜியா:
சிலீஜியாவின் குறிப்பிடத்தக்க திறன் என்னவென்றால் குறுகிய காலத்தில் பாலைவனத்தை சோலையாக்குவதுதான்.
ஒரு முறை சிலீஜியா பாய்ச்சப்பட்டால் மழை பெய்யா காலங்களில் கூட
6 வாரம் வரை ஈரப்பதத்தை சேமிக்குமளவுக்கு மண்ணை பக்குவப்படுத்திவிடும்.
சிலீஜியா பாய்ச்சிய பின் மக்கிய குப்பை மற்றும் மாட்டுச்சாணம் போன்ற இயற்கையாக கிடைக்கக்கூடிய உரங்களையும் போட்டால் மண் இன்னும் வளம்பெறும்.
கவிராஜ் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது 1990களில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அடிக்கடி குறிப்பிடுவார். மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் கவிராஜூம் அவரது நண்பர்களும் ஒரு பண்ணையில் மரம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நிலமானது கரடுமுரடாக முற்றிலும் வறண்டு முழுதும் மணலாக இருந்தது.
கவிராஜ் அவர்கள் அந்த நிலம் முழுதும் சிலீஜியாவை தெளித்துவிட்டு 6 வாரங்கள் கழித்து மரம் நடலாம் என திரும்பி விட்டார்.
6 வாரங்கள் கழித்து பல நூறு மரக்கன்றுகளுடன் வந்த நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம்! முற்றிலும் வறண்ட மணல் மேடு இப்போது பசுமையாக ஈரப்பதத்துடன் ஆங்காங்கே சில பயிர்கள் துளிர் விட்டிருந்தது. அனைத்து மரக்கன்றுகளையும் நட்டுவிட்டு அடுத்த 6 வாரங்களுக்கு பிறகு வந்து பார்க்கும்போது இந்த மண்ணில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை விட அதிகமாக எல்லா மரக்கன்றுகளும் நன்கு உறுதியாக, செழிப்பாக மளமளவென்று வளர்ந்திருந்தன.இவை அனைத்தும் நடந்தது ஒரு முறை மட்டும் தெளிக்கப்பட்ட சிலீஜியாவால். இதுவரை இப்படி வறண்ட நிலம் பசுமையானதாக மாறி என் வாழ்நாளில் கண்டதில்லை என கவிராஜ் குறிப்பிடுகிறார்.
புல்லே முளைக்காத மேட்டாங்காடுகளையும் பசும் புல்வெளியாக மாற்றும் திறன் சிலீஜியாவுக்கு உண்டு என கவிராஜ் குறிப்பிடுகிறார்
“சிலீஜியா பசுமைப்புரட்சியானது நடைமுறைக்கு வந்தால் மேலும் பல பாலைநிலங்கள் சாகுபடி நிலங்களாக மாறும், அவை கார்பன் டைஆக்சைடு உள்வாங்குதலை மேலும் 30லிருந்து 40% வரை அதிகப்படுத்தி அதன்மூலம் கார்பன் சுழற்சியை ஒழுங்குபடுத்தி உலக வெப்பமயமாதலை கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமல்லாமல் வறட்சியால் பஞ்சம்,பட்டினி வராது,அனைவருக்கும் உணவு நிச்சயம் கிடைக்கும். பட்டினியால் இறப்பு நிகழாவண்ணம் இந்த உலகம் மாறும்.இப்பூமி சொர்க்கமாக மாறும்” என கவிராஜ் உறுதியாக கூறுகிறார்.
எச்சரிக்கை:
எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அது அமிர்தமே ஆனாலும் நஞ்சு தான் என்பது சிலீஜியா விஷயத்தில் மிகச்சரியானது. ஏனெனில் ஹோமியோபதியை பயன்படுத்தும் விவசாயிகள் விளைச்சலை அதிகரிக்கும் ஆசையில் திரும்ப திரும்ப தேவையற்ற வகையில் அளவுக்கதிமாக சிலீஜியாவை கொடுத்து விட்டு மோசமான எதிர்விளைவுகளை கண்டு நம்மிடம் குறை சொல்வார்கள். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமானால் திடகாத்திரமான மரத்திற்கு சிலீஜியாவை திரும்ப திரும்ப கொடுத்தால் மரமானது உருக்குலைந்து பூச்சித்தாக்குதலுக்கு ஆளாகி சிலீஜியாவின் எந்த நோய்க்குறிகளை குண்ப்படுத்துமோ அந்த நோய்க்குறிகள் அனைத்தும் அந்த மரத்தை தாக்கும்.
(இந்த நிகழ்வுகள் இதன் தத்துவமான நிரூபண விதி பற்றி விரிவாக ஹோமியோபதி தத்துவத்தை விவரிக்கும் புத்தகமான ‘Organon of Medicine’ இல் Dr Samuel Hahnemann சொல்லியிருக்கிறார்.)
இதுவே தான் விதை மற்றும் காய்கனி விஷயத்திலும் நடக்கிறது.ஒருமுறைக்கு மேல் பூக்கும் பருவத்தில் சிலீஜியா தெளிப்பதால் காய்,விதை உற்பத்தியாவதற்கு பதிலாக நின்றுவிடும். திரும்ப திரும்ப தெளிப்பது களைச்செடிகளை ஒழிப்பதற்கு வேண்டுமென்றால் நன்மை பயக்கும்,ஆனால் வளர்ந்துவரும் காய்கனிகளுக்கு விரும்பத்தக்க விளைவைக் கொடுக்காது.
மேலும் இறுதியாக சிலீஜியா எப்படி பாலையை சோலையாக்குமோ அதுபோல அதிகப்படியாக கொடுத்தால் சோலையையும் பாலையாக்கிவிடும். ஒரு தடவை,ஓரே தடவை அதுவே பசுமையாக்க போதுமானது- அதிக அளவு ஆபத்தானது.எவ்வளவு குறைவான அளவில் மருந்தை தருகிறோமோ அந்த அளவுக்கு நல்லது. அப்போது மட்டுமே ஹோமியோபதி நன்றாக வேலை செய்யும்.
எப்படி பயன்படுத்துவது சிலீஜியாவை?
பொதுவான வீட்டுத்தோட்ட உபயோகத்திற்கு சிலீஜியா 6c ஒரு உருண்டையை 200மில்லி நீரில் கலந்து நன்கு பலம் கொண்டவரை குலுக்கவேண்டும்,அதற்கு பிறகு செடியிலோ அல்லது மண்ணிலோ ஈரமாகும் வரை தெளிக்கவேண்டும்.அவ்வளவுதான் எளிது.!
விவசாயிகள் உபயோகத்திற்கு தண்ணிரின் அளவையும் மருந்து உருண்டையின் அளவையையும் தேவைக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.ஒன்றே நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,ஒருமுறை மட்டுமே தெளிக்க வேண்டும்.
களைச்செடிகளை அழிக்க மட்டும் இரண்டு அல்லது மூன்று முறை அதுவும் கவனமாக களைச்செடிகள் மேல் மட்டும் படும்படியாக தெளிப்பது அவசியம்.
விதைகளின் முளைப்புத்திறனை ஊக்குவிக்க 20 நிமிடங்கள் சிலீஜியா கலந்த கரைசலில் ஊறவைத்தலே போதுமானது.
சாராம்சம்:
சுருக்கமாக சொல்வதானால் ஒரு வேளை மட்டும் கொடுக்கப்பட்ட சிலீஜியா மண்ணில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தி அதன் உற்பத்தித்திறனையும் அதிகரித்து பயிரின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனைக் காக்கிறது.
மேலும் சிலீஜியாவால் நிலங்களில் காணப்படும் மாங்கனீசு நச்சுத்தன்மையை முறிக்கிறது,மண்ணின் அயனியாக்கத்தை மாற்றுகிறது;
ஈரப்பதத்தை தக்க வைக்கிறது;
முளைப்புத்திறனை ஊக்குவிக்கிறது;
மழைப்பொழிவு குறைவான இடங்களில் உள்ள தாவரங்களையும் வாழவைக்கிறது;
பலவீனமான தாவரங்களை பலமுள்ளதாக்குகிறது;
மரங்களை உறுதியாக்கி மரத்தண்டை தடிக்கவைக்கிறது அதன்மூலம் நுனிக்கருகல் நோயிலிருந்து காக்கிறது;
பயிரின் நோயெதிர்ப்புச்சக்தியை அதிகப்படுத்தி பூச்சிகளிடமிருந்தும் நோயிடமிருந்தும் காக்கிறது;
பெரிதான மற்றும் அதிகப்படியான மலர்களையும் பழங்களையும் காய்களையும் தருகிறது;
உடையும் தண்டுகள் மற்றும் இலைகளுக்கு பதிலாக உறுதியான தண்டுகளையும் இலைகளையும் தருகிறது;
மரப்புற்றுநோய்,கசப்பு நோய்,காயங்கள்,கத்தரித்துவிடுதலால் ஏற்படும் ஆறாத இரணங்கள்,இடித்தாக்குதல் மற்றும் செயற்கையான சேதங்களில் இருந்து விரைவில் குணமாகி மீண்டுவர தூண்டுகிறது;
ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு பிடுங்கி நடுதலால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் உளைச்சலில் இருந்து மீண்டு வர உதவுகிறது;
சிலீஜியாவின் குறிப்பிடத்தக்க இந்த அருஞ்சாதனைகள் தாவரங்களுக்கு பொருந்தும் அதேவேளை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொருந்தும் .என்ன சிலீஜியாவின் குறிகளுக்கு ஒத்து இருக்க வேண்டும்.
விவசாயத்தில் வெற்றி பெற ஒரே வழி தாவரத்தின் நோயும் மருந்தின் குணங்குறிகளும் ஒத்துபோகிறதா என்பதை அறிவதே. இதை புரிந்து கொண்டால் நீங்கள் இயற்கையை புரிந்து கொள்கிறீர்கள்.,ஹோமியோபதியை புரிந்துகொள்கிறீர்கள்.
முடிவாக உங்கள் தாவரங்களுக்கு இது போல் பிரச்சனைகள் இருப்பின் சிலீஜியாவை பயன்படுத்திப் பாருங்கள். விளைவு அற்புதமாக இருக்கும்.
மேலும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை எங்களிடம் கேளுங்கள்.
credit to:
*homeopathyplus .com
*ஹோமியோபதி விவசாயத்தந்தை வைகுந்தநாத் தாஸ் கவிராஜ் அவர்களின் புத்தகமான HOMOEOPATHY FOR FARM AND GARDEN
#drprema
#drcharuvagan
agrohomoeopathy whatsapp team
aproch dindigul

https://www.facebook.com/BalasubramanianPazhaniappan?hc_ref=NEWSFEED

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates